search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knitting"

    • பொது பயன்பாட்டு மையத்தில் அனைத்து மெஷின்கள் நிறுவும்பணி நிறைவடைந்துள்ளது.
    • நிட்டிங் நிறுவனங்களின் தேவையை பொருத்து துணி உற்பத்தியும் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியின் முதல் நிலையில் உள்ள நிட்டிங் துறையை பலப்படுத்துவதற்காக பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை நிறுவியுள்ளது, சிம்கா சங்கம். 40 நிட்டிங் நிறுவனங்கள் கரம்கோர்த்து 26 ஆயிரம் சதுர அடியில் நிட்டிங் மெஷின் கூடம், தொழிலாளர் திறன் பயிற்சி மையம், ஒர்க்ஷாப் , நூல் மற்றும் துணி ஆய்வக கட்டமைப்பு வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 15.35 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 8.35 கோடி ரூபாய், மாநில அரசு 3 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளன. நிட்டிங் துறையினர் 4 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நிட்டிங் மெஷின்கள் படிப்படியாக இறக்குமதி செய்து பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்பட்டு வந்தது. கடந்தாண்டு திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

    இறுதிகட்டமாக தற்போது சீன கிளவுஸ் நிட்டிங் மெஷின்கள் வந்துள்ளன. இதனால் பொது பயன்பாட்டு மையத்தில் அனைத்து மெஷின்கள் நிறுவும்பணி நிறைவடைந்துள்ளது.

    பொது பயன்பாட்டு மைய செயல்பாடுகள் குறித்து, 'சிம்கா' சங்க தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

    நிறுவப்பட்டுள்ள எந்திரங்களில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி நிட்டிங் நிறுவனங்களின் தேவையை பொருத்து துணி உற்பத்தியும் மேற்கொள்ளப்படும். நவீன மெஷின்களால் திருப்பூரில் மதிப்பு கூட்டப்பட்ட பின்னல் துணி உற்பத்தி அதிகரிக்கும். பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், புதுமையான பின்னலாடை ரகங்களை தயாரித்து உலகளாவிய சந்தை வாய்ப்புகளை வசப்படுத்த முடியும்.

    பொது பயன்பாட்டு மையத்தில் அமைக்கப்படும் பயிற்சி மையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நிட்டிங் மெஷின் ஆபரேட்டர், போர்மேன், டெக்னீஷியன் பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிட்டிங் தொழிலாளர்களுக்கான பயிற்சியும் துவக்கப்படும்.நூல் மற்றும் துணியின் தரம் மற்றும் குறைபாடுகளை கண்டறிவதற்கான சர்வதேச தரத்தில் பரிசோதிக்க ஆய்வகம், மெஷின்கள் பழுதுநீக்கும் ஒர்க் ஷாப் ஆகியன அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.15.35 கோடி மதிப்பில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக முதல்-அமைச்சர் காணொலி மூலம் மையத்தை திறந்து வைத்தார்.

    திருப்பூர் :

    பல்லடம் அருகே நாரணாபுரத்தில் ரூ.15.35 கோடி மதிப்பில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரை சேர்ந்த 40 நிட்டிங் நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து மத்திய, மாநில அரசு மானியத்துடன் தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) இம்மையத்தை உருவாக்கியுள்ளது.திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விழா மேடையில் இருந்தவாறு, காணொலி மூலம் மையத்தை திறந்து வைத்தார். பொது பயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் விவேகானந்தன், இயக்குனர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து பொதுபயன்பாட்டு மையம் செயல்பாட்டை துவக்கியுள்ளது.

    இது குறித்து விவேகானந்தன் கூறியதாவது :- பொதுபயன்பாட்டு மையத்தில் தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய காலர் நிட்டிங், சர்க்குலர் நிட்டிங் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. திருப்பூரில் 10ஆயிரம் நிட்டிங் நிறுவனங்கள் உள்ளன.ஹெல்பர், ஆபரேட்டர், போர்மேன், சர்வீஸ் என்ஜினீயர், டெக்னீஷியன் என 5 வகை பணியிடங்கள் உள்ளன. பொதுபயன்பாட்டு மையத்தில் தொழிலாளர்களுக்கு இப்பிரிவுகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சி முடிப்போருக்கு அரசு அதிகாரிகள் அங்கீகாரத்துடன் கூடிய சான்று மற்றும் நிட்டிங் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு அளிக்கப்படும். திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதன் மூலம் நிட்டிங் துறை மேலும் பலம் பெறும்.அதிநவீன நிட்டிங் மெஷின்களை பயன்படுத்தி டெனிம், புள்பாடி கார்மென்ட், தொழிற்சாலை பயன்பாட்டு கிளவுஸ் என பல்வேறுவகை மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள் தயாரிக்கப்படும். பொதுபயன்பாட்டு மைய உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து ஆடை உற்பத்தி துறையினரும் இம்மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மையத்தால் பின்னலாடை துறையின் லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கிய பயணம் அதிவேகம் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நூல் விலையை உயர்வால் கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் மந்தமாகியுள்ளது.
    • 3 மாதங்களாக 3 முதல் நான்கு எந்திரங்களை மட்டுமே இயக்க முடிகிறது.

    திருப்பூர் :

    பஞ்சு விலை உயர்வால், தமிழக நூற்பாலைகள் 18 மாதங்களாக தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வந்தன. ஆடை ரகங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதன் எதிரொலியாக வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து திருப்பூருக்கு பின்னலாடை ஆர்டர் வருகை குறையத்துவங்கியது. நிட்டிங், டையிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் என பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து துறைகளின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1-ந் தேதி கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் உற்பத்தி சங்கிலியின் முதல் நிலையில் உள்ள நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் இன்னும் வேகம் பெறவில்லை. ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து துணி தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைவால் நிட்டிங் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து நிட்டிங் நிறுவனஉரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    தொடர் நூல் விலை உயர்வால், கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் மந்தமாகியுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 15 நிட்டிங் எந்திரங்கள் உள்ளன. 10 ஆபரேட்டர்கள், பகல் இரவுக்கு தலா 2 வீதம் நான்கு ஹெல்பர்கள் பணியில் இருந்தனர். நாளொன்றுக்கு (2 ஷிப்ட்) 3ஆயிரம் கிலோ பின்னல் துணி தயாரானது.ஆனால் கடந்த 3 மாதங்களாக 3 முதல் நான்கு எந்திரங்களை மட்டுமே இயக்க முடிகிறது. நாளொன்றுக்கு 900 கிலோ அளவிலேயே துணி தயாரிப்பு நடக்கிறது.

    நான்கு ஆபரேட்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.பகலில் மட்டும் ஒரு ஹெல்பரை பணி அமர்த்தியுள்ளோம். துணி வியாபாரமும் மந்தமாகிவிட்டது. அதனால் துணி வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெறமுடியாத நிலைக்கு நிட்டிங் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

    இம்மாதம் கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலை குறைந்துள்ளது. இதுனால் துணி தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். நூல் விலை மேலும் குறையும் என்கிற எதிர்பார்ப்பில் பெரும்பாலான ஆடை உற்பத்தியாளர்கள் நூல் கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.

    ஏற்றுமதியாளர்களை பொறுத்தவரை நூல் விலை எவ்வளவு உயர்ந்தாலும் கைவசம் ஆர்டர் இருந்தால், கட்டாயம் நூல் கொள்முதல் செய்து விடுவர். சீசன் இல்லாததால் வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது. எனவே நிட்டிங் உள்பட பின்னலாடை உற்பத்தி சங்கிலி, இயல்பான இயக்கத்துக்கு வருவதற்கு மேலும் இரண்டு மாதங்களாகும் நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகள் அதிமுக சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கஜா புயலினால் ஆயிரக்கணக்கான வீடுகளும் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும் சாய்ந்தன. பலத்த சேதமடைந்த வேதாரண்யம் பகுதியில் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    புயலில் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி புதிதாக தென்னங்கன்றுகளை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மட்டைகள் விழுந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இவற்றை பார்வையிட்ட அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதித்த கூரை வீடுகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 6 லட்சம் கீற்றுகள் அரசு மூலம் வாங்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சுமார் 36 ஆயிரம் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இவற்றை சரிசெய்ய வெளி மாவட்டங்களிலிருந்து கீற்றை கொண்டுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    எனவே நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகளை நூறு கீற்றுகள் ரூ.800க்கு அ.தி.மு.க. சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    கஜா புயல் பாதித்த கோடியக்கரைக்கு நூறு சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 35 ஊராட்சிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். 35 ஊராட்சிகளிலும் மின் விநியோகத்தை சீர்செய்ய 3 அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது மின்சாரம் கிடைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    புயல் பாதித்த 181 வருவாய் கிராமங்களில் 105 வருவாய் கிராமங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வருவாய் கிராமங்களுக்கு இன்று வரவு வைக்கப்படும்.

    இந்த தொகை வரவு வைக்கப்பட்ட உடன் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தொகையாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×