search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்புச்சுவர்"

    • தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது
    • பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.

    கூடலூர்:

    தமிழக எல்லையான குமுளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கேரள அரசு பஸ் சென்றது. இதில் 43 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் குமுளி அருகே வண்டிபெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் அய்யப்பா கல்லூரி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    மேலும் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பஸ் அந்தரத்தில் தொங்கிய இடத்தின் கீழ் ஒரு வீடு உள்ளது.

    பஸ் கவிழாமல் நின்றதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கட்டப்பட்டது
    • வனஅதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் ஊரு க்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரு கின்றன. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள காய்கறிகளை ருசித்து தின்று சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.

    இந்த நிலையில் தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளுக்கு சம்ப வத்தன்று 11 காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வந்தன. பின்னர் அவை விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த தென்னை, வாழை, தக்காளி, வெண்டை, முட்டைக்கோஸ், மஞ்சள் ஆகியவற்றை தின்றன. பின்னர் விளை பொருட்களை மிதித்து நாசமாக்கி விட்டு சென்றன.

    தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக விளை ந்து அறுவடைக்கு தயாரானநிலையில் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானைகள் மேற்கண்ட பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தகவலின்பேரில் கோவை மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜ் மற்றும் பயிர்ச்சேத தீர்வுக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான சு.பழனிச்சாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஒருவார காலத்துக்குள் உரிய சேத இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதற்கிடையே தொண்டாமுத்தூர் பகுதி யில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் தடுப்புச்சுவரை அமைப்பது என வனத்துறை அதிகாரிகள் முடிவுசெய்து உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் 4 தனிப்படை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அவர்கள் மலைஅடிவாரத்தில் திரியும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு யானைகள் மலைஅடிவார புதர்களுக்குள் மறைந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    எனவே தொண்டா முத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு பகுதியாக அய்யாசாமி மலைஅடிவாரத்தில் இருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவுக்கு ரூ.3 கோடி செலவில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் வேலியுடன் ஒருங்கிணைந்த தடுப்புச்சுவரை ஏற்படுத்துவது என வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு உள் ளது.

    இது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பவுன்ஸ் பேக் முறையில் அமைக்கப்படும். எனவே மலைஅடிவாரத்துக்கு வரும் காட்டு யானைகள் மேற்கண்ட தடுப்புச்சுவரை தாண்டி ஊருக்குள் வர முடியாது. மேலும் யானை உயிருக்கும் பாதிப்பு ஏற்படாது.

    தொண்டாமுத்தூர் பகுதியில் பவுன்ஸ்பேக் முறையிலான ஸ்பிரிங் தடுப்புச்சுவர் அமைப்பது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்ப டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆறுச்சாமி, சதாசிவம், லோக நாதன், ஈஸ்வரன், ரவி, வடிவேல், பாலு, வேணு கோபால், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது
    • 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் கொல் லங்கோடு பகுதியை சேர்ந்த வர் இர்வின் (வயது 50), லாரி டிரைவர். இவர் ஈரோடு பெருந்துறையில் இருந்து களியக்காவிளை அருகே பனச்சமூட்டிற்கு லாரியில் மாட்டு தீவ னங்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டார். இன்று அதிகாலையில் வட சேரி அண்ணா சிலை யிலிருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. திடீரென ரோட் டின் நடுவே வைக்கப்பட்டி ருந்த தடுப்பு கற்கள் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன் சக்கரமும் உடைந்தது.

    இதைத்தொடர்ந்து லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடுரோட் டில் லாரி தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. இதுகுறித்து நாகர்கோ வில் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த டிரை வர் இர்வினை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டனர். வடசேரியில் இருந்து பார்வதிபுரம் நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. வட சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லை மற்றும் வெளியூர்க ளுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது.

    ஆனால் லாரி விபத்தில் சிக்கிய பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்ட தையடுத்து போலீசார் அந்த பகுதியில் நின்று அதை சரி செய்யும் பணியை மேற் கொண்டனர். காலை நேரம் என்பதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து சென்றன.

    விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியை போலீசார் மேற்கொண்ட னர். லாரியில் இருந்த மாட்டு தீவன மூட்டைகள் இறக்கி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து கிரைன் மூலமாக லாரியை அகற்றும் பணியை போலீசார் மேற் கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் லாரியினுடைய ஸ்டேரிங் உடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக லாரி டிரைவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத் திற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அதே வேகத்தில் ரோட்டோரமாக இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதியது
    • காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    கன்னியாகுமரி :

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கி (வயது 34). இவர் இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.

    கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி இலங்காமணிபுரம்பகுதி யில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தாறு மாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோரமாக இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் டிரைவர் ராக்கி படுகாயம் அடைந் தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளத் தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தென்தாமரை குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
    • விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் 3 அரசு வங்கிகள், எம்.எல்.ஏ. அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், திருமண மண்டபங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துன்ன.

    விழா காலங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது சாலையில் மணல் தேங்கி நிற்பதால் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    வாகனங்கள் சேதமடைந்து விடுகிறது.

    விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறும்பேது, இவ்வழியே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது மணல் சறுக்கி விழுந்து விடுகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு வழிவிட்டு ஓரமாக செல்லும் போது மணலில் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர்.

    காயங்கள் ஏற்படுகிறது. சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணலை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்றார்.

    • சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது.
    • வாகன ஓட்டிகள் கைபிடி சுவர் இல்லாததால் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை -கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் பகுதியில் உள்ள அன்னுகுடி பாசன வாய்க்கால், அன்னுகுடி பிரிவு வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது. அதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள், கைபிடி சுவர் இல்லாததால் சில நேரங்களில் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    ஆகையால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரைமட்ட நிலையில் உள்ள அன்னுகுடி, வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் பாலத்தின் மீது தடுப்பு அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீன்பிடி துறைமுகம் 2-வது முறையாக‌ சேதமடைந்துள்ளது.
    • தூண்டில் வளைவில் தடுப்புச்சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம் 15அடி உயரம், 6 மீட்டர் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் கடந்த 2020ல் ஏற்பட்ட புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

    இந்நிலையில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் 2வது முறையாக‌ சேதமடைந்துள்ளது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது ஆறு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதை கடல் சீற்றம் காரணமாக 8 அடியில் இருந்து 10 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் தூண்டில் வளைவில் தடுப்பு சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி சேதமடைந்து உள்ளது.

    இது குறித்து மீனவர்கள் கூறுகையில்மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணியை தரமாக அமைக்காத காரணத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதில் நவீன தொழில்நுட்பம் செயல்படுத்தாமல் உள்ளது என மீனவர்கள் குற்றசாட்டி உள்ளனர்.

    இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • விவசாய நிலங்களுக்குள்ளும் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்.
    • கடல்நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் கடலோர முள்ள மண்டுவாகரை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர், கடலை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கத்தால் கடலில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    மேலும் விவசாய விளை நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது.

    சுமார் 100 ஏக்கர் அளவுக்கு பயிர்களை கடல் நீர் சூழந்துள்ளதால் அவைகள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது,

    நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் கடுமையாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.

    அதன் ஒரு பகுதியாக வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    கல்லாரில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் கடல் நீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் கடல் நீர் உட்புகுந்ததின் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுக்கு தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லூர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
    • கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும் கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல்நீர் உட்புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில்கடல் சீற்றத்தி ன்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெண் படுகாயம்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று அதிகாலை ஒரு கார் புறப்பட்டது.

    அந்த காரை கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சார்ந்த முகமது சாபி ஓட்டி வந்தார். காரின் பின் சீட்டில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜினா அமர்ந்திருந்தார்.

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதி யில் கார் வந்த போது எதிர்பா ராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரின் பின்இருக்கையில் அமர்ந்தி ருந்த அஜினா படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி னார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
    • நாதல்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

    சீர்காழி:

    சீர்காழியை அருகே உள்ள முதலை மேடு திட்டும், நாதல் படுகை கிராம மக்கள் ஒன்று திரண்டு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்தனர்.

    பின்னர் தாசில்தார் செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    தற்போது திட்டு கிராமத்தில் செய்து வரும் நிவாரண பணிகள் தற்காலிகமானது.

    நிரந்தரமாக தங்கள் பகுதிகளுக்கு செய்து தரவேண்டிய பணிகளாக கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.

    திட்டு கிராம சாலைகள் அனைத்தும் கான்கிரீட் சிமெண்ட் சாலைகளாக அமைத்து தர வேண்டும்.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவனை அமைத்து தரவேண்டும்.

    கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற பரிசீலனை செய்யவில்லை என்றால் வருகின்ற 4 -ஆம் தேதி கொள்ளிடம் கடைவீதியில் நாதலப்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளையாடி கொண்டிருந்த அமரன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கினான்.
    • வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்பு கம்பி அமைக்கப்படவில்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி செங்கல்மேடு கிராமம் கொடுக்கால்வலி தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம்-ரஞ்சிதா ஆகியோரின் இரண்டரை வயது மகன் அமரன்.

    அமரனை நேற்று அவரின் தாய் ரஞ்சிதா அழைத்துக் கொண்டு கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அலுவலக வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அமரன், அலுவலகத்திலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டான்.

    தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் சிறுவன் அமரனை அப்பகுதியில் உள்ளவர்கள் வாய்க்காலில் சென்று தேடினர்.

    பின்னர் கொள்ளிடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் அமரனின் உடல் மிதந்ததை கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தெற்கு ராஜன் வாய்க்கால் கரையில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அலுவலகம் எதிரே எந்த தடுப்புச் சுவரோ, தடுப்பு கம்பியோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்படவில்லை.

    அஞ்சல் அலுவலகம் எதிரே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைத்திருந்தால் கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பாக அமையும்.

    எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பு கருதி அஞ்சல் அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×