என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமைச்சர் ஓஎஸ் மணியன்
நீங்கள் தேடியது "அமைச்சர் ஓஎஸ் மணியன்"
கவர்னர் குறித்து ஸ்டாலின் பேசியதற்கு விளக்கம் கூற முயன்ற ஓ.எஸ் மணியனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #TNAssembly
சென்னை:
சட்டசபையில் கவர்னர் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக ஒரு விளக்கத்தை சொல்ல கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு சபாநாயகர் பேச அனுமதி மறுத்தார்.
ஏற்கனவே கவர்னர் குறித்து இங்கு மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்லிவிட்டேன். எனவே நீங்கள் அதுதொடர்பாக பேசி புதுப்பிரச்சினைக்கு போக வேண்டாம் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கேட்காமலேயே ஏன் பேசவேண்டாம் என்கிறீர்கள் என்று சபாநாயகரை பார்த்து கேட்டார். இதனால், சபாநாயகருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சபாநாயகர் கூறுகையில், ‘‘நீங்கள் பேசுவது எனக்கு சரியாக படாவிட்டால் உங்கள் பேச்சை நீக்க வேண்டியது வரும் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தான் சொல்ல நினைத்த கருத்தை எப்படியும் பேசியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பேச முற்பட்டார்.
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, கவர்னர் பற்றி மேற் கொண்டு பேச வேண்டாம் என்ற கருத்தில் சில வார்த்தைகளை தெரிவித்தார். உடனே சபாநாயகர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பேச வாய்ப்பு வழங்காமல் வேறு நிகழ்ச்சி நிரலை நடத்த தொடங்கினார்.
தன்னை பேச அனுமதியுங்கள் என்று நின்று கொண்டிருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனக்கு பேச வாய்ப்பு கிடைக்காததால் கோபத்தில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர், உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X