search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OS Manian"

    • தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    2021 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றது.

    அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

    ரூ.60 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் செய்தும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் வெற்றி பெற்றதாக வேதரத்தினம் தரப்பினர் வாதிட்டனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் எனவும் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.

    நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகள் அதிமுக சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கஜா புயலினால் ஆயிரக்கணக்கான வீடுகளும் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும் சாய்ந்தன. பலத்த சேதமடைந்த வேதாரண்யம் பகுதியில் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    புயலில் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி புதிதாக தென்னங்கன்றுகளை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மட்டைகள் விழுந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இவற்றை பார்வையிட்ட அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதித்த கூரை வீடுகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 6 லட்சம் கீற்றுகள் அரசு மூலம் வாங்கப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சுமார் 36 ஆயிரம் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இவற்றை சரிசெய்ய வெளி மாவட்டங்களிலிருந்து கீற்றை கொண்டுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    எனவே நூறு நாள் வேலை வாய்ப்பில் தென்னங்கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முடைந்த கீற்றுகளை நூறு கீற்றுகள் ரூ.800க்கு அ.தி.மு.க. சார்பில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    கஜா புயல் பாதித்த கோடியக்கரைக்கு நூறு சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 35 ஊராட்சிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். 35 ஊராட்சிகளிலும் மின் விநியோகத்தை சீர்செய்ய 3 அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது மின்சாரம் கிடைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    புயல் பாதித்த 181 வருவாய் கிராமங்களில் 105 வருவாய் கிராமங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வருவாய் கிராமங்களுக்கு இன்று வரவு வைக்கப்படும்.

    இந்த தொகை வரவு வைக்கப்பட்ட உடன் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தொகையாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் ஒரு வாலிபர் பாயும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 18-ந்தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட சென்றபோது அவரது காரை சிலர் வழிமறித்து அடித்து நொறுக்கினர்.

    இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி மனோகரன்(வயது 53), கவியரசன்(30), ராமச்சந்திரன்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். நேற்று வீரசேகரன்(30), அவரது தம்பி பன்னீர்செல்வம்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


    இந்த நிலையில் அமைச்சர் சென்ற காரை சிலர் வழிமறித்து தாக்குவதும், அமைச்சரின் காரை நோக்கி ஒரு வாலிபர் அரிவாளால் வெட்ட பாய்ந்து செல்வது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.

    அந்த சமயத்தில் அமைச்சரின் கார் வேகமாக பின்னோக்கி சென்றதால், அவர்கள் அமைச்சர் காருடன் வந்த மற்றொரு காரை அடித்து நொறுக்குவது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ காட்சி தற்போது நாகை மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian
    ×