என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.
    • கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

    சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது.

    சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.

    செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.

    நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

    உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.

    விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.

    இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார். 

    • இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.
    • பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

    உலகின் பிரபலமான தேடல் தலமான கூகுள் குரோமை வாங்க செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) முன்வந்துள்ளது.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான Perplexity நிறுவனம், குரோமுக்கு 34.5 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 3.02 லட்சம் கோடி) சலுகையை வழங்கியுள்ளது.

    இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.

    அமெரிக்க அரசாங்கத்தின், நம்பகத்தன்மை இன்மை குற்றச்சாட்டுகளால் கூகிள் தற்போது கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

    தேடுபொறி சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்க குரோமை விற்க வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை பரிந்துரைத்து வரும் நேரத்தில், பெர்ப்ளெக்ஸிட்டி இந்த மிகப்பெரிய சலுகையை வழங்கி உள்ளது.

    இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான நிதி வெளிப்புற முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும் என்று பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை வணிக அதிகாரி டிமிட்ரி ஷெவெலென்கோ தெரிவித்தார்.

    ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

    சலுகையை உறுதிப்படுத்திய பெர்ப்ளெக்ஸிட்டி, ஒப்பந்தம் வெற்றியடைந்தால் குரோமில் முக்கிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று விளக்கம் அளித்தது.

    பெர்ப்ளெக்ஸிட்டி தற்போது அதன் AI உடன் இயங்கும் 'காமெட்' (Comet) என்ற browser ஐ இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கைபேசியின் பேட்டரி 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
    • முன்பக்கத்தில், இது 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

    ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் X9 அல்ட்ரா அதன் முந்தைய வெர்ஷனான ஃபைண்ட் X8 அல்ட்ராவை விட அதிக திறன் கொண்ட இரட்டை செல் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு மாடலில் இந்த மேம்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மெலிதான டிசைனையும் தக்க வைத்துக் கொள்ளும்.

    புதிய ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெய்போவில் வெளியிட்ட தகவல்களில், ஒப்போ ஸ்மார்ட்போன் இரண்டு 3,425mAh செல்களைக் கொண்ட இரட்டை செல் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா அதன் முந்தைய ஸ்மார்ட்போனை போலவே ஒரு தட்டையான தோற்றத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது SM8850 என்ற மாடல் நம்பர் கொண்ட பிராசஸர் மூலம் இயக்கப்படலாம். இது விரைவில் வெளியாக இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது.
    • சீனாவில் மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.

    20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது.

    கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.

    உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை குறைத்துள்ளது.

    அதை தாண்டி, நிஜ உலக சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கு அதிகளவில் செயல்முறை கற்றலுக்கு சீன கல்விமுறை முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது.


    விவசாயம், கைவினைப்பொருட்கள் செய்தல் முதல் தொழில்நுட்ப திறன்கள் வரை செயல்முறையாக கற்றுத் தரப்படுகிறது. கல்விச் சுற்றுலாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    மாணவர்களின் கற்றல், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதே இதன் குறிக்கோள்.

    இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி, மாணவர்கள் வீட்டில் வீட்டுப்பாடம் செய்யும் வழக்கமான முறைக்குப் பதிலாக, மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் விரிவுரைகள் மூலம் இது சாத்தியப்படுகிறது.

    அதே நேரத்தில் வகுப்பறை நேரம், விவாதங்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    அடுத்ததாக கேமிஃபிகேஷன். இது கற்பித்தல் செயல்பாட்டில் விளையாட்டு கூறுகளை இணைப்பதாகும். சீனாவில், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி இரண்டிலும் கேமிஃபிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

    மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் புள்ளிகள், நிலைகள் மற்றும் வெகுமதிகள் போன்றவை இதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. 

    டிஜிட்டல் கருவிகள் மற்றும் தளங்களின் வளர்ச்சியுடன், கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

    தொழில்நுட்பம் வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்துவதோடு கற்றலை மேலும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.

    சீனாவில் குறிப்பாக  மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.

    இந்த தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்க செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் உள்ளடக்கத்தையும், கற்றலின் வேகத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் பயன்படுத்துகின்றன. 


    மென்பொருளின் உதவியுடன், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் கற்றல் பாணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றனர். 

    தொழில்நுட்பங்களால் வேகமாக மாறி வரும் உலகில் அதற்கு தகவமைத்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையை சீனா  முனைப்புடன் உருவாக்கி வருகிறது. 

    • முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சாதனங்கள் (iPhone, iPad, MacBook, Apple Watch) உலகளவில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. ஆனால் முழுமையான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவில் செயல்படும் ஐபோன் உள்பட அனைத்து ஆப்பிள் பொருட்களும் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பான CERT- In அதி தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    iOS, iPadOS, macOS, watchOS, TVOS/ visionOS 2 இருந்து முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

    • மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது.
    • ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்து பார்க்க வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் வாய்ப்பை வழங்குகிறது.

    இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

    இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.) தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா கிடைக்கும். 100 எஸ்.எம்.எஸ். செய்யலாம். ஒரு பி.எஸ்.என்.எல். சிம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    "ஆத்ம நிர்பார் பாரத்" திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையின் மூலம் இந்தியா தனது சொந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருப்பதில் பெருமை அடைகிறது.

    பி.எஸ்.என்.எல். சுதந்திர தின திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது. மேலும் இந்த முயற்சி பாதுகாப்பான, உயர்தர மற்றும் மலிவான மொபைல் இணைப்பின் மூலம் டிஜிட்டல் இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

    பொதுமக்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா இடங்களுக்கு சென்று இந்த சுதந்திரதின திட்டத்தை பெறலாம் என்று தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளது.

    • இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாக உருவாகி வருகிறது.
    • இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதாவது இனிமேல், குறைந்தபட்சம் 1,000 Followers கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    • புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வேரியண்ட்கள் அவற்றின் சீன வெர்ஷன்களை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஓப்போ K13 டர்போ மற்றும் K13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஜூலை மாதத்தின் நான்காவது வாரத்தில் சீனாவில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அவற்றின் இந்திய வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வேரியண்ட்கள் அவற்றின் சீன வெர்ஷன்களை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, புதிய ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஓப்போ K13 டர்போ ஸ்மார்ட்போன் IPX6, IPX8 மற்றும் IPX9 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7,000mAh பேட்டரி கொண்டுள்ளன. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 சிப்செட் வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இத்துடன் 6.80 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேக்கள், 50MP டூயல் கேமரா சென்சார், 16MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுகிறது.

    • இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது.
    • மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்தியாவில், அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது. சரி..! எந்த நாட்டு மக்கள், இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமா..?

    1. இந்தியா

    இந்தியாதான் உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 413 மில்லியன் (41.3 கோடி) மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அதில் 33.1 சதவிகிதம் பெண் பயனர்கள், 66.9 சதவிகிதம் ஆண் பயனர்கள். இந்த அதிக எண்ணிக்கைக்குக் காரணம் அதன் மிகப்பெரிய மக்கள் தொகைதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2-கே கிட்ஸ்கள். இந்தியாவில் ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.



    2. அமெரிக்கா

    உலக வல்லரசான அமெரிக்கா, இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இருக்கிறது. அங்கு 172.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அங்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக இன்ஸ்டாகிராமை கையாளுகிறார்கள்.

    3. பிரேசில்

    இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 141.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இங்கு 58 சதவிகிதம் பெண்களும், 42 சதவிகிதம் ஆண்களும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கிறார்கள். இணைய வசதிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் தரும் பொழுதுபோக்கே இதற்கு முக்கிய காரணாமாக இருக்கிறது.

    4. இந்தோனேசியா

    இந்தோனேசியாவில் 90.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் பொழுதை போக்குகிறார்கள். அதில் பெண்கள் 54 சதவிகிதம் பேர், ஆண்கள் 46 சதவிகிதம் பேர். இந்தோனேசிய மக்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கு அதன் மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் சமூக ஊடக கலாசாரம் காரணமாக விளங்குகிறது.

    5. துருக்கி

    58.3 மில்லியன் பயனர்களுடன் துருக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 47.1 சதவிகிதத்தினர் பெண்கள் மற்றும் 52.9 சதவிகிதத்தினர் ஆண்கள். மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.

    இந்த டாப்-5 நாடுகளை தொடர்ந்து, ஜப்பான் 6-வது இடத்திலும், மெக்சிகோ 7-வது இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கின்றன.

    • இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படும்.
    • சீன நிறுவனம் ஏற்கனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

    ஐகூ Z10 டர்போ பிளஸ் மற்றும் ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ்-இன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர் பகிரப்பட்ட டீஸரில், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது, அதன் வண்ண விருப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் மற்றும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) உடன், சீனாவில் ஒரு பவர் பேங்க் வெளியிடப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த புதிய சாதனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்பதை ஸ்மார்ட்போன் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

    சீன சமூக வலைதளமா வெய்போவில் ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஐகூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் போலார் கிரே, கிளவுட் ஒயிட் மற்றும் டெசர்ட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் தவிர, நிறுவனம் சீனாவில் மேலும் இரண்டு சாதனங்களை வெளியிட உள்ளது. ஐகூ ஏர் 3 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் 10,000mAh பவர் பேங்க் ஆகியவை அதே தேதியில் அறிமுகம் செய்யப்படும். இந்த இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படும். ஸ்டார் டயமண்ட் ஒயிட் மற்றும் ஸ்டார் யெல்லோ, அதே நேரத்தில் பவர் பேங்க் எக்ஸ்ட்ரீம் யெல்லோ என்ற ஒற்றை வண்ண விருப்பத்தில் வரும்.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    சீன நிறுவனம் ஏற்கனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப் மூலம் இயக்கப்படும். இது 8,000mAh பேட்டரி வழங்கப்படும். இதன் டிஸ்ப்ளே 2,000 nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும்.

    ஏற்கனவே லீக் ஆன தகவல்களின் படி ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று பரிந்துரைத்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இது 50MP பிரைமரி கேமராவையும், 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இது 16MP செல்ஃபி கேமராவுடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போனஅ ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டிருக்கும்.

    ஐகூ ஏர் 3 ப்ரோ மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் செமி-இன்-இயர் வடிவமைப்பை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், 10,000mAh பவர் பேங்க் 22.5W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும்.

    • கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
    • சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை’ என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

    மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்திடமிருந்து வந்த 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,757 கோடி) சம்பள வேலை வாய்ப்பை நிராகரித்து கவனம் பெற்றுள்ளார் ஓபன்ஏஐ முன்னாள் ஊழியர் மீரா முராதி (36 வயது)

    அல்பேனியாவை சேர்ந்த மீரா முராதி (Mira Murati) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்.

    ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

    2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்த அவர், குறுகிய காலத்தில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.

    சாட்ஜிபிடி, டால்-இ மற்றும் கோடெக்ஸ் போன்ற உலகை மாற்றியமைத்த திட்டங்களை வழிநடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டபோது, மீரா முராதி மூன்று நாட்களுக்கு இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

    சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை' என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மீரா, சமூகப் பொறுப்புடன் ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய மீரா முராதி, தனது "திங்கிங் மெஷின்ஸ் லேப்" Thinking Machines Lab) நிறுவனத்தை தொடங்கினார்.  

    • சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
    • இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.

    இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.

    நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

    ×