search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய திட்டம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.

    இதைத்தொடர்ந்து நீதி மன்ற உத்தரவின்படி காலி மது பாட்டில்களை மதுக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது பரீட்சார்த்த முறையில் நீலகிரி, பெரம்பலூர், கோவை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

    அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் விற்கும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மீண்டும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தொடங்கப்படும்" என்றார்.

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை நகரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • வடசென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் விட்டுச் சென்ற முக்கியமான அடையாளங்கள் உள்ளன.

    தென் இந்தியாவின் வாசல் எனப்படும் சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க பகுதி வடசென்னை.

    வடசென்னை பாரம்பரியச் சிறப்பு மிக்கது. அகில இந்தியாவிலும் முதல் நவீன நகரம் உருவானது வடசென்னையில் தான். இது உருவானது 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி. அன்றுதான் விஜயநகர சாம்ராஜ்யத்திடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி, இப்போதைய வட சென்னையில் மதராசபட்டினம் எனும் கிராமத்தை விலைக்கு வாங்கியது.

    இந்த நாள் சென்னை நகரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உருவாக்கத்தில் பங்காற்றிய பாரி, பின்னி, ஆர்பத்நாட் முதலான பெயர்கள் வடசென்னையின் வாழ்வோடு இணைந்தவை. சென்னையின் பல பாரம்பரியக் கட்டிடங்கள் வடசென்னையில்தான் உருவாயின. புனித ஜார்ஜ் கோட்டை, உயர் நீதிமன்றம், ஆண்டர்சன் தேவாலயம், ஒய்.எம்.சி.ஏ, மெட்ராஸ் வங்கி (இப்போது இந்திய ஸ்டேட் வங்கி), அஞ்சலகம் முதலான கட்டிடங்கள் வடசென்னையின் பழம் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

    வடசென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் விட்டுச் சென்ற முக்கியமான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள கல்மண்டபம் மார்க்கெட் 1818-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. வடசென்னை எல்லா பிரிவுகளையும் சார்ந்த இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா மக்களும் வாழும் இடமாகும். எனினும் இந்த பகுதி மற்ற இடங்களை காட்டிலும் பிந்தங்கி இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது அந்த நிலை விரைவில் மாறப்போகிறது.

    சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை பகுதி அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பகுதியை போல வட சென்னை பகுதியை உருவாக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக 'வட சென்னை வளர்ச்சி திட்டம்'என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்துக்காக ரூ.1000 கோடி 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என தமிழக அரசு அறிவித்து அதற்கான ஆயத்த பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

    வடசென்னையை மொத்தமாக உருமாற்றும் விதமாக பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வட சென்னையின் அடையாளமே மாற உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், பெரம்பூர், செம்பியம், மதுரவாயல், கொரட்டூர், அய்னாவரம், மாதவரம் மற்றும் சூரப்பேட்டை ஆகிய இடங்களில், 8 மாடிகளில் இருந்து, 35 தளங்கள் வரை வானளாவிய கட்டிடங்கள் உருவாக உள்ளன. இவை அனைத்தும் குடியிருப்பு வளாகங்களாக இருக்கும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பல மாடிக் கட்டிடக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 18 உயர்நிலை கட்டிடங்களில் இவையும் அரசு அனுமதிக்கு உள்ளன.

    வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தால் இந்த பகுதியில் 35 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட உள்ளது. முன்பு 10 தளங்கள்வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டி ருந்தன. பெரம்பூர், மாதவரத்தில் மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதியில் அதிகமானோர் வீடுகளை வாங்குகின்றனர். நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள காசிமேடு கடற்கரை மெரினாவுக்கு நிகராக நவீனப்படுத்தப்பட உள்ளது. காசிமேடு முதல் நெட்டுக்குப்பம் வரை உள்ள கடற்கரை இவ்வாறு அழகு படுத்தப்பட உள்ளது.

    வடசென்னையில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆரோக்கியம் முதல் விளையாட்டு, போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. விளையாட்டு மைதானங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது. மெரினாவை போல விதவிதமான உணவுகள், குதிரை சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கும் வர இருக்கிறது. நீரூற்று நடைபாதைகள், மீன் சிலை உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட உள்ளது. மொத்தத்தில் வட சென்னை வளர்ந்த சென்னையாக விரைவில் மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தண்டையார்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது. இந்த நவீன விளையாட்டு வளாகத்தில் குத்துச்சண்டை, கபடி, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தனி மைதானம் அமைக்கப்படவுள்ளது.

    2 கபடி மைதானம், ஒரு சிலம்பம் மைதானம், 2 குத்துச்சண்டை மைதானங்கள், இறகுப்பந்து, கூடைப்பந்து, ஓடுதளம், ஸ்கேட்டிங், கைப்பந்து, கிரிக்கெட் பயிற்சி, ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், பெண்களுக்கான உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடம், விளையாட்டுக் கருவிகள் மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு இது அமைகிறது.

    இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமான துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டமும் வட சென்னையில்தான் அமைய உள்ளது. பெரிய தொழில் நகரம் பெரம்பூர் அமைந்திருப்பது வட சென்னையில்தான். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோகிளாஸ் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழும் பகுதி. மாதம் 10,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் என அனைவருக்குமான ஓரளவு பொருளாதார வசதிகள் நிறைந்த பகுதி பெரம்பூர். ஒருகாலத்தில், மூங்கில் காடுகளால் நிறைந்திருந்த பகுதியான இந்த இடம் சென்னையின் நவ நாகரீக அடையாளமாகப் பார்க்கும் அண்ணா நகர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுக்கு சவால்விடும் அளவுக்கு வளர்ந்து இருந்தது. வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், அந்த மக்களின் உணர்வுகளில் கலந்துள்ள பின்னி மில் இங்குதான் இருந்தது.

    இந்தியாவின் முதல் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் இங்குதான் உருவானது.

    பின்னி மில்லை விட பரப்பளவில் பெரிய சிம்சன் தொழில் நகரம், பெரம்பூரில் இயங்கி வருகிறது. பட்டாளம், புளியந்தோப்பு என்று பெரம்பூர் பகுதிகளை குட்டி குட்டி தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேம்பாடு அடையும் வகையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வட சென்னையின் அடையாளங்கள் மாற உள்ளன.

    • திருப்புவனம்-காளையார் கோவில் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் திருப்புவனம் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளின் தொடக்க விழா நடை பெற்றது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டங் களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 1993-ல் தொடங்கப்பட்டு 2017-வரை சிறப்பாக நடைபெற்று வந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4,315 சதுரடி பரப்பளவில் புதிதாக பல்நோக்கு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    அதேபோன்று திருப்பு வனம் அருகே உள்ள கீழராங்கியம் கிராமத்தில் மானாமதுரை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.41 லட்சம் மதிப்பீட்டில் என்.என்.498 திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    மேலும் இந்நிலையத்தில் எந்திரங்கள் நிறுவுவதற் கென கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய லிமிடெட் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எந்தி ரங்களும் நிறுவப்பட்டு உள்ளது.

    கிராம மக்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தி தந்த பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பழையனூர்-வல்லா ரேந்தல் சாலையில் பொது மக்களின் நீண்ட ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சிகளில் க 32 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 387 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிகளும், 234 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 72 ஆயிரத்து 86 மதிப்பீட்டில் பயிர் கடனுதவி மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 1 மாற்றுத்தி றனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவியும், பழையனூர் கிராமத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.67.66 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 12 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் கடனுதவியும், 14 பயனாளிகளுக்கு ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும் என மொத்தம் 653 பயனாளிகளுக்கு ரூ.6.5 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர் முரளிதர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஆவின் பொது மேலாளர் சேக்முகமதுரபீக், துணைப் பதிவாளர் (பால்வளம்) செல்வம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • ரெயில் நிலையங்களில் வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
    • தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.

    நாடு முழுவது ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரெயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த இத்திட்டம் வகை செய்யும்.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    ரெயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள் மற்றம் வணிக நிறுவனங்களை அமைப்பது உள்பட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றிருக்கும்.

    ரெயில் நிலையங்களில் தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை ரெயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புத்தகத்துடன் ரெயில் பயணத்திற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இந்த தகவலை மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் 'புத்தகத்துடன் ஒரு பயணம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மதுரை முதுநிலை கோட்ட ரெயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி, அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புத்தகத்துடன் ஒரு பயணம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட பிகானீர் வாராந்திர விரைவு ரெயில் குளிர்சாதன முதல் வகுப்பு பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து, அது மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் இன்று மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • புதிதாக குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
    • காங்கயம் நகரம் முழுக்க குடிநீா் விநியோகம் சீராகும்.

    காங்கயம்:

    காங்கயம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். வடிகால்கள் தூா்வாருதல், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 75 தீா்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதில் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் பேசியதாவது: - காங்கயம் நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான குடிநீா் விநியோகம் வழங்க புதிதாக குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், பழைய குடிநீா்க் குழாய்கள் அவ்வப்போது பழுதடைந்து, பின்னா் சரி செய்யப்பட்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 18 வாா்டுகளிலும் உள்ள அனைத்து குடிநீா்க் குழாய்களையும் அகற்றிவிட்டு புதிதாக குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.31 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நகா்ப்புற சீரமைப்பு மற்றும் புத்தொளிக்கான இயக்கத்துக்கு (அம்ருத் 2.0) விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

    இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், பணிகள் முழுவீச்சில் நடைபெற்று காங்கயம் நகரம் முழுக்க குடிநீா் விநியோகம் சீராகும் என்றாா்.

    கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் ம.திலீபன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா்செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா்மகேந்திரகுமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    ×