search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியத்தில் அரசு கல்லூரி அமைக்க இடம் ஆய்வு
    X

    தொட்டியத்தில் அரசு கல்லூரி அமைக்க இடம் ஆய்வு

    • தொட்டியத்தில் அரசு மகளிர் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்
    • தொட்டியத்தை அடுத்த மேலக் காரைக்காட்டில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தொட்டியம் பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினார்.

    அதன் தொடர்ச்சியாக தொட்டியத்தை அடுத்த மேலக் காரைக்காட்டில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க இடம் ஆய்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன்,

    கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக துணை இயக்குனர் கார்த்திக் ஆகியோர் கல்லூரி அமைக்க இடம் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலா.ந.திருஞானம், தா.பேட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாப்பாபட்டி க.பெரியசாமி, தொட்டியம் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி,

    தொட்டியம் நகர கழக செயலாளர் எம்.ஏ.ஆர்.விஜய்ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.புத்தூர் கோவிந்தராசு, எல்.ஆர்.எஸ். சுப்பிரமணி, கார்த்திகைப்பட்டி லோகநாதன், மேலக் காரைக்காடு திருப்பதி, மனோகரன் மற்றும் தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×