search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ.3 கோடி செலவில் நவீன ஸ்பிரிங் தடுப்புச்சுவர்
    X

    தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ.3 கோடி செலவில் நவீன ஸ்பிரிங் தடுப்புச்சுவர்

    • யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கட்டப்பட்டது
    • வனஅதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் ஊரு க்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரு கின்றன. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள காய்கறிகளை ருசித்து தின்று சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.

    இந்த நிலையில் தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளுக்கு சம்ப வத்தன்று 11 காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வந்தன. பின்னர் அவை விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த தென்னை, வாழை, தக்காளி, வெண்டை, முட்டைக்கோஸ், மஞ்சள் ஆகியவற்றை தின்றன. பின்னர் விளை பொருட்களை மிதித்து நாசமாக்கி விட்டு சென்றன.

    தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக விளை ந்து அறுவடைக்கு தயாரானநிலையில் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானைகள் மேற்கண்ட பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தகவலின்பேரில் கோவை மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜ் மற்றும் பயிர்ச்சேத தீர்வுக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான சு.பழனிச்சாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஒருவார காலத்துக்குள் உரிய சேத இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதற்கிடையே தொண்டாமுத்தூர் பகுதி யில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் தடுப்புச்சுவரை அமைப்பது என வனத்துறை அதிகாரிகள் முடிவுசெய்து உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் 4 தனிப்படை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அவர்கள் மலைஅடிவாரத்தில் திரியும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு யானைகள் மலைஅடிவார புதர்களுக்குள் மறைந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    எனவே தொண்டா முத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு பகுதியாக அய்யாசாமி மலைஅடிவாரத்தில் இருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவுக்கு ரூ.3 கோடி செலவில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் வேலியுடன் ஒருங்கிணைந்த தடுப்புச்சுவரை ஏற்படுத்துவது என வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு உள் ளது.

    இது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பவுன்ஸ் பேக் முறையில் அமைக்கப்படும். எனவே மலைஅடிவாரத்துக்கு வரும் காட்டு யானைகள் மேற்கண்ட தடுப்புச்சுவரை தாண்டி ஊருக்குள் வர முடியாது. மேலும் யானை உயிருக்கும் பாதிப்பு ஏற்படாது.

    தொண்டாமுத்தூர் பகுதியில் பவுன்ஸ்பேக் முறையிலான ஸ்பிரிங் தடுப்புச்சுவர் அமைப்பது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்ப டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆறுச்சாமி, சதாசிவம், லோக நாதன், ஈஸ்வரன், ரவி, வடிவேல், பாலு, வேணு கோபால், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×