என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்
Byமாலை மலர்29 Aug 2018 8:06 AM GMT (Updated: 29 Aug 2018 8:06 AM GMT)
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அப்படிப்பட்டவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #DMK #Thirunavukkarasar
கோவை:
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று அவர் கூடுதலாக சில பகுதிகளுக்கு செல்வதால் அவர் கோவை வருவதில் தாமதம் ஆகி இருக்கிறது என்றார்.
கேள்வி-எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?
பதில்- பொன்.ராதாகிருஷ்ணன் அப்படித்தான் சொல்லி ஆக வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா இப்போதும் வீழ்ந்து தான் கிடக்கிறது. அதை வீழ்த்தவேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி- மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தகுதி கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறாரே?
பதில்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அனுபவம் மிக்கவர். அப்படிப்பட்டவரை அமைச்சராக இருக்கும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது, தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்துக்குரியது.
கேள்வி-நீங்கள் பா.ஜனதாவுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
பதில்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யோசனைகளுக்கு நன்றி. அவர், அவரது எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும். அவர் இது போன்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கேள்வி-அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசல் பற்றி என்ன கருதுகிறீர்கள்.
பதில்- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு உடைந்து இருக்கிறது. மதுசூதனனுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடைப்பட்ட பிரச்சினையை பஞ்சாயத்து செய்யும் நிலையில் முதல்-அமைச்சர் இருக்கிறார். ஒரே தலைமை இல்லாமல் இரட்டை குதிரையில் அ.தி.மு.க. சவாரி செய்வதால் கட்சியும், ஆட்சியும் சரியில்லாமல் இருக்கிறது. அ.தி.மு.க. போய் சேரவேண்டிய இடம், போய் சேராது.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #Thirunavukkarasar
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று அவர் கூடுதலாக சில பகுதிகளுக்கு செல்வதால் அவர் கோவை வருவதில் தாமதம் ஆகி இருக்கிறது என்றார்.
கேள்வி-எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?
பதில்- பொன்.ராதாகிருஷ்ணன் அப்படித்தான் சொல்லி ஆக வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா இப்போதும் வீழ்ந்து தான் கிடக்கிறது. அதை வீழ்த்தவேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி- மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தகுதி கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறாரே?
பதில்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அனுபவம் மிக்கவர். அப்படிப்பட்டவரை அமைச்சராக இருக்கும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது, தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்துக்குரியது.
கேள்வி-நீங்கள் பா.ஜனதாவுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
பதில்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யோசனைகளுக்கு நன்றி. அவர், அவரது எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும். அவர் இது போன்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கேள்வி-அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசல் பற்றி என்ன கருதுகிறீர்கள்.
பதில்- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு உடைந்து இருக்கிறது. மதுசூதனனுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடைப்பட்ட பிரச்சினையை பஞ்சாயத்து செய்யும் நிலையில் முதல்-அமைச்சர் இருக்கிறார். ஒரே தலைமை இல்லாமல் இரட்டை குதிரையில் அ.தி.மு.க. சவாரி செய்வதால் கட்சியும், ஆட்சியும் சரியில்லாமல் இருக்கிறது. அ.தி.மு.க. போய் சேரவேண்டிய இடம், போய் சேராது.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #Thirunavukkarasar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X