என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கோயம்பத்தூர்
நீங்கள் தேடியது "கோயம்பத்தூர்"
டெல்லியில் நடைபெற்ற தேசிய மார்சியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 10 மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். #NationalMartialArtsGames
புதுடெல்லி:
3-வது தேசிய மார்சியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் கடந்த 25-27ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டைகர் கான் கராத்தே மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் பள்ளியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவரும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
குமிட்டி பிரிவில் தக்ஷதா ராம்குமார், தர்ஷா ராம்குமார், அதிபிரபு நாகராஜன், சவ்ரவ் கண்ணன், சக்தீஸ்வரி ஸ்ரீனிவாசன், சவ்மியா சுந்தராஜ், நந்திதா செல்வராஜ், நிலேஷ் சுரேஷ் ஆகிய 8 பேரும், ஹிரித்திகைலாஷ் ரவிசந்திரன், கமலேஷ் விஜயகுமார் ஆகிய இருவரும் குமிட்டி மற்றும் கட்டா ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் ஆசிய மார்சியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NationalMartialArtsGames
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X