search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கல்லூரி"

    • விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    • தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி புதிய கட்டிட பணிகள் முடிவுற்று தற்போது திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.

    மின்மாற்றி

    இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் இந்த மின் மாற்றி கல்லூரியின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில் மின்சார வாரிய செயற் பொறியாளர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இந்த மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    இதில் மின்வாரிய இளநிலை செயற்பொறி யாளர் கணேஷ் ராம கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி ராமதாஸ், முஜ்பின் ரகுமான், கல்லூரி பேராசிரியர்கள் வேணு கோபால், பாலமுருகன், தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதய குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செய லாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவா
    • திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பேரவை நிர்வாகிகளுக்கு முதல்வர், பேராசிரியர்கள் ரகுபதி, சரவணா தேவி, ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பிளஸ்-2 படித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார்.

    அவர்களுக்கு வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர். இது குறித்து முதல்வர் ரேணுகா கூறுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது என்றார்.

    • கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    • கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 -ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரியில், கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்கு முனனால் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்த கால நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய நிகழ்வாக 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை, தீயணைப்பு துறை, ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி, கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பல்வேறு நண்பர்கள் மூலம் செய்யப்பட்டு இருந்தது.

    சட்டசபையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில் :

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றபோது முன்னா ள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பி னருமான தளவாய்சுந்தரம் பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    அஞ்சுகிராமம் பேரூரா ட்சியில் பால்குளம் பகுதி யில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பயின்று வருகி ன்ற அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் சுமார் 90 சதவீதம் மாணவ, மாணவிகள் சட்டப்பேரவை சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவ, மாணவிகளே அதிக அளவு பயின்று வருகின்றனர். கல்லூரியில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனர். அதனால் கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவ தற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வலியு றுத்தினார்.

    இதற்கு பதிலளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததன்படி காமராஜர் கல்வி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் இதுபோன்ற கல்லூரிகளில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக்கூடகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தின் கோரிக்கை நிறை வேற்றப்படும் என பேசினார்.

    • 72 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை பரப்பளவு உள்ளது
    • மாணவ- மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் தலைமை தாங்கினார்.

    பேரிடர் காலங்களில் கட்டிடத்தின் மாடியில் சிக்கி இருப்பவர்களை மீட்பது எப்படி? வெள்ளத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகை செய்து காட்டினர்.

    கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் தண்ணீரில் சிக்கினால் எப்படி தற்காத்துக் கொள்வது? என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி மூலமாக மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரை 72 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை பரப்பளவு உள்ளது. மேலும் மலைகள் அதிகம் இருப்பதால் மழைப்பொழிவு அதிகம் இருக்கும். எனவே வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மழை காலங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். பேரிடரில் சிக்கிக் கொண்டால் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவ- மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.

    தாராபுரம்:

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 2022-23 தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கையின் படி அரசு கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றம் துவக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கல்லூரிகளுக்கு 5 லட்சம் வீதம் வைப்பு நிதியாக வழங்க 5 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிதியின் வாயிலாக கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் ஆண்டுதோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் வைப்பு நிதியில் வட்டி கிடைக்காது என்பதால் போட்டிகள் நடத்த 36 லட்சம் ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் தமிழ் மன்றம் செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்த கூடாது.

    மாணவர் மன்ற போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை நடத்தும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில்,அரசு கல்லூரிகளில் தமிழ்த்துறை மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்த மன்றங்கள் உள்ளன. புதிதாக தமிழ் மன்றம் துவக்குவதால் மாற்றங்கள் ஏதும் அதில் இருக்க போவதில்லை. மாணவர்கள் சிலர் கட்சி சார்ந்த சாராத அமைப்புகளில் இருக்கின்றனர். இவர்கள் மன்ற செயல்பாடுகளை திசை திருப்ப வாய்ப்புள்ளது. மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.

    மன்ற செயல்பாடுகளுக்கு தெளிவான விதிமுறைகளையும் வகுக்க வேண்டியது அவசியம் என்றார்.

    • வருகிற 12-ந் தேதி நடக்கிறது
    • 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    அரசு திருமகள் ஆலை கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    இதில் கணிதம், பொருளியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்காத அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு கல்லூரியிலேயே வருகிற 10 மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நேரடியாக விண்ணப்பம் வழங்கப்படும்.நேரடியாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதி சேர்க்கை நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிக்கப்பு நிலையத்தை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
    • இந்த சுத்தியடைப்பு நிலையம் 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் 50 ஆண்டுகால பழமையான மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சிவகாங்கை நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தியடைப்பு நிலையத்தை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த் திறந்து வைத்தார்.

    அப்போது கல்லூரிக்கு தேவையான மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அரசு மற்றும் தன்னார்வலர்களை கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நகர்மன்ற தலைவர் உறுதியளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் திலகவதி கண்ணன், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமான பங்கேற்றனர்.

    • இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 87 சதவீதம் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.
    • மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 87 சதவீதம் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இதில் பி.காம்.சர்வதேச வணிகம், பி.ஏ.தமிழ் இலக்கியம், பொருளியல், வரலாறு, பி.எஸ்சி.ஆடை வடிவமைப்பு நாகரி–கம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர் சோ்க்கை முழுமை அடைந்துள்ளது.

    மற்ற பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அடுத்தக்கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படும். கல்லூரியில் வருகிற 22-ந் தேதி பாட வகுப்புகள் தொடங்குகிறது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இத்தகவலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன.
    • தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2- ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர். சோ.கி.கல்யாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்த 864 இடங்களில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 286 காலி இடங்களுக்கு 2- ம் கட்ட கலந்தாய்வு 12 ம் தேதி நடைபெற உள்ளது.அறிவியல் பாடப்பிரிவு தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்களில், இயற்பியல்,கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்குத் தகுதியுள்ள, பிளஸ்-2வில் கணிதம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

    கணினி அறிவியல்(சுழற்சி II),தாவரவியல் ,வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பில் (பிசி.,) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த, பிளஸ்-2வில் – கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் 12 -ந் தேதியன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

    கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பிபிஏ, பி.காம், பிகாம்(சிஏ), பி.காம்(இ.காம்) , அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வில்,பிளஸ்-2வில் தொழில்முறை பாடப்பிரிவில் பயின்ற, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு தரவரிசை 1208 முதல் 2651 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம்.இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள பின்தங்கிய வகுப்பு (பி.சி.,) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பு (எம்.பி.சி.) இடங்களுக்கு மட்டும், தமிழ் பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் 12.6.2023 அன்று பிற்பகல் 1மணிக்குக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு அனைத்து வகுப்பினை சேர்ந்த, ஆங்கில பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களும் 2- ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முதல் கட்ட கலந்தாய்வில் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. இதில் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். 2- ம் கட்ட கலந்தாய்வு வருகிற12-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

    2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. இளநிலை அறிவியல் பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 81 மாணவர்கள் சேர்ந்தனர்.அதைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் 38 மாணவர்களும் ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் 24 மாணவர்களும் சேர்ந்தனர் .அந்த வகையில் இயற்பியல் பாடப்பிரிவில் 23 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 13 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,புள்ளியியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவுகளில் 11 மாணவர்களும்,அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் 8 மாணவர்களும்,கணினி அறிவியல் பாடப் பிரிவில் 20 மாணவர்களும்,தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் 38 மாணவர்களும், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவில் 24 மாணவர்களும்ஆ க மொத்தம் 143 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

    இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் இளநிலை கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 382 மாணவர்களும்,இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் 196 மாணவர்களும் ஆக மொத்தம் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான 2- ம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 12 ந் தேதியன்று இனசுழற்சி மற்றும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள வருகை தரும் மாணவர்கள் 10 ,11, 12ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்றுச் சான்றிதழ் , ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரி கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் .இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    ×