என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் சலுகையில் வாங்க நவம்பர் 2017-இல் டிரேட்-இன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், இந்த சேவை ஆன்லைனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனம் 2017 நவம்பர் மாதத்தில் டிரேட் இன் எனும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கேஷிஃபை மற்றும் Mi எக்சேஞ்ச் திட்டங்களுடன் இணைந்து Mi ஹோம் ஸ்டோர்களில் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
ஆஃப்லைன் விற்பனையில் எக்சேஞ்ச் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய Mi வலைத்தளத்தில் பிரத்யேக பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் ஐ.எம்.இ.ஐ. குறியீட்டை பதிவிட்டு தொகையை Mi கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சியோமி வழங்கும் தொகை ஏற்புடையதாக இருப்பின் வாடிக்கையாளர்கள் தங்களது ஐ.எம்.இ.ஐ. (IMEI) நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்ததும் எக்சேஞ்ச் தொகை Mi கணக்கில் சேர்க்கப்படும்.

சியோமி வழங்கும் கூப்பன் கொண்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கிட முடியும். இதற்கு புதிய ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்யும் போது எக்சேஞ்ச் குறியீடை பதிவிட வேண்டும். இறுதியில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் போது பழைய ஸ்மார்ட்போனினை வழங்க வேண்டும்.
பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய அவை ஒழுங்காக வேலை செய்வதுடன், எவ்வித சேதாரமும் இருக்கக் கூடாது. இத்துடன் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து ஸ்கிரீன் லாக் மற்றும் கணக்குகளையும் டிசேபிள் செய்ய வேண்டும். மேலும் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்ய அவை சியோமி பட்டியலில் இருப்பதோடு, வாடிக்கையாளர் ஒரு ஸ்மார்ட்போனினை மட்டுமே எக்சேஞ்ச் செய்ய முடியும்.
சியோமி வழங்கும் எக்சேஞ்ச் கூப்பன் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இந்த எக்சேஞ்ச் சலுகை ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் இதை கொண்டு எவ்வித அக்சஸரிகளையும் வாங்க முடியாது.
இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா?
புதுடெல்லி:
இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் சார்பில் வெளியாகி இருக்கும் சமீபத்திய அறிக்கையில் அதிவேக 4ஜி நெட்வொர்க் வழங்கும் நகரங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியா முழுக்க 20 பெரும் நகரங்களில் 4ஜி டவுன்லோடு வேகங்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் நவி மும்பை அதிவேக 4ஜி எல்டிஇ டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது.
நவி மும்பை சராசரியாக நொடிக்கு 8.72 எம்.பி (Mbps) 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னை இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நொடிக்கு 4.4 எம்.பி. (Mbps) வேகத்தில் இருந்து தற்சமயம் நொடிக்கு 8.52 எம்.பி (Mbps) வேகம் வழங்கியுள்ளது.

இவற்றை தொடர்ந்து நொடிக்கு 4 எம்.பி.-க்கும் குறைவான வேகம் வழங்கிய நகரங்களில் அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் நகரின் சராசரி வேகம் நொடிக்கு 3.5 எம்.பி.-யாக உள்ளது. அதிவேக 4ஜி டேட்டா வேகம் வழங்கிய நகரங்களின் டாப் 10 பட்டியலில் ஆறு நகரங்களில் தெற்கு அல்லது மேற்கு பகுதியை சேர்ந்தவையாக உள்ளன.
அதிவேக டேட்டா வழங்கிய இந்திய நகரங்களின் பட்டியலில் மும்பை, சென்னையை தொடர்ந்து கொல்கத்தா மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. கொல்கத்தாவில் சராசரியாக நொடிக்கு 8.46 எம்.பி. வேகம் வழங்கியுள்ளது. கொல்கத்தாவை தொடர்ந்து பெங்களூரு நொடிக்கு 7.17 எம்.பி. வேகம் வழங்குகிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில் இந்தியாவின் முன்னணி 20 நகரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டன.
சர்வதேச சந்தையில் எல்டிஇ சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவு காரணமாக ஏற்பட்டுள்ள அதிர்வலைகள் காரணமாக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய அப்டேட்டில் நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
பிளஸ் கோடுகள்:
கூகுள் மேப்ஸ் செயலியில் பிளஸ் கோடுகள் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் இந்தியவிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபா நியூமெரிக் கோடுகளின் முதல் நான்கு இலக்க எண்கள் பகுதியை குறிக்கும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. இதனுடன் கூடுதல் எண்களை பதிவிடும் போது குறிப்பிட்ட பகுதியின் சரியான இடத்தை சூம் செய்யும். பிளஸ் கோடுகளை மேப்ஸ் செயலியில் இருந்தபடியே உருவாக்கி அதனை அனைத்து வகையான குறுந்தகவல் சேவை மூலமாகவும் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.
மேலும் பிளஸ் கோடுகளை கூகுள் சர்ச் பாரிலும் பேஸ்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட இடம், கூகுள் மேப்ஸ் சேவையில் தானாக திறக்கும்.

முகவரி சேர்க்கலாம்:
கூகுள் மேப்ஸ்-இல் இதுவரை சேர்க்கப்படாத முகவரியை சேர்க்கும் சேவையை இந்த வசதி வழங்குகிறது. இந்த அம்சம் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் பின் வைத்து அதனை மற்றவர்கள் பார்க்கும் படி செய்ய முடியும். இந்த அம்சத்துடன் வெரிஃபிகேஷன் ஃபில்ட்டர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட் அட்ரெஸ்:
ஸ்மார்ட் அட்ரெஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் இடத்தின் அருகாமையில் இருக்கும் புகழ் பெற்ற அல்லது அனைவருக்கும் தெரிந்த இடங்களை காண்பிக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் குறிப்பிட்ட இடத்தின் அருகாமையில் சென்றிட முடியும்.

கூடுதல் மொழிகள்:
கூகுள் மேப்ஸ் செயலியில் ஆறு இந்திய மொழிகளுக்கான சப்போர்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் நேவிகேஷன் வசதியை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் தேட முடியும். முன்னதாக இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருந்தது.
கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழி சேர்க்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இணையத்தில் பல்வேறு மொழி பயன்பாடு மற்றும் பன்மொழி தகவல்களை ஊக்குவிக்கும் வகையில் கூகுல் ஆட்சென்ஸ் (AdSense) சேவையில் தமிழ் மொழி இணைக்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
கூகுள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையை கொண்டு தமிழ் மொழி தகவல்களை எழுதுபவர்கள் வருவாய் ஈட்ட முடியும். 2003-ம் ஆண்டு கூகுளில் ஆட்சென்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சேவையை கொண்டு கூகுள் இணையத்தளம், வலைத்தளம் உள்ளிட்டவற்றில் தகுதியான விளம்பரங்களை பதிவிட்டு, விளம்பரங்களை வழங்குவோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து, குறிப்பிட்ட தொகையை வலைத்தள உரிமையாளருக்கு கூகுள் வழங்குகிறது.
இதனால் கூகுளில் வலைத்தளம் மற்றும் வலைப்பக்கம் உள்ளிட்டவற்றில் தகவல் வழங்குவோர் வருவாய் ஈட்ட முடிந்தது. முன்னதாக தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் வலைத்தள நிறுவனங்கள் கூகுள் அல்லாத மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களை நாடும் நிலை இருந்து வந்தது.
அந்த வகையில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இருப்பது இணையத்தில் புழங்கி வரும் தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் வலைத்தள நிறுவனங்களுக்கு வருவாய் ஈட்ட வழி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இணையத்தில் தமிழ் மொழி பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி இணைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய அறிவிப்பின் படி தமிழ் மொழி தகவல்களை வழங்கி வரும் இணையத்தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களில் தமிழ் மொழி விளம்பரங்கள் இடம்பெறுவதை பார்க்க முடியும்.
சமீபத்தில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் பெங்காளி மொழி சேர்க்கப்பட்டது. ஏற்கனவே இந்தி, அரபிக், பல்கேரியன், சைனீஸ், க்ரோடியன், செக், தட்சு, தானிஷ், ஆங்கிலம், எஸ்தோனியன் மற்றும் பல்வேறு இதர மொழிகளுக்கு கூகுள் ஆட்சென்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறது.
மும்பை:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறது. அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில் சியோமி முதலிடம் பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் மீடியா ஆய்வு அறிக்கையின் ((CMR)) படி இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலம் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பெரிய சந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி வளர்ச்சிக்கும் மகாராஷ்ட்ரா மாநிலம் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் 13.7% விற்பனையை சியோமி பதிவு செய்திருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் மட்டும் சியோமி நிறுவனம் 31.2% ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் 15.3% ஸ்மார்ட்போன் விற்பனை செய்திருந்தது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர் 2017-இல் சியோமி சார்பில் திறக்கப்பட்ட Mi ஹோம் விற்பனை மையங்களும் சியோமி விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பையின் தானே பகுதியில் சியோமி Mi ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்டது.
சியோமி, சாம்சங் நிறுவனங்களை தொடர்ந்து விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் நிறுவனங்கள் மட்டும் நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனையில் 84% பங்குகளை வைத்திருக்கின்றன.
சைபர் மீடியா ஆய்வு நிறுவனம் மட்டுமின்றி கனாலிஸ் மற்றும் கவுன்டர்பாயிண்ட் போன்ற நிறுவனங்களும் 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டு நிலவரப்படி இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி முதலிடம் பிடித்திருப்பதாக அறிவித்திருந்தது.
ஆப்பிள் நிறுவன எதிர்கால ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதுவித சார்ஜிங் போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
தொழில்நுட்ப துறையில் புதுவித தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதோடு அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் ஆப்பிள் பெயர்பெற்ற நிறுவனமாக இருக்கிறது.
மல்டி-பின் போர்ட் முதல் ஹெட்ஹோன் ஜாக், கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை நீக்கி புதிய அம்சங்களை அறிமுகம் செய்த பெருமை ஆப்பிள் பெற்றிருக்கிறது. அந்த வகையில் எதிர்கால ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதுவித சார்ஜிங் போர்ட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் லைட்னிங் போர்ட் நீக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க காப்புரிமை வழங்கும் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் புதுவித சார்ஜிங் போர்ட் வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்சமயம் வழங்கப்படும் லைட்னிங் போர்ட்களில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்கள் தண்ணீர் மூலம் பாதிக்கப்படாமல் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கனெக்டர் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் செய்யும் படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வடிவமைப்பு யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டர்களிலும் ஆப்பிள் லேப்டாப் போர்ட்களிலும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் காப்புரிமை தான் என்பதால் இது ஆப்பிள் சாதனங்களில் இடம்பெற சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016-ம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 முதல் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. புதிய காப்புரிமைகளில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எதிர்கால ஆப்பிள் சாதனங்களை அதிகளவு தூசு இருக்கும் பகுதிகளிலும் தயக்கமின்றி சார்ஜ் செய்ய முடியும். இதுதவிர தற்போதைய ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளில் 70% போலியானவை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
ட்விட்டரில் உண்மையான செய்திகளை விட போலி செய்திகளே ட்விட்டரில் அதிகளவு பகிர்ந்து கொள்ளப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தின் மீடியா லேப் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2006 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சுமார் முப்பது லட்சம் பேர் பகிர்ந்து கொண்ட 1,26,000 செய்திகளை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 70 சதவிகிதம் போலி செய்திகள் என்பதை கண்டறிந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளின் ஆதிக்கத்தை தெரிந்து கொள்ளும் முயற்சியாக நடத்தப்பட்ட ஆய்வு கட்டுரை அறிவியில் நாளேடு ஒன்றில் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை தடுக்க ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் மிகச்சிறிய நடவடிக்கைகளை அமெரிக்க சட்ட வல்லுநர்கள் குழு மற்றும் சர்வதேச அமைப்பினர் கண்கானித்து வருகின்றனர்.

ஆய்வில் உட்படுத்தப்பட்ட செய்திகளை ஆறு வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரிவுகளிலும் உண்மை செய்திகளை விட போலி செய்திகளை சமூக வலைத்தளவாசிகள் அதிகளவு பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான செய்திகள் தீவிரவாதம், இயற்கை பேரழிவு மற்றும் வணிகம் சார்ந்த செய்திகள் இடம்பெற்றிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2012 மற்றும் 2016 அமெரிக்க தேர்தல்களின் போது போலி செய்திகள் அதிகளவு பகிர்ந்து கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆட்டோமேட்டெட் கணக்குகளில் இருந்து சமஅளவு உண்மை செய்திகளும், போலி செய்திகளும் ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் போலி செய்திகளை பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணிகளாக சமூக வலைத்தளவாசிகள் இருந்துள்ளனர்.
தற்போதைய ஆய்வு ட்விட்டர் சார்ந்த தகவல்களை கொண்டது தான் என்றாலும், இது ஃபேஸ்புக் போன்ற இதர சமூக வலைத்தளங்களுக்கும் பொருந்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன குழந்தை செய்த காரியம் அவரது பெற்றோர் பயன்படுத்தி வந்த ஐபோனினை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்திருக்கிறது.
ஷாங்காய்:
ஷாங்காய் நகரில் வசிக்கும் இரண்டு வயது குழந்தை தனது தாயின் ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்துள்ளது.
தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டினை பதிவு செய்ததால் ஐபோன் 2.5 கோடி நிமிடங்கள், அதாவது 47 ஆண்டுகளுக்கு லாக் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போதும் சில நிமிடங்கள் அளவு ஐபோன் லாக் செய்யப்படும்.
ஷாங்காய் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் ஊழியர் இதுகுறித்து கூறும் போது, ஐபோனினை சரி செய்ய ஒன்று சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது ஐபோனில் உள்ள தகவல்களை முற்றுலுமாக அழித்து அனைத்து ஃபைல்களையும் ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தவறான பாஸ்வேர்டு பதிவு செய்து ஐபோன் 80 ஆண்டுகள் வரை லாக் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில் கல்வி சார்ந்த வீடியோக்களை ஆன்லைனில் பார்க்க ஐபோன் குழந்தையிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு மாதங்கள் காத்திருந்த நிலையில், ஐபோனினை மீட்டெடுக்க எவ்வித வழியும் இல்லை என ஐபோன் வைத்திருக்கும் லு தெரிவித்து இருக்கிறார்.
ஆப்பிள் தயாரிக்கும் அனைத்து ஐபோன் மாடல்களிலும் பாதுகாப்பு அம்சத்தை பலப்படுத்த இவ்வாறான அம்சங்களை வழங்குகிறது. இதனால் மென்பொருள் அல்லது வன்பொருள் மூலம் ஐபோன்களை மிக எளிமையாக யாரும் ஹேக் செய்ய விடாமல் பார்த்து கொள்ளும்.
ஆறு முறை தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் டிசேபிள் செய்யப்படும், பத்து முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.
அமேசான் வலைத்தளத்தில் ஆப்பிள் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச், மேக் உள்ளிட்ட சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஆப்பிள் ஃபெஸ்ட் எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. மார்ச் 6-ம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை மார்ச் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆப்பிள் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், மேக் மற்றும் ஆப்பிள் சாதனங்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் X 64 ஜிபி விலை ரூ.81,999 முதல் துவங்குகிறது. இதேபோன்று 256 ஜிபி ஐபோன் X விலை ரூ.93,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்ட விலையே அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்புக்கு பின் 64 ஜிபி ஐபோன் X விலை ரூ.95,390 மற்றும் 256 ஜிபி விலை ரூ.1,08,930 வரை அதிகரிக்கப்பட்டது. ஆப்பிள் ஃபெஸ்ட் விற்பனையில் ஐபோன் 8 விலை ரூ.10,000 குறைக்கப்பட்டு ரூ.54,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 256 ஜிபி விலை ரூ.4,000 குறைக்கப்பட்டு ரூ.69,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு மாடல்களுக்கும் கூடுதலாக ரூ.16,257 வரை எக்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் சிறப்பு விற்பனையில் 32 ஜிபி ஐபோன் 7 பட்டியலிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 32 ஜிபி ஐபோன் 7 மாடலை ரூ.41,999க்கு வாங்கிட முடியும். இத்துடன் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.16,257 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சற்று விலை குறைந்த மாடல்களை பொருத்த வரை ஐபோன் எஸ்இ 32 ஜிபி விலை ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, 32 ஜிபி ஐபோன் 6 விலை ரூ.23,999, 32 ஜிபி ஐபோன் 6எஸ் விலை ரூ.33,999 மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் 32 ஜிபி விலை ரூ.38,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் மாடல்கள் மட்டுமின்றி மேக்புக் ஏர் 13.3 இன்ச் மாடல் ரூ.19,570 வரை குறைக்கப்பட்டு ரூ.57,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. 9.7 இன்ச் ஐபேட் ப்ரோ ரூ.47,118க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ.14,782 வரை குறைவு ஆகும். இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ரூ.30,900-க்கு விற்பனை செய்யப்படுதிறது.
மேலும் அமேசான் சார்பில் தள்ளுபடி மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட சாதனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.17,900 மற்றும் ரூ.20,900 விலையில் வெளியிடப்பட்டன.
அந்த வகையில் இந்தியாவில் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் மற்றும் ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் முறையே ரூ.14,900 மற்றும் ரூ.18,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலையில் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000 மற்றும் ரூ.2000 வரை குறைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி அமேசான் மற்றும் பேடிஎம் வலைத்தளங்களில் நான்கு நாட்களுக்கு சாம்சங் சிறப்பு விற்பனை திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் அமேசான் மற்றும் பேடிஎம் வலைத்தளங்களில் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் சிறப்பு விற்பனையில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 உண்மை விலையில் இருந்து ரூ.8,000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை ரூ.59,900-க்கு வாங்க முடியும். இதேபோன்று கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.4000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் சேர்த்து ரூ.28,990க்கு வாங்கிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.2000 அமேசான் பே கேஷ்பேக் சலுகையுடன் ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேஷ்பேக் சலுகை மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்ட பத்து நாட்களில் கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.
எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வாங்கப்பட்ட சாதனங்களுக்கான கேஷ்பேக் அமேசான் பே கணக்கில் ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பேடிஎம் மால் தளம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 8 வாங்குவோருக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் கேஷ்பேக் சலுகை மார்ச் 8-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட டெலீட் அம்சத்திற்கு புதிய அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அனுப்பிய மெசேஜ்களை அழிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:
வாட்ஸ்அப் செயலியில் அதிக எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்ட டெலீட் அம்சம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.69 வெர்ஷனில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை 4,096 நொடிக்குள் (68 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகள்) அழிக்கும் வசதி கொண்டுள்ளது.
தற்சமயம் ஸ்டேபிள் பில்டுகளில் இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் அழிக்க வழி செய்கிறது. வாட்ஸ்அப் பீட்டாவில் சோதனை செய்யப்படும் புதிய அம்சத்திற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அம்சம் ஐபோன்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் பீட்டா சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WABetaInfo மூலம் புதிய அப்டேட் சார்ந்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் ஸ்டிக்கர் அம்சம் தானாக டிசேபிள் செய்யப்பட்டுள்ளது, மேலும் ஐகான்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்து இரண்டு புதிய அப்டேட்கள் வாட்ஸ்அப் பீட்டாவில் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.70 மற்றும் 2.18.71 என இரண்டு அப்டேட்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டதா என்பதை காட்டும் அம்சம் வழங்கப்பட்டு பின் நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
குறுந்தகவல் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டால், குறிப்பிட்ட குறுந்தகவலில் ஃபார்வேர்டு செய்யப்பட்டதை குறிக்கும் தகவல் இடம் பெற்றிருக்கும். ஃபார்வேர்டு செய்யப்பட்டதை குறிக்கும் இந்த அம்சம் ஸ்பேம் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் முதல் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதே அப்டேட்டில் ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டு இருக்கிறது, எனினும் இதனை பயன்படுத்த முடியாது.
ஸ்மார்ட்போன் விற்பனை குறித்து வெளியாகி இருக்கும் சமீபத்திய ஆய்வில் உலகம் முழுக்க பெரும்பாலானோர் இந்த வகை ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புவது தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விலை கடுமையாக உயர்ந்திருப்பது சமீபத்திய ஆய்வில் தெளிவாக தெரியவந்துள்ளது. இத்துடன் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்கள் ஏகபோகமாக வழங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கவே விரும்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலை நம் கணிப்புகளை கடந்து எக்கச்சக்கமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X விலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற சந்தைகளில் அதிகமாக இருந்த நிலையில், இந்தியாவில் இவை பெரும்பாலானோருக்கு இமாலய இலக்காக இருந்தது, இருந்தும் வருகிறது.
கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 8 விலை ரூ.66,120 துவங்கி டாப் எண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X விலை ரூ.92,430 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை 64 ஜிபி வேரியண்ட் ஐபோன்களுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018-இல் இந்த விலை மேலும் அதிகரிக்கப்பட்டு ஐபோன் X 64 ஜிபி விலை தற்தசயம் ரூ.95,390 என்றும் 256 ஜிபி விலை ரூ.1,08,930 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோப்பு படம்: ஐபோன் X
பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அதிசிறந்த அனுபவத்தை வழங்கினாலும், இவற்றின் விலை இமயம் போன்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனாலேயே வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்க காரணமாக அமைகிறது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே அறிக்கையில் கவுன்ட்டர்பாயிண்ட் நடத்திய ஆய்வில் உலகம் முழுக்க விற்பனை செய்யப்படும் பத்து ஸ்மார்ட்போன்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்டவை அல்லது பயன்படுத்தப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை விட பாதி விலையில் கிடைக்கும் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட புது ஸ்மார்ட்போன் போன்றே வேலை செய்கின்றன.
இவ்வாறான நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு லாபகமாக இருந்தாலும், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இவை எதிர்காலத்தில் ஆபத்தாக முடியலாம். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சரிந்து வரும் நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான தேடல் இணையத்தில் அதிகரித்திருக்கிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் தரம் மேம்பட்டு இருப்பதால் ஏற்கனவே பிரீமியம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் புதிய சாதனங்களை நாடும் போது அவர்களுக்கு கணிசமான தொகையை பெற்று தருகிறது.






