search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் சிட்டி"

    • மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
    • ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார்.

    இந்தூர்:

    நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.

    அப்போது அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 66 விருதுகளை வழங்கினார். அதில் 31 விருதுகள் நகரங்களுக்கும், 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 7 நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

    நாட்டின் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் சிறந்த நகரத்துக்கான 'தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதை' இந்தூருக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2-வது இடத்துக்கான விருதும், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு 3-வது இடத்துக்கான விருதும் அளிக்கப்பட்டன.

    மாதிரி சாலைகள் அமைப்பு, ஏரிகள் மீட்பு, புதுப்பிப்புக்கான சூழல் உருவாக்க பிரிவு விருதும், தென்மண்டல ஸ்மார்ட் சிட்டி விருதும் தமிழ்நாட்டின் கோவை மாநகருக்கு வழங்கப்பட்டன.

    குளங்கள் பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கு கலாசார விருதும், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடிக்கு சமூக அம்சங்கள் விருதும் கிடைத்தன.

    'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். தமிழ்நாட்டுக்கு 2-வது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 3-வது இடத்துக்கான விருது கூட்டாக வழங்கப்பட்டது.

    இந்த மாநாட்டில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மத்தியபிரதேச கவர்னர் மங்குபாய் படேல், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • . இந்த பணி–களை ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் கிரன் குராலா ஆய்வு மேற்கொண்டார்.
    • நொய்–யல் நதியில் இருபுறமும் சாலைகள் அமைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் நதியில் இருபுறமும் சாலைகள் அமைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் கிரன் குராலா ஆய்வு மேற்கொண்டார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் உடனிருந்தனர்.

    நொய்–யல் ஆற்றின் சிறப்பு குறித்தும், கரையின் இருபுற–மும் சாலைகள் அமைத்து மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மேயர் எடுத்துக்கூறினார். திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தரத்துடன் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

    • 100 நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’களாக மாற்றும் திட்டத்தை கடந்த 2015-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது.
    • 78 நகரங்களின் பணியும் இன்னும் 4 மாதங்களுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆக்ரா, வாரணாசி, அகமதாபாத், சென்னை, கோவை உள்பட 100 நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'களாக மாற்றும் திட்டத்தை கடந்த 2015-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது.

    இந்த திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள், சுற்றுப்புற சூழல், மக்கள் வாழ்க்கைக்கு தேவையான நவீன வசதிகள் அனைத்தும் செய்யப்படும்.

    முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, வேலூர் ஆகிய 8 நகரங்கள் மற்றும் போபால், இந்தூர், வாரணாசி, ஆக்ரா உள்பட 22 நகரங்களின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    அடுத்தமாதம் (ஏப்ரல்) இந்த 22 நகரங்களும் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 78 நகரங்களின் பணியும் இன்னும் 4 மாதங்களுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 322 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 804 பணிகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் 5,246 பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்ற இதுவரை ரூ.36,447 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் ரூ.32,095 கோடி செலவிட்டு 88 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    • சத்துவாச்சாரி, மந்தவெளி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது
    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சத்துவாச் சாரி மந்தைவெளி, காந்திநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைதிட்டம், தார்சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் நடை பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மந்தைவெளி மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே பாதாள சாக்கடை குழாய்கள் சரியான ஆழத்தில் புதைக்கப்படவில்லை. அதனால் சாலை அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது பாதாள சாக்கடைக்காக பதிக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாகவும், இதனை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் மாநகராட்சி மேயர் சுஜாதா அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில இடங்களில் குறிப்பிட்ட ஆழத்தில் குழாய்கள் பதிக்காமல் மேலோட்டமாக பதிக்கப்பட்டிருந்தது.

    மேலும் வீட்டில் இருந்து பாதாள சாக்கடை குழாய்களுக்கு இணைப்புகொடுக் கப்படவில்லை. இதுதொடர்பாக மேயர் சுஜாதா, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர், பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுவ தும் முடித்த பின்னரே சாலை அமைக்க முடியும். எனவே அந்த பணிகளை எவ்வித குறைகளும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் சதீஷ்குமார் பாச்சி, உதவிபொறியாளர் செல்வ ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
    • மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு சார்பில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு குழு ஆயிரத்து 349 கோடி ஒதுக்கியது. அந்த நிதியை மாநகராட்சி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    வேலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மணல் குவாரியில் முறைகேடு

    வேலூர் பிள்ளையார் குப்பத்தில் அமைக்கப்பட்ட மணல் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.

    இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வேலூர் மாநகரத்தில் காட்பாடி முதல் பாகாயம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் எஸ். எல்.பாபு உள்பட கலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் புராதன பூங்கா மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது.
    • திருச்சி தெப்பக்குளத்தில் படகு சவாரி, வண்ண விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியில் 83 பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை 38 பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இதில் பட்டவொர்த் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புராதன பூங்கா மற்றும் தெப்பக்குளத்தில் வண்ண விளக்குகளால் அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம் மற்றும் கிழக்கு புலிவால் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கனக வாகன முனையம் ஆகிய 3 முக்கிய திட்டப் பணிகள் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் பூர்த்தி அடையும் என மாநகராட்சி என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.

    2023 மார்ச் மாதத்திற்குள் 45 பணிகளை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புராதன பூங்கா மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பல வரலாற்று அடையாளங்கள் இடம்பெறுகின்றன. முக்கியமாக திருச்சி மாநகரில் கோலோச்சிய மன்னர்கள், மகாராணிகள் தொடர்பான விவரங்கள் இந்த பூங்காவில் இடம்பெறுகின்றன.

    தெப்பக்குளத்தில் படகு சவாரி, வண்ண விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு பணிகளும் சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்படுகிறது. மேலும் கனரக வாகன நிறுத்துமிடம் ரூ.14 கோடியில் அமைக்கப்படுகிறது.

    இந்த திட்டப் பணி மூலமாக காந்தி மார்க்கெட்டுக்கு வரும் லாரிகள் நிறுத்த கூடுதல் வசதி ஏற்படும். இதனால் மார்க்கெட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்படும்.

    பஞ்சப்பூர் சோலார் பிளாண்ட் தொடர்பான பணிகளும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    • ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்ற நகரங்களில் விசாரணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி விதிப்படி செலவழிக்கப்பட்டதா? என ஆய்வு

    சென்னை:

    மத்திய அரசின் உதவியுடன் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் அந்தஸ்துக்கு உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த திட்டத்துக்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், மாநில அரசுகள் 50 சதவீதத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

    சென்னையை பொறுத்த வரை தி.நகர் பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டது. இதற்காக பாண்டி பஜார் பகுதிகளில் நடை பாதைகள் அகலப்படுத்தப்பட்டன. வாகனம் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டன. போக்குவரத்தும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்ட தி.நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

    அங்கு சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்கி நின்றது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

    தி.நகரில் மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" என்றார்.

    அதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தியது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகள் அதற்கான வழிகாட்டுதலுடன் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதா? இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அனுமதித்த மானியங்கள், வழிகாட்டு முறைப்படி செலவழிக்கப்பட்டதா? திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டதா? திட்ட அமலாக்கத்தில் ஏதாவது குறைகளை தணிக்கை துறை சுட்டிக் காட்டியுள்ளதா? அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா, தவறுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ஆகியவை பற்றி இந்த ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    மேலும் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளையும் ஒருநபர் ஆணைய தலைவர் டேவிதார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் அவர் அறிக்கை தயாரித்தார்.

    இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒருநபர் ஆணைய தலைவர் டேவிதார் தாக்கல் செய்தார். இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்குகிறார்கள்.

    தமிழகத்தில் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டருக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #SmartCity #MadrasHC
    சென்னை:

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டடன. இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக 10 நகரங்களில் மின்னணு நிர்வாகம், மொபைல் ஆப் வடிவமைப்பு ஆகிய பணிகளுக்காக தமிழக அரசு டெண்டர் விட்டு அதில் எல் அண்டு டி நிறுவனம் தேர்வாகியிருந்தது.

    சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த டெண்டர் வெளிப்படையாக நடக்கவில்லை எனக்கோரி ஏஸ்டெக் மிஷனரி என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மகாதேவன், டெண்டரின் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்து வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 
    ×