search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooptex"

    எழும்பூரில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகையில் தீபாவளி சிறப்பு விற்பனை நிலையத்தை கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
    சென்னை:

    கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம் அகில இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. எழும்பூரில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகையில் தீபாவளி சிறப்பு விற்பனை நிலையத்தை கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அனைத்து விற்பனை நிலையங்களிலும் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி கோ- ஆப்டெக்ஸ்சில் 1000 புட்டா, சில்க் காட்டன் சேலைகள், மகளிருக்கான பட்டு துப்பட்டாக்கள், பருத்தி துப்பட்டாக்கள், ஆடை ரகங்கள், அலங்காரகைப்பைகள், ஆண்களுக்கான பருத்தி சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    முன்னதாக கோ-ஆப் டெக்சின் 2017-18-ம் ஆண்டு தங்கமழை திட்டத்தின் கீழ் சென்னை மண்டலத்தில் வெற்றிபெற்ற வாடிக்கையாளர்கள் 5 பேருக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்க காசுகளையும் 15 பேருக்கு 2-ம் பரிசாக 4 கிராம் தங்க காசுகளையும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கைத்தறி, கதர்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ், கதர்துறை இயக்குனர் முனியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ×