ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மேயர் ஆய்வு

சத்துவாச்சாரி, மந்தவெளி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மேயர் ஆய்வு
Published on

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சத்துவாச் சாரி மந்தைவெளி, காந்திநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைதிட்டம், தார்சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் நடை பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மந்தைவெளி மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே பாதாள சாக்கடை குழாய்கள் சரியான ஆழத்தில் புதைக்கப்படவில்லை. அதனால் சாலை அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது பாதாள சாக்கடைக்காக பதிக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாகவும், இதனை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் மாநகராட்சி மேயர் சுஜாதா அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில இடங்களில் குறிப்பிட்ட ஆழத்தில் குழாய்கள் பதிக்காமல் மேலோட்டமாக பதிக்கப்பட்டிருந்தது.

மேலும் வீட்டில் இருந்து பாதாள சாக்கடை குழாய்களுக்கு இணைப்புகொடுக் கப்படவில்லை. இதுதொடர்பாக மேயர் சுஜாதா, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர், பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுவ தும் முடித்த பின்னரே சாலை அமைக்க முடியும். எனவே அந்த பணிகளை எவ்வித குறைகளும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் சதீஷ்குமார் பாச்சி, உதவிபொறியாளர் செல்வ ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com