search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியபோது எடுத்த படம். 

    சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

    • தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியி னர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழி வாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×