search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரத்து அதிகரிப்பு"

    • விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
    • கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது.

    சென்னை:

    கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து பூண்டு விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு (ஜனவரி மாதத்தில்) ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆனது. ஆனால் அதன் பிறகு ராக்கெட் வேகத்தில் அதன் விலை அதிகரித்தது.

    மலைப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய இந்த பூண்டின் விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்ததாலேயே அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாசலபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வரத்து அப்போது குறைந்திருந்தது.

    விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் அப்போது ஒரு கிலோ பூண்டு ரூ.500 வரை விற்பனை ஆனது. மற்ற மாவட்டங்களில் ரூ.550 வரை விற்பனை ஆனதை பார்க்க முடிந்தது.

    மாத பட்ஜெட்டில் தவிர்க்க முடியாத உணவு சார்ந்த பொருட்களில் ஒன்றான பூண்டின் இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக அமைந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து விலை அதே நிலையில் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து பூண்டு வரத்து சற்று அதிகரித்ததால் அதன் விலை குறையத் தொடங்கியது.

    கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது. அதன் பின்னரும் விலை குறைந்து வந்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் அதன் விலை மேலும் கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்து ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.350 வரையில் விற்பனை ஆனது.

    தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மற்றும் சீனாவில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் அதன் விலை மேலும் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
    • இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

    கத்தரிக்காய் ஒரு கிலோ - ரூ. 24 முதல் 36, தக்காளி - ரூ.12 முதல் 16, வெண்டைக்காய் - ரூ. 20 முதல் 25, அவரை - ரூ.40 முதல் 50, கொத்தவரை - ரூ.25, முருங்கைக்காய் -ரூ.30, முள்ளங்கி -ரூ.16, புடல்- ரூ.32 முதல் 40, பாகல்-ரூ.40 முதல் 44, பீர்க்கன் -ரூ.40 முதல் 56, வாழைக்காய் -ரூ.28, வழைப்பூ (1)- ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1)- ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் -ரூ.20, பூசணி- ரூ.15, சுரைக்காய் -(1) ரூ.10 முதல் 12, மாங்காய்- ரூ.60, தேங்காய் -ரூ. 27, எலுமிச்சை -ரூ. 80, கோவக்காய்- ரூ.40, சி.வெங்காயம்- ரூ. 30 முதல் 46, பெ.வெங்காயம்- ரூ.30 முதல் 35, கீரை -ரூ.30, பீன்ஸ் -ரூ.60 முதல் 68, கேரட் -ரூ.40 முதல் 48, பீட்ரூட்- ரூ.30 முதல் 40, உருளைக்கிழங்கு -ரூ.27 முதல் 30, சவ்சவ்- ரூ.28, முட்டைகோஸ்- ரூ.15 முதல் 20, காளிபிளவர்- ரூ.15 முதல் 25, குடைமிளகாய் -ரூ.50, கொய்யா -ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம்- ரூ.50, பச்சை பழம்- ரூ.25, கற்பூரவள்ளி- ரூ.40, ரஸ்தாளி- ரூ.30, செவ்வாழை -ரூ.50, பூவன் -ரூ.20, இளநீர்- ரூ.15 முதல் 25, கறிவேப்பிலை -ரூ. 40, மல்லிதழை -ரூ. 40, புதினா -ரூ. 30, இஞ்சி- ரூ.150, பூண்டு- ரூ. 50, ப.மிளகாய்- ரூ. 40 முதல் 50, வாழை இலை- ரூ.30, மரவள்ளிக்கிழங்கு- ரூ. 30, மக்காச்சோளம்- ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய்- ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு- ரூ.70, கருணைக்கிழங்கு- ரூ.70, பப்பாளி- ரூ. 30, நூல்கோல்- ரூ. 32 முதல் 36, நிலக்கடலை- ரூ. 50, கொலுமிச்சை- ரூ.30, சப்போட்டா- ரூ.40, தர்பூசணி- ரூ.15, விலாம்பழம்- ரூ.40.

    • இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • ரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. வடமாநிலங்களில் பெய்த மழை மற்றும் தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.

    ரேசன் கடைகள் மற்றும் பசுமை பண்ணை கடைகள்மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்ட போதும் பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. அதன்பிறகு படிப்படியாக தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விலையும் குறைந்து வந்த நிலையில் தற்போது கடும் வீழ்ச்சி அடைந்ததால் குப்பையில் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் காந்தி, காமராஜர் மார்க்கெட்டு களுக்கு தினந்தோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து இருக்கும். இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது பெரும்பாலான ஊர்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்து ள்ளதால் வெளியூர் வியாபாரிகள் வருவது குறைந்து விட்டது. குறிப்பாக உடுமலைப்பேட்டையில் இருந்து வரும் வியாபாரிகள் இல்லாததால் மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.

    காந்தி மார்க்கெட்டுக்கு 2 ஆயிரம் பெட்டிகளும், காமராஜர் மார்க்கெட்டுக்கு 2500 பெட்டிகளும் விற்பனைக்கு வந்தது. ஒரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.4.50 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிலும் முதல் தர தக்காளி மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டிச் சென்றனர். செடியை பராமரித்து தண்ணீர் விட்டு, ஆட்களை வைத்து பறித்து மார்க்கெட்டுக்கு எடுத்து வரும் செலவை கணக்கிட்டால் பெரிய அளவு நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் காய்கறி செடிகள், மலர் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளி விவசாயம் அதிக அளவு நடைபெற்று வந்தாலும் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைப்பதி ல்லை என்ற நிலை உள்ளது.

    எனவே அதிகாரிகள் இதனை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகள் 4500 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர்.
    • கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர் புறம் அமைந்துள்ளது.

    இங்கு விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.

    அந்த வகையில் அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம்,

    பச்சம் பாளை யம், கள்ளிமடை குட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தி களை அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து பருத்திகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்கு முறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண் காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் புளி யம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவினாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்திகளை ஏலம் எடுக்கிகிறார்கள். இதை தொடர்ந்து விளை ச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    கடந்த வாரம் விவசாயிகள் 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். ஆனால் இந்த வாரம்அதிக அளவில் 4 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் வந்திருந்தனர்.

    இதனால் கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் 500 மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிரு க்கிறது.

    அணையில் கீழ் பவானி வாய்க்காலு க்கு 2,200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை மீண்டும் 104 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமநாதபுரம் பகுதியில் கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
    • விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ராமநாதபுரம்

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் தினமும் கொய்யாப்பழம் ஏலம் நடக்கிறது. ராமநாதபுரம் பழ வியாபாரிகள் பாலமேடு சென்று ஏலத்தில் கலந்து கொண்டு பழங்களை கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக 25 பெட்டிகள் வரை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இது குறித்து ராமநாதபுரம் பழவியாபாரி கூறியதாவது:-

    ஒரு பெட்டியில் 40 கிலோ பழங்கள் இருக்கும். தினமும் 20 முதல் 25 பெட்டிகள் கொள்முதல் செய்து விற்கிறேன்.ராமநாதபுரத்தில் புது பஸ்-நிலையம், சர்ச் முன்பு, பாரதி நகர் மெயின் ரோடு, பஜார் என 4 இடங்களில் சில்லரை விற்பனை கடைகள் உள்ளது.

    ஏலம் எடுக்கப்படும் கொள்முதல் விலையைக் கணக்கில் கொண்டு சில்லரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த வாரம் கிலோ ரூ.70 வரை விற்ற கொய்யாப்பழங்கள் தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. தற்போது கொய்ய ப்பழ சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இனி கொய்யாப்பழம் சீசன் பிப்ரவரிக்கு பின்னர் தான் வரும். அதுவரை பழங்கள்வரத்து குறைவாகவும், விலை அதிகரித்தும் காணப்படும். 4 நாட்களாக பாலமேடு கொய்யா வரத்து அதிகரித்து, சில்லரை விலை குறைந்து உள்ளது. மக்களும் மகிழ்ச்சியாக கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

    • இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தைகளில் வாரம் தோறும் முருங்கைக்காய் சந்தை நடைபெறுவது வழக்கம். மூலனூர், கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தை மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்கிறார்கள்.

    பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது வட மாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர். இதனால் மூலனூர் பகுதியில் வரத்து அதிகமானதால் இந்த வாரம் முருங்கை விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.37-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கை இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் மரம், செடி முருங்கை, கருமுறுங்கை என அனைத்து முருங்கைகளும் இதே விலை நிலவரத்தில் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வரத்து அதிகரித்ததால் ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது.
    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்தது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 7 டன் வரை தக்காளி லோடு வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியது.

    இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு 3 ஆயிரம் டன் வரை மட்டுமே தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தக்காளி விளைச்சல் ஓரளவு அதிகரித்து வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

    இதனால் கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்துள்ளது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 40-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் வ.உ.சி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் தக்காளி விலை சரிவின் காரணமாக 3 கிலோ, 5 கிலோ என அள்ளி சென்றனர்.

    இதனால் இன்று தக்காளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×