என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அடிப்படை வசதி செய்து தர கோரி உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
- கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
- மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை :
உடுமலை எல்லை மற்றும் பிரிவு ரோடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தருமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கூறி இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் வகுப்புகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாணவர்கள் தரப்பில் கல்லூரி வளாகத்திற்குள் குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்க வேண்டும். அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாணவர்களின் புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்