என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததால் சிலருக்கு என் மீது ஆத்திரம் - மோடி பேச்சு
Byமாலை மலர்19 Jan 2019 11:30 AM GMT (Updated: 19 Jan 2019 11:30 AM GMT)
ஊழலை எதிர்த்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததால் சிலர் என் மீது ஆத்திரம் கொண்டு மெகா கூட்டணி அமைத்துள்ளனர் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #lootingpublicmoney #mahagathbandhan #Modi
சில்வாசா:
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யின் தலைநகரான சில்வாசா நகரம் பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள 100 நகரங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில்வாசா நகரில் இன்று புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
மத்தியில் முன்னர் ஆட்சி நடத்திய அரசு 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு வெறும் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டித்தந்தது. ஆனால், எங்கள் தலைமையிலான அரசு ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டியுள்ளது.
ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணம் கொள்ளயடிக்கப்படுவதை நான் தடுத்ததால் அவர்கள் என்மீது கோபமடைந்துள்ளனர். அதனால், அவர்கள் அனைவரும் இணைந்து மெகா கூட்டணி ஒன்றை அமைத்துள்ளனர்.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தவர்கள் இன்று ஜனநாயகத்தை காப்பாற்றப் போவதாக பேசுகிறார்கள். இந்த கூட்டணி மோடிக்கு எதிரானது அல்ல, இந்திய மக்களுக்கு எதிரானது. ஒழுங்காக ஒன்று சேர்வதற்குள்ளாகவே தங்களுக்கான பங்கு என்ன? என்ற பேரத்தில் அவர்கள் இறங்கி விட்டனர்.
மேற்கு வங்காளம் மாநில சட்டசபையில் ஒரேயொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மட்டுமே இருக்கும் நிலையில் அவர்கள் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #lootingpublicmoney #mahagathbandhan #Modi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X