என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மயிலம் முருகன் கோவில் அருகே குளத்தில் குளித்த பக்தர் பலி
- சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிய நாராயணனை மீட்டனர்.
- 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாராயணனை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை காண தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் இன்று காலை புதுச்சேரி மாநிலம் முருக்கம்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்த நாராயணன்(45), மலை அடிவாரத்தில் உள்ள முடி காணிக்கை அளிக்கும் இடத்தில், முடி காணிக்கை அளித்துவிட்டு, அங்குள்ள குளத்தில் குளிக்க இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்த பக்தர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிய நாராயணனை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் பலியான நாராயணன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்