search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர் பலி"

    • விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர்:

    கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர் உள்பட 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி கர்நாடக பக்தர்கள் குழுவினர் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று இரவு ராமேசுவரத்திற்கு பஸ்சில் புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புல்லந்தை நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது கர்நாடக பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பெல்லாரியை சேர்ந்த கண்ணப்பா என்பவரின் மகன் சந்தீப்(வயது25) என்பவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர்.
    • மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது.

    வடவள்ளி:

    கோவை கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தேவராஜ்(வயது49).

    இவர் அந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் பாலாஜி தேவராஜ் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

    அப்போது தென் கயிலாய பக்தி பேரவை அமைப்பினர் மலைஏறுவதற்கு சிறப்பு அனுமதி பெற்றிருந்ததை அறிந்தார்.

    உடனடியாக அவர்களுடன் அந்த குழுவில் இணைந்து கொண்டார். நேற்று காலை அந்த குழுவினருடன், பாலாஜி தேவராஜூம் மலையேறினார்.

    3-வது மலையில் ஏறிகொண்டிருந்த போது பாலாஜி தனக்கு நெஞ்சுவலிப்பதாக தன்னுடன் வந்தவர்களிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மயங்கியும் விட்டார்.

    இதனால் அதிர்ச்சியான அவருடன் வந்தவர்கள், பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து பாலாஜி தேவராஜை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிய நாராயணனை மீட்டனர்.
    • 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாராயணனை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை காண தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதேபோல் இன்று காலை புதுச்சேரி மாநிலம் முருக்கம்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்த நாராயணன்(45), மலை அடிவாரத்தில் உள்ள முடி காணிக்கை அளிக்கும் இடத்தில், முடி காணிக்கை அளித்துவிட்டு, அங்குள்ள குளத்தில் குளிக்க இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.

    இதனை பார்த்த அருகில் இருந்த பக்தர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிய நாராயணனை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் பலியான நாராயணன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
    • பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    விருதுநகர் அருகே உள்ள சத்திரப்பட்டி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 45). இவர் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.

    நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிதறி ஓடினர். ரெங்கராஜன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெங்கராஜன் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பக்தர்கள் ஆபத்தான முறையில் பாத யாத்திரை செல்கின்றனர். போலீசார் இது போன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×