என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோழிக்கறி"
- இரவு கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர்.
- ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கவுதம் ஆனந்திற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் பெரியபொக்கம்பட்டியில் வசித்து வந்தவர் கவுதம் ஆனந்த் (வயது 33). இவரது மனைவி பவித்ரா. இவர்களுடைய 4 வயது மகள் மிதுஸ்ரீ. நேற்று முன்தினம் இரவு கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டனர். சிறிதுநேரத்தில் சிறுமி மிதுஸ்ரீக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தாள். அவளை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கவுதம் ஆனந்திற்கும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், நேற்று அதிகாலை மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தாள். மகள் இறந்ததை அறிந்து கவுதம் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். திடீரென அவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாகவும், அதை சமைத்து சாப்பிட்டதால் இருவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்