என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓஎஸ் மணியன்"

    • எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடியது அல்ல.
    • விண்ணப்பம் மிகமிக எளிமையான வகையில் உள்ளது.

    குத்தாலம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மயிலாடுதுறை அருகே வழுவூருக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல. புதிதாக ஏதோ ஒன்றை தேர்தல் ஆணையம் திணிப்பதாக கருத வேண்டாம். ஏற்கனவே இது நடைபெற்றுள்ளது. தற்போது மீண்டும் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடியது அல்ல. இது நல்ல முறை. வரவேற்கத்தக்கது, ஏற்றுக்கொள்ளத்தக்கது.

    இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

    வாக்களர் பட்டியல் திருத்தத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்வதில் கிராமப் பகுதி மக்களுக்கு கடினமாக இருக்கும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, இதிலிருந்தே அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும்.

    விண்ணப்பம் மிகமிக எளிமையான வகையில் உள்ளது. சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக அதில் வாக்குச்சாவடி அலுவலரின் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் கடினமாக உள்ளது என்று சொல்வது வினோதமாக உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, பிரிந்து சென்றவர்கள் முதலில் மன்னிப்பு கேட்டு வரட்டும். பொதுச்செயலாளரிடம் நாங்களும் பேசுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக-வில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளனர்.
    • நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

    அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சீனியர் தலைவர் செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார். பல தலைவர்கள் பிரிந்து சென்றுள்ளனர்.

    துரோகம் செய்தவர்களுக்கு ஒருபோதும் கட்சியில் மீண்டும் இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில்தான், நீக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் 2026 சட்டமன்ற தேர்தலை நீக்கப்பட்ட, பிரிந்து சென்றவர்களை இணைத்து அதிமுக சந்திக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ.எஸ். மணியன் "மன்னிப்பு கேட்டு வரட்டும்: பொதுச் செயலாளரிடம் நாங்களும் பேசுகிறோம்" என்றார்.

    • தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    2021 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றது.

    அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் தரப்பில் வாதிடப்பட்டது.

    ரூ.60 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் செய்தும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் வெற்றி பெற்றதாக வேதரத்தினம் தரப்பினர் வாதிட்டனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் எனவும் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.

    • கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் சுவற்றின் மீது மோதி நின்றது.
    • விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் சுவர் பலத்த சேதமடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன்.

    இவர் இன்று வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூருக்கு காரில் புறப்பட்டார். காரில் முன்இருக்கையில் ஓ.எஸ்.மணியன் அமர்ந்திருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.

    கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இருந்தாலும் ஓ.எஸ்.மணியன், டிரைவர் ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக சென்றனர்.

    இந்த விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×