search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election coalition decided"

    தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterOSManian

    மதுரை:

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கைத்தறி ஆதவுத் திட்டம் குறித்து கைத்தறி நெசவாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, கருத்துகளை கேட்பதற்காக காஞ்சீபுரம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

    அதேபோன்று இன்று மதுரையில் 3-வது கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் வீரராகவ ராவ், கதர் துறையின் அரசு முதன்மை செயலர் பணீந்திரரெட்டி , கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும் போது, தமிழகத்தில் மிக கவுரவமான தொழில் கைத்தறி தொழில் மட்டுமே.

    இந்த ஆண்டும் நெசவாளர் மக்களுக்கு பசுமை வீடு மற்றும் விலையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

    அரசின் கைத்தறி துறை இன்னும் ஒரு சில கஷ்டத்தை சந்திக்க உள்ளது. அது என்னவென்றால் தரமான பட்டு மற்றும் பருத்தி ஆகியவற்றின் உண்மை தன்மை மக்களுக்கு புரியாமல் உள்ளது. கலப்பட பொருட்களை தான் மக்கள் விரும்புகிறார்கள்.

    ஸ்மார்ட் கார்டு வந்த பின் இலவச வேஷ்டி சேலைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கைத்தறி என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்துள்ளது.

    கூட்டம் முடிந்ததும் அவர் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு ஆதரவாக எந்த திட்டம் வந்தாலும் ஆதரிப்போம், மாறாக பாதிப்பாக வந்தல் மத்திய அரசை எதிர்ப்போம் இளைஞர்கள் மேலைநாட்டின் உடைகளை விரும்பி அணிவதால் புடவை விற்பனை குறைகிறது.

    அதற்கு ஏற்றவாறு கைத்தறியிலும் சுடிதார் உள்ளிட்ட ஆடைகளை தயாரிக்க மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதன் முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது அ.தி.மு.க. அது போல தற்போதும் தொடங்கி இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.#MinisterOSManian

    ×