என் மலர்
நீங்கள் தேடியது "Velliangiri Mountains"
- இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- அதிர்ச்சியான நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி ரமேஷை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ரமேஷ் (வயது 42) என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு கோவில் அடிவாரம் வந்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறிய, ரமேஷ் சாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கீழே 6-வது மலையில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடும் குளிர் காரணமாக திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதைப்பார்த்ததும், அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர்.
இதுகுறித்து, ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரமேசின் உடலை கைப்பற்றி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்துபோன ரமேசின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இறந்துபோன ரமேசுக்கு திருமணமாகி ரேவதி (32) என்ற மனைவியும், 7 வயதிலும், 4 வயதிலும் இரு மகள்களும் உள்ளனர்.
- பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர்.
- மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது.
வடவள்ளி:
கோவை கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தேவராஜ்(வயது49).
இவர் அந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலாஜி தேவராஜ் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அப்போது தென் கயிலாய பக்தி பேரவை அமைப்பினர் மலைஏறுவதற்கு சிறப்பு அனுமதி பெற்றிருந்ததை அறிந்தார்.
உடனடியாக அவர்களுடன் அந்த குழுவில் இணைந்து கொண்டார். நேற்று காலை அந்த குழுவினருடன், பாலாஜி தேவராஜூம் மலையேறினார்.
3-வது மலையில் ஏறிகொண்டிருந்த போது பாலாஜி தனக்கு நெஞ்சுவலிப்பதாக தன்னுடன் வந்தவர்களிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மயங்கியும் விட்டார்.
இதனால் அதிர்ச்சியான அவருடன் வந்தவர்கள், பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பாலாஜி தேவராஜை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.