என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் வாடிக்கையாளர் அழைப்பு, காண்டாக்ட் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதை கண்டறிந்து தடுப்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஃபேஸ்புக் சேவையை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்துவோரின் கால் ஹிஸ்ட்ரி, காண்டாக்ட் தகவல்கள் மற்றும் எஸ்எம்எஸ் டேட்டா உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் சேகரித்து வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின் இத்தகவல்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் உறுதி செய்த நிலையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியானது.
இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரே நோக்கத்திலேயே பயனர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது என ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பயனர் தகவல்கள் எதுவும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு விற்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளப்படவோ இல்லை என்றும் ஃபேஸ்புக் தெளிவாக தெரிவித்துள்ளது.
இத்துடன் ஆன்ட்ராய்டு சாதனங்களின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கவில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை ஃபேஸ்புக் சேகரிக்கவில்லை என்றதும், ஃபேஸ்புக் சேகரிக்கும் தகவல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஃபேஸ்புக் நம்மிடம் இருந்து சேகரித்து இருக்கும் தகவல்களை பார்ப்போம்.,
- முதலில் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து https://register.facebook.com/download/ எனும் இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்
- இந்த ஆப்ஷனில் ஜெனரல் அக்கவுன்ட் செட்டிங்ஸ் மெனு காணப்படும், இதில் இருக்கும் Download a copy ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இனி ‘Download your Information' பக்கம் திறக்கும், இத்துடன் ‘Share My Archive' ஆப்ஷனும் காண முடியும். இதனை கிளிக் செய்ததும் உங்களது தகவல்களை டவுன்லோடு செய்யும் பணிகள் நடைபெற்று ‘Download Archive' ஆப்ஷன் திரையில் தோன்றும்.
- உங்களது தகவல்கள் அனைத்தும் .zip ஃபைல் வடிவில் டவுன்லோடு செய்யப்படும். இங்கிருந்து ஃபைல்களை எக்ஸ்டிராக்ட் செய்ய வேண்டும். இனி ப்ரோஃபைல் புகைப்படத்தின் கீழ் காணப்படும் HTML மற்றும் contact_info ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து உங்களின் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை பார்க்க முடியும்.
இந்த தகவல்களில் ஃபேஸ்புக்கின் விளம்பர பிரிவில் இருந்து பெற்று விளம்பரதாரர்கள் பயன்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

ஃபேஸ்புக் உங்களின் தகவல்களை சேகரிப்பதை தடுப்பது எப்படி?
ஃபேஸ்புக் உங்களது தகவல்களை டேட்டா சின்க் ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சேகரிக்கும். அந்த வகையில் டேட்டா சேகரிக்கப்படுவதை தடுக்க ஃபேஸ்புக் உங்களின் கான்டாக்ட்களுடன் சின்க் ஆவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு செய்ய ப்ரோஃபைல் புகைப்படத்தை (Profile Picture) கிளிக்செய்ய வேண்டும். இனி People மற்றும் Synced Contacts ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ஃபேஸ்புக் லைட் பயனர்கள் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ஆப் செட்டிங்ஸ் -- கன்டினிவஸ் கான்டாக்ட் அப்லோடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து சின்க் கால் மற்றும் டெக்ஸ்ட் ஹிஸ்ட்ரி ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.
இத்துடன் மெசன்ஜரில் அப்லோடு செய்யப்பட்டு இருக்கும் கான்டாக்ட்களை எடுக்க வேண்டும். இதனை மெசன்ஜர் செயலியின் இம்போர்டெட் கான்டாக்ட் பக்கத்தில் இயக்க முடியும். டெலீட் ஆல் ஆப்ஷனை கிளிக் செய்து மெசன்ஜரில் அப்லோடு செய்யப்பட்ட கான்டாக்ட்களை எடுக்க முடியும்.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டு காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் கூகுள் நிறுவனம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கலிஃபோர்னியா:
ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்கள் சமூக வலைத்தள பயனர்களின் தகவல்களை சத்தமில்லாமல் சேகரித்து அவற்றை தேர்தல் முறைகேடு போன்றவற்றிற்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பல்வேறு நாடுகளால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் உங்களின் தகவல்களை வைத்திருப்பதற்கு வருந்துவோர் கூகுள் நிறுவனத்திடமும் உங்களது வருத்தம் மற்றும் அதிருப்தியை தெரிவித்து விடுங்கள்.
ஃபேஸ்புக் விவகாரத்தை தொடர்ந்து கூகுள் தன்னை பற்றி எந்தெந்த தகவல்களை சேகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர் டைலன் கர்ரன் முடிவு செய்தார். டெவலப்பர் என்ற அடிப்படையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்கும் இது அதிர்ச்சியான தகவலாகவே இருக்கும்.
கூகுளிடம் தன்னை பற்றி தகவல்களை கேட்டறிந்து பெற்ற டைலன், கூகுள் தான் செல்லும் இடங்கள், ஒவ்வொரு இடங்களுக்கும் செல்ல எடுத்து கொண்ட நேரம், பொழுதுபோக்கு விபரங்கள், விருப்பங்கள், உடல் எடை, வருமானம், செயலிகளில் உள்ள தகவல்கள், அழிக்கப்பட்ட தரவுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்திருப்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்.
பயனர் தகவல்களை கொண்டு கூகுள் சந்தேகிக்கும் வகையில் எதையும் செய்வதாக நினைக்கவில்லை என்றும், மிக நெருக்கமாக டிராக் செய்யப்படுவது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என டைலன் தெரிவித்திருக்கிறார். மேலும் இத்தகைய தகவல்களை வைத்திருக்கும் எவ்வித பெரிய நிறுவனங்களையும் நம்புவது தவறான செயல். அவர்கள் பணம் பெற முயற்சிக்கின்றனர். ஒருகட்டத்தில் எவரேனும் பெரிய தவறு செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கூகுள் சேகரித்த தகவல்களை ட்விட்டர் மூலம் அம்பலப்படுத்திய டைலன் ட்விட்கள் சுமார் 1.5 லட்சம் முறை ரீட்வீட் செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் பல லட்சம் பேர் பயன்படுத்தும் கூகுள் சேவையில் அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.
எனினும் கூகுள் சேகரிக்கும் தகவல்கள் மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை, ஃபேஸ்புக் போன்று தகவல்கள் இதுவரை தவறாகவும் பயன்படுத்தப்படவில்லை. ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு அமெரிக்க தேர்தலில் பயன்படுத்தப்பட்டது அம்பலமானது.
இதுகுறித்து கேள்விக்கு கூகுள் செய்தி தொடர்பாளர் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் தங்களது ஆன்லைன் பிரைவசி விருப்பங்களை சீரான இடைவெளியில் பார்த்து அவற்றை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களை அவர்களுக்கு வழங்கும் நோக்கில் கூகுள் பிரைவசி விருப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் மை அக்கவுண்ட் (My Account) போன்ற ஆப்ஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் இந்த சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்போம் என கூகுள் சார்பில் வெளியாகியுள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் விவகாரத்தில் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மை அக்கவுண்ட் ஆப்ஷனில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் டிராக்கிங் ஹிஸ்ட்ரி (Tracking History) உள்ளிட்டவற்றை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் டிராக்கிங் வழிமுறைகளை ஆஃப் செய்யவும், அவற்றை அழிக்கவும் கூகுள் அனுமதிக்கிறது.

கூகுள் உங்களிடம் இருந்து சேகரித்து, நீங்கள் பார்க்க கூடிய தகவல்களின் விவரங்கள் பின்வருமாறு..,
- ஸ்மார்ட்போனில் கூகுள் சேவையை பயன்படுத்த துங்கியது முதல் நீங்கள் சென்ற இடங்களின் முழு மேப் தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றுடன் பார்க்க முடியும்.
- அனைத்து சாதனங்களில் நீங்கள் மேற்கொண்ட தேடல்களின் விவரங்கள்
- உங்களின் விளம்பர் ப்ரோஃபைல்
- நீங்கள் பயன்படுத்தும் செயலிகள்
- உங்களின் ஒட்டுமொத்த யூடியூப் ஹிஸ்ட்ரி
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் ஒரே ஃபைலாக வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்ய முடியும். இவற்றில் குறிப்பிட்ட தகவல்கள் ஏதேனும் வாடிக்கையாளர்கள் அழிக்க விரும்பினால், மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, டெலீட் அல்லது டிராஷ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து சேகரிக்கும் தகவல்களை கொண்டு ஒவ்வொருத்தருக்கும் ஏற்ப தனித்துவம் மிக்க தேடல் முடிவுகளை வழங்கவதோடு, அவர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் வலைத்தளத்தின் தனியுரிமை கொள்கைகளில் அந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத படி பொதுவெளியிலும், ஒப்பந்ததாரர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் இணைக்கப்பட்ட தளங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேவையை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களின் அனுமதியோடு அவற்றை பாதுகாப்பாக வைத்து, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற பயன்படுத்தும் என கூகுள் தனது சமீபத்திய பிரைவசி டூல் அப்டேட்டில் தெரிவித்து இருந்தது.
கூகுள் சேவைகளை பயன்படுத்தும் போது, நீங்கள் உங்களது தகவல்களுடன் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். என கூகுள் தனியுரிமை கொள்கை பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை பயன்படுத்தும் மூன்று பேர் அந்நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா:
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை பயன்படுத்தும் மூன்று பேர் தங்களது அழைப்பு மற்றும் குறுந்தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கில் ஃபேஸ்புக் மீது உரிய நடவடிக்கை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிப்பதாக ஃபேஸ்புக் பகிரங்கமாக அறிவித்தது.
எனினும் வாடிக்கையாளர்கள் தகவல்கள் அனைத்தும் அவர்களின் சேவையை மேம்படுத்தவே சேகரிக்கப்படுகிறது என்றும் இவை அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன, இவை எவ்வித மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என ஃபேஸ்புக் கூறியது.
முன்னதாக ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு பூதாகரமாய் வெடித்தது. இதுதொடர்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க பாராளுமன்ற குழு சார்பில் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மற்றும் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாஷிங்டன்:
ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஜேக் டார்சி ஆகியோர் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பாராளுமன்ற நீதித்துறை குழுவின் முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கிய விவகாரம் பூதாகாரமாய் வெடித்தது.

இதேபோல், பிரிட்டன் நாட்டில் பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றிய தகவல்களும் களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அல்லது அவரது நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி பாராளுமன்ற விசாரணை கமிட்டியின் முன்னர் ஆஜராகி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கமிட்டியின் விசாரணையில் சூக்கர்பர்க் ஆஜராக மாட்டார். அவருக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க இணைய வசதி கொண்ட மொபைல் போன் பயன்படுத்துவோரில் 80% பேரின் ஆவலை தூண்டும் ஒற்றை வலைத்தளம் கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் மொபைல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு குடும்பத்தில் அனைவருமே ஆளுக்கு ஒரு செல்போன் வைத்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டி காரணமாக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் விலை குறைந்ததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆன்ட்ராய்டு மொபைல்போனில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்து கூகுள், யூ டியூப், உள்ளிட்ட பல்வேறு இணைய தளங்களை பயன்படுத்தலாம் என்பதால் இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவராலும் இணையதளங்கள் முன்பை விட அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்க செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சலுகைகள் வழங்கி வருகிறது. ஒரு நேரத்தில் மாதத்துக்கு 1 ஜி.பி. இன்டர்நெட் வழங்கி வந்த நிறுவனங்கள் தற்போது குறைந்த பட்சம் தினம் 1 ஜி.பி. முதல் 1½ ஜி.பி. என டேட்டாவை மலிவாக வழங்கி வருகின்றன.

இந்தியாவில் மொபைல் போனில் இன்டர்நெட் மூலம் இணைய தளங்களை தேடுவோர் பற்றிய ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் செல்போன் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் யூடியூப் இணைய தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘யூ டியூப்’ல் சினிமா, பாடல்கள், டி.வி. நிகழ்ச்சிகள், டி.வி. தொடர்கள், பேட்டிகள், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு விதங்களில் வீடியோக்கள் விதவிதமாக கொட்டிக் கிடக்கிறது. இது தவிர நடிகர், நடிகைகள் பற்றிய அந்தரங்கங்களும் அதிகமாக வீடியோவாக உலா வருகிறது.
இந்தியாவில் யூடியூப் சேவை 2008-ம் ஆண்டு கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் யூடியூப் முதல் இடத்தை பிடித்துள்ளது. 22½ கோடி பேர் யூ டியூப்பில் நுழைந்து நிகழ்ச்சிகளை தேடுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர்டெல் வோல்ட்இ பீட்டா திட்டம் தேர்வு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் பயனர்களுக்கு சோதனை செய்ய வழி வகுப்பதோடு, இலவச டேட்டாவும் வழங்குகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் வோல்ட்இ பீட்டா திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பத்தை சோதனை செய்ய முடியும் என்பதோடு, இலவச டேட்டாவும் கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்து டவுன்லோடு செய்ய 10 ஜிபி டேட்டா, 4-வது வாரத்தில் பரிந்துரை வழங்க 10 ஜிபி டேட்டா மற்றும் 8-வது வாரத்தில் இறுதி பரிந்துரைகளை வழங்க 10 ஜிபி டேட்டா என மூன்று கட்டங்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
ஏர்டெல் பீட்டா டெஸ்டிங் செய்வோர் அவ்வப்போது சீரற்ற நெட்வொர்க் அனுபவிக்க நேரிடும் என்றும், அடிக்கடி பரிந்துரை வழங்க வேண்டும் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் வோல்ட்இ பீட்டா டெஸ்டிங்கில் மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பங்கேற்க முடியும்.

பீட்டா டெஸ்டிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன், ஏர்டெல் 4ஜி சிம் கார்டு, மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் மென்பொருள் மற்றும் வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் உள்ள பயனர்கள், தங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து பீட்டா டெஸ்டிங் செய்ய முடியுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பம் ஹெச்.டி. வாய்ஸ் காலிங், இன்ஸ்டன்ட் கால் கனெக்ட் (மற்ற அழைப்புகளை விட மும்மடங்கு வேகம்), மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் வோல்ட்இ கொல்கத்தாவில் வழங்கப்பட்ட நிலையில், மும்பை, மகாராஷ்ட்ரா, கோவா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முழுவதும் வோல்ட்இ தொழில்நுட்பத்திலான 4ஜி சேவையை வழங்கும் நிலையில், வோடபோன் நிறுவனம் மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் வோல்ட்இ சேவையை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் பயனர்கள் தகவல்கள் அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்திருக்கும் நிலையில், உங்களை பற்றி ஃபேஸ்புக் தெரிந்து வைத்திருப்பதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் திருட்டுத் தனமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தவறை ஒப்புக் கொண்டு, அடுத்தக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
டேட்டா வெளியான விவகாரம் ஃபேஸ்புக் கணக்கை அழிக்க வைக்கும் அளவு #DeleteFacebook ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஃபேஸ்புக் கணக்கை அழிப்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம். எனினும் ஒவ்வொரு பயனர் குறித்து ஃபேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் என்ன என்பதை நம்மால் சரிபார்க்க முடியும்.
இவற்றை இரண்டு அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். முதலில், உங்களுக்கு வழங்கப்படும் விளபம்ரங்களுக்காக ஃபேஸ்புக் வைத்திருக்கும் தகவல்கள். இரண்டாவதாக நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோடு செய்த புகைப்படங்கள், அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் கிளிக் செய்தவை அடங்கும்.

விளபம்ரம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்?
- முதலில் ஃபேஸ்புக் லாக் இன் செய்ய வேண்டும்
- அடுத்து செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்
- இனி ஆட்ஸ் (விளம்பரங்கள்) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இங்கு நீங்கள் விரும்புவதாக ஃபேஸ்புக்கிடம் பதிவிட்ட முழு விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இத்துடன் நீங்கள் பின்தொடரும் ஃபேஸ்புக் பேஜ், ஆப்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்.
- இதன் கீழ் ஸ்கிரால் செய்யும் போது ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களின் தகவல்களை பார்க்க முடியும்.
- இதில் நீங்கள் கடைசியாக பயணம் செய்த இடம், ஃபேஸ்புக் பயன்படுத்த நீங்கள் உபயோகிக்கும் சாதனம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கும்.
- உங்களது தகவல்களில் பிழை இருந்தாலோ அல்லது தவறாக பதிவிடப்பட்டு இருந்தாலோ அவற்றை அழிக்க ஃபேஸ்புக் அனுமதிக்கிறது. இவ்வாறான தகவல்கள் ஃபேஸ்புக்கில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.

ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விவரங்கள் தவிர, உங்களை பற்றி நிறைய தகவல்களை ஃபேஸ்புக் வைத்திருக்கிறது. பயனரிடம் இருந்து ஃபேஸ்புக் வைத்திருக்கும் அனைத்து டேட்டாவையும் பயனர்கள் விரும்பும் போது ஒற்றை க்ளிக் மூலம் அவற்றை டவுன்லோடு செய்யும் வசதியை ஃபேஸ்புக் வழங்குகிறது.
- ஃபேஸ்புக் செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்
- இதில் ஃபேஸ்புக் டேட்டாவை டவுன்லோடு செய்யக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இனி ஸ்டார்ட் மை ஆர்ச்சிவ் (Start My Archive) பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
- அடுத்து உங்களின் பாஸ்வேர்டினை (கடவுச்சொல்) பதிவிட வேண்டும்
இவ்வாறு செய்ததும் உங்களது டேட்டா டவுன்லோடு செய்ய தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும். மின்னஞ்சலில் இருக்கும் டவுன்லோடு பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உங்களது டேட்டா .ZIP வடிவில் டவுன்லோடு செய்யப்படும்.
டவுன்லோடு செய்யும் டேட்டாவில் புகைப்படங்கள், வீடியோக்கள், நண்பர்கள், மெசேஜ்கள், விளபம்ரங்கள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் இடம்பெற்றிருக்கிறது.
உங்களை ஃபேஸ்புக் தெரிந்து வைத்திருப்பனவற்றை தெரிந்து கொண்டதும் உங்களின் மனநிலை வித்தியாசமாகி இருக்கும். இனியும் ஃபேஸ்புக் பயன்படுத்தலாமா அல்லது #DeleteFacebook இயக்கத்தில் இணையலாமா என்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் ஃபேஸ்புக் பயனர் தரவுகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், தரவுகளை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது.
இது தொடர்பாக வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஃபேஸ்புக்கை அழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இது ட்விட்டரில் #DeleteFacebook என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. சமீபத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் அனைவரையும் ஃபேஸ்புக் கணக்கை அழிக்கும் அளவு வீரியமானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் ஃபேஸ்புக் கணக்கை அழிக்க விரும்பாத ஃபேஸ்புக் பயனர்கள் கணக்கை பாதுகாக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. சமீபத்திய பிழைக்கு ஃபேஸ்புக்-ஐ மன்னிக்க நினைப்பவர்கள், இதற்கு முக்கிய காரணம் மூன்றாம் தரப்பு செயலிகள் தான் என நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை செயலிகள் பயன்படுத்த அனுமதி அளித்திருக்கின்றனர். கேண்டி கிரஷ் முதல் இன்று நம்மில் பலரும் அதிகம் பயன்படுத்தும் பிரபல செயலிகள் அனைத்தும் அடங்கும்.
இந்த பிழையில் இருந்து தப்பிக்க செயலிகளை ஃபேஸ்புக் கணக்கில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய ஃபேஸ்புக் வலைத்தளம் அல்லது செயலி உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.
- ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்ய வேண்டும்
- ஃபேஸ்புக் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்
- இனி ஆப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து, அவற்றில் அழிக்க வேண்டியவற்றை தேர்வு செய்ய வேண்டும்
- அடுத்து X ஐகானை கிளிக் செய்ய வேண்டும்
- கிளிக் செய்ததும் டேட்டாவை அழிக்க கோரும் தகவல்கள் பாப்-அப் போன்று திரையில் தோன்றும். அதில் இடம்பெற்றிருக்கும் Remove பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செயலிகளை எடுப்பதால் மட்டுமே தரவுகளை எடுத்து விட முடியாது. செயலிகளை அழித்தாலும் டேட்டாபேஸ்-இல் தகவல்கள் இருக்கும். இதனை தடுக்க டெவலப்பரை தொடர்பு கொள்ள வேண்டும். இதனை செயலியில் மேற்கொள்ள முடியாது என்பதால் டெஸ்க்டாப் பதிப்பில் மட்டும் செய்ய முடியும்.
இணையத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் பல்வேறு இதர போலி தகவல்களை கட்டுப்படுத்த கூகுள் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது.
புதுடெல்லி:
இணையத்தில் போலி செய்திகள் மற்றும் தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் (Google News Initiative) துவங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நம்பகத்தன்மை சரிபார்க்கும் அமைப்புடன் (International Fact Check Network) இணைந்து கூகுள் புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. சர்வதேச நம்பகத்தன்மை சரிபார்க்கும் அமைப்பு போலி செய்திகள் மற்றும் தகவல்களை பிரித்தெடுக்க மேம்படுத்தப்பட்ட டூல்களை சர்வதேச அளவில் சுமார் 20,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கும்.
கூகுள் துவங்கியிருக்கும் புதிய திட்டம் உண்மையான செய்திகளிடையே பரப்பப்படும் போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பிரித்து எடுப்பதே ஆகும். முக்கியமாக அவசர செய்திகளை வழங்கும் போது இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமானதாகியுள்ளது. போலி செய்திகளை தடுக்கும் முயற்சியில் கூகுள் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

அந்த வகையில் வரும் மாதங்களில் இந்த திட்டத்தில் மட்டும் சுமார் 30 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் கூகுள்.ஓ.ஆர்.ஜி (Google.org) சார்பில் இதற்கான சவால்களை எதிர்கொள்ள 10 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் செய்திகளுக்கு சந்தாதாரர் ஆகும் முறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கூகுள் அக்கவுண்ட் கொண்டு செய்திகளுக்கு சந்தாதாரர் ஆக முடியும். இதனால் பயனர் விவரங்களை கூகுள் தானாக எடுத்துக் கொண்டு பணம் செலுத்தும் முறைக்கு ஏற்ப சந்தாதாரர் ஆகும்.
பயனர்கள் விரும்பும் வலைத்தளத்தில் காணப்படும் சப்ஸ்கிரைப் (Subscribe) ஆப்ஷனை கிளிக் செய்ததும், குறிப்பிட்ட வலைத்தளத்திற்கு சந்தாதாரர் ஆக முடியும், இதற்கான கட்டண முறை மிகவும் பாதுகாப்பானதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும். சந்தாததாரர் ஆன பின் கூகுள் கணக்கை கொண்டு லாக் இன் செய்து கொள்ள முடியும். எனினும் கட்டண பணிகளை கூகுள் செய்து கொண்டு, பண பரிமாற்றத்தை பாதுகாப்பானதாக மாற்றும்.
கூகுள் டிஜிட்டல் நியூஸ் இனிஷியேட்டிவ் திட்டத்தின் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,
சியோமி நிறுவனத்தின் இரண்டு புதிய இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை அனைவருக்கும் ஏற்ற வகையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டு இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. Mi இயர்போன்கள் மற்றும் Mi இயர்போன் பேசிக் என அழைக்கப்படும் இரண்டு இயர்போன்கள் தவிர பல்வேறு இதர இயர்போன் மாடல்களை சியோமி ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
முன்னதாக Mi நாய்ஸ் கேன்சலிங் யு.எஸ்.பி. டைப்-சி இயர்போன்களை சியோமி அறிமுகம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து Mi இன்-இயர் ஹெட்போன்களின் பேசிக் மாடல் ரூ.100 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி Mi இயர்போன் சிறப்பம்சங்கள்:
டைமண்டு கட்டிங், சிடி என்கிரேவிங் போன்ற 20 கட்ட வழிமுறைகளால் மெட்டல் சேம்பர் உருவாக்கப்பட்டு இருப்பதால் தலைசிறந்த பேஸ் அனுபவம் வழங்குகிறது. இத்துடன் ரிசோனேட்டிங் பேஸ் வழங்க ஏரோ-ஸ்பேஸ் கிரேடு மெட்டல் டையகிராம் வழங்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை பேலன்ஸ்டு சிஸ்டம் சவுண்டு மற்றும் காற்றோட்டத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. வால்யூம் கண்ட்ரோல் மற்றும் அழைப்புகளை ஏற்க மிக எளிமையாக இருக்கிறது. இதற்கென வயர் ரிமோட் ஒன்று MEMS மைக்ரோபோனுடன் வழங்கப்பட்டுள்ளது.
கெவ்லர் ஃபைபர் கேபிள் புதிய இயர்போன்களை மிகவும் உறுதியாகவும், எவ்வித பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 14 கிராம் எடை கொண்டிருக்கும் Mi இயர்போன், (XS/S/L) என மூன்று வித பட் அளவுகளில் கிடைக்கிறது.

சியோமி Mi இயர்பபோன் பேசிக் சிறப்பம்சங்கள்:
அலுமினியம் சவுண்டு சேம்பர் இயர்போனில் தரமான ஆடியோ அனுபவம் வழங்குவதோடு, ஸ்கிராட்ச் மற்றும் ஸ்லிப் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை பேலன்ஸ்டு சிஸ்டம் சவுண்டு மற்றும் காற்றோட்டத்தை வழங்குவதோடு தலைசிறந்த ஸ்டீரியோ எஃபெக்ட் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேர பயன்பாடுகளிலும் காதுகளில் வலி ஏற்படுத்தாத படி இயர்போன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டி-ஸ்லிப் வடிவமைப்பு, அடிக்கடி கீழே விழாமல் பார்த்துக் கொள்ளாது. ஆக்ஸ் ஜாக் 45 கோணத்தில் வளைக்கப்பட்டிருப்பதால் நீண்ட காலம் பாதிக்கப்படாமல் இருக்கும். இத்துடன் மைக்ரோபோனில் உள்ள ஒற்றை பட்டனை கிளிக் செய்வதன் மூலம் பிளே, பாஸ் மற்றும் அழைப்புகளை ஹேங்-அப் செய்ய முடியும்.
சியோமி Mi இயர்போன்கள் கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi இயர்போன் பேசிக் மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய இயர்போன்களும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வாங்க முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் டி.டி.ஹெச். மற்றும் இண்டர்நெட் துறைகளில் கால்பதிக்கலாம் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகின.
மும்பை:
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் துவங்கப்பட்டது முதல் அந்நிறுனம் இண்டர்நெட் மற்றும் டி.டி.ஹெச். சேவைகளை விரைவில் வழங்கலாம் என்றும் அதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
ஜியோ டி.டி.ஹெச். மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் துவங்கப்படலாம் என்றும், இவற்றின் விலையும் ஜியோ போன்று மலிவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டன.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ டி.டி.ஹெச். என்பது ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் இது வழக்கமான டி.டி.ஹெச். சேவைகளை விட வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. மிகவும் மெல்லிய வடிவமைப்பு, அடுத்த தலைமுறை கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ டி.டி.ஹெச். சேவையை ஹெச்.டி.எம்.ஐ. தொலைகாட்சி, அமேசான் ஃபையர் ஸ்டிக் மற்றும் கூகுள் க்ரோம்காஸ்ட் போன்ற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம். அந்த வகையில் எவ்வித தொலைகாட்சியையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றிட முடியும்.
முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ டி.டி.ஹெச். செட்-டாப் பாக்ஸ் ஜியோ ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோருடன் இணைத்து ஆண்ட்ராய்டு செயலிகளை டிவியில் டவுன்லோடு செய்ய முடியும் என கூறப்பட்டது. செட்-டாப் பாக்ஸ் இல் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
வாய்ஸ் கமாண்ட் வசதியை சப்போர்ட் செய்ய இன்பில்ட் மைக்ரோஃபோன் கொண்டிருக்கும் என்றும், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஜியோ ஹெல்லோ உள்ளிட்டவ வசதிகளை வழங்கும் என கூறப்பட்டது.
இந்திய டெலிகாம் சந்தையில் மிக வேகமாக முன்னணி நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ துவங்கப்பட முக்கிய காரணமாக இருந்தவர் யார் தெரியுமா?
மும்பை:
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ ஜியோ அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்குள் உலகின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்திய டெலிகாம் சந்தையில் பெரும் மாற்றத்திற்கு வித்திட்டு, முன்னணி டெலிகாம் நிறுவனங்களையும் சேவை கட்டணங்களின் விலையை குறைக்க வைத்த ஜியோ அறிமுகமாக முக்கிய காரணமே முகேஷ் அம்பானி மகள் தானாம்.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 'டிரைவர்ஸ் ஆஃப் சேஞ்ச்' எனும் விருதை பெற்ற முகேஷ் அம்பானி ஜியோ உருவாக முதல் காரணியாக இருந்தது இஷா தான் என தெரிவித்திருக்கிறார். அன்று விதைக்கப்பட்ட விதை இன்று நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க்களில் ஒன்றாக உயர்ந்து இருக்கிறது.
வாழ்நாள் முழுக்க இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மலிவு விலையில் மொபைல் டேட்டா உள்ளிட்டவை ஜியோவின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இத்துடன் மொபைல் டேட்டா மட்டுமின்றி வீடுகள், வியாபார மையங்கள் மற்றும் கார்களை இண்டர்நெட் உடன் இணைப்பதற்கான பணிகளை ஜியோ மேற்கொண்டு வருகிறது.
'அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இஷா 2011-ம் ஆண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். கல்வி சார்ந்த பணிகளின் இடையே, அவர் வீட்டின் இண்டர்நெட் வேகம் படு மோசமாக உள்ளது என நொந்து கொண்டார்,' என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

'பிராட்பேண்ட் இண்டர்நெட் வரையறுக்கும் தொழில்நுட்பமாக இருக்கிறது, இதில் இந்தியா தனித்திருக்க முடியாது என இஷா மற்றும் ஆகாஷ் இருவரும் என்னை நம்பவைத்தனர். இந்தியாவில் அப்போது இண்டர்நெட் இணைப்பு சீரற்று இருந்ததோடு, டேட்டா விலையும் அனைவராலும் பெற முடியாத ஒன்றாக இருந்தது' என அவர் மேலும் தெரிவித்தார்.
'ஜியோ வரவு இவை அனைத்தையும் மாற்றியமைத்து, இந்தியா முழுக்க அனைவரும் செலுத்தக் கூடிய விலையில் டேட்டா மற்றும் இதர சேவைகளை ஜியோ மூலம் வழங்குகிறோம். செப்டம்பர் 2016-இல் துவங்கப்பட்ட ஜியோ சேவை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ஜி மொபைல் நெட்வொர்க் வழங்கியதில் அமெரிக்க ஆதிக்கம் செலுத்த, ஐரோப்பியா 2ஜி நெட்வொர்க்கிலும், சீனா 3ஜி நெட்வொர்க் வழங்குவதில் முன்னணியில் இருந்த நிலையில், ஜியோ மூலம் 4ஜி எல்டிஇ டேட்டா நெட்வொர்க் வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதனால் 4ஜி நெட்வொர்க் வழங்குவதில் முதன்மை நாடாக இந்தியாவை மாற்றும்.

2ஜி நெட்வொர்க் உருவாக்க ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் துறைக்கு 25 ஆண்டுகள் ஆன நிலையில், 4ஜி எல்டிஇ சேவையை வழங்க ஜியோ மூன்று ஆண்டுகளே எடுத்து கொண்டுள்ளதோடு 5ஜி தொழில்நுட்பமும் கிட்டத்தட்ட தயாராகி வருகிறது.
இந்திய வியாபார வரலாற்றில் உண்மையான டிரைவ் ஆஃப் சேஞ்ச் திருபாய் அம்பானி தான் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். 1966-ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை வெறும் ரூ.1000 முதலீட்டில் துவங்கினார். இன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய குழுமமாக இருக்கிறது.






