search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் உச்சத்தில் இருந்த தக்காளி குப்பைக்கு சென்ற கொடுமை
    X

    ஒட்டன்சத்திரத்தில் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி.

    வரத்து அதிகரிப்பால் உச்சத்தில் இருந்த தக்காளி குப்பைக்கு சென்ற கொடுமை

    • இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • ரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. வடமாநிலங்களில் பெய்த மழை மற்றும் தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.

    ரேசன் கடைகள் மற்றும் பசுமை பண்ணை கடைகள்மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்ட போதும் பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. அதன்பிறகு படிப்படியாக தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விலையும் குறைந்து வந்த நிலையில் தற்போது கடும் வீழ்ச்சி அடைந்ததால் குப்பையில் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் காந்தி, காமராஜர் மார்க்கெட்டு களுக்கு தினந்தோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து இருக்கும். இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது பெரும்பாலான ஊர்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்து ள்ளதால் வெளியூர் வியாபாரிகள் வருவது குறைந்து விட்டது. குறிப்பாக உடுமலைப்பேட்டையில் இருந்து வரும் வியாபாரிகள் இல்லாததால் மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.

    காந்தி மார்க்கெட்டுக்கு 2 ஆயிரம் பெட்டிகளும், காமராஜர் மார்க்கெட்டுக்கு 2500 பெட்டிகளும் விற்பனைக்கு வந்தது. ஒரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.4.50 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிலும் முதல் தர தக்காளி மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டிச் சென்றனர். செடியை பராமரித்து தண்ணீர் விட்டு, ஆட்களை வைத்து பறித்து மார்க்கெட்டுக்கு எடுத்து வரும் செலவை கணக்கிட்டால் பெரிய அளவு நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் காய்கறி செடிகள், மலர் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளி விவசாயம் அதிக அளவு நடைபெற்று வந்தாலும் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைப்பதி ல்லை என்ற நிலை உள்ளது.

    எனவே அதிகாரிகள் இதனை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×