search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac shop"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    • சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை,

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்களிடம் பே.டி.எம். கியூஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இது மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


    இதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை என்று மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுக்கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும் என்று நம்பி இருந்தோம். ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகள்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர் காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
    • மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொது மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி மாவட்ட கலெக்டரிடமும் இது குறித்து மனு அளித்திருந்தனர். தொடர் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது அந்த அறிவிப்பு பலகையை பார் உரிமையாளர் கழற்றி வீசி விட்டு தொடர்ந்து அந்த கடையை நடத்தி வருவதாகவும் மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    எனவே அச்சுறுத்தலாக இருந்து வரும் அந்த மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    • ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.
    • மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை), குடியரசு தினம் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
    • அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் (பார்) மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.


    இச்செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும். மதுக் கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது.

    டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை மதுக் கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செஞ்சிக் கோட்டை முழுமையான சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும்.
    • மோடிக்கு, நீங்கள் 39-க்கு 39 எம்.பி.க்களை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும்.

    செஞ்சி:

    பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் நடை பயணம் செஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு செஞ்சி பேரூராட்சியில் இருந்து திருவண்ணாமலை சாலையில் உள்ள இந்தியன் வங்கி வரை நடைபயணம் மேற்கொண்டார்.

    அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். செஞ்சி கூட்ரோட்டில் அண்ணாமலைக்கு கிரேன் மூலம் ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து திருவண்ணாமலை சாலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது;-

    தமிழகத்தில் இருக்கக்கூடிய அம்மன் தலங்களில் எல்லாம் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி குடிகொண்டுள்ள ஊருக்கு நாங்கள் வந்திருக்கிறோம். 122-வது தொகுதியாக செஞ்சிக்கு வந்திருக்கிறோம். மற்ற இடங்களில் பார்த்த அதே எழுச்சி செஞ்சியில் இருப்பதை உணர்கிறோம்.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மறுபடியும் மூன்றாவது முறையாகவும், தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க.வும் முதன் முறையாக வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய உங்களுடைய உத்வேகம் புரிகிறது. பிரசித்தி பெற்ற செஞ்சிக்கோட்டை 830 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இன்றும் சிறிய சேதம் கூட இல்லாமல் முழுமையாக இருக்கக்கூடிய கோட்டையாகும்.

    ராஜா தேசிங்குவின் படைத்தளபதியாக இருந்த மகமத்கான், அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த இந்த ஊர், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்ததாகும். ஆனால் இன்றைக்கு மனிதர்களை மதத்தால் பிளவு படுத்தி அதை வைத்து அரசியல் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க. என்றால் குறுநில மன்னர் ஆட்சி என்பதை விட ஒரு படி மேலே போய் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக டாஸ்மாக் கடை மூடப்படும். அதற்கு பதில் கள்ளுக்கடை திறக்கப்படும். பனை மரத்தையும், தென்னை மரத்தையும் அதில் வரக்கூடிய பொருட்களை முழுமையாக பயன்படுத்தினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம் வரும்.

    இந்த தொகுதியில் 2021-ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும். அனந்தபுரத்தில் அரசு பணிமனை அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். மேல் களவாய் தரைப்பாலம், மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும். வேளாண் கல்லூரி அமைக்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செஞ்சிக் கோட்டை முழுமையான சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தி கொடுக்கப்படும்.

    எனவே வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் 400 இடங்களில் வெற்றி பெற போகும் மோடிக்கு, நீங்கள் 39-க்கு 39 எம்.பி.க்களை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.
    • பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர்களில சுமார் 900 மதுபான கடைகள் உள்ளன. இதில் 850 மதுபான கடைகளின் உரிமம் 16 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதன் பிறகு பார் நடத்த அனுமதி வழங்கவில்லை.

    ஆனாலும் பல கடைகளில் சட்ட விரோதமாக ரகசியமாக பார்கள் செயல்படத்தான் செய்கின்றன. மிகவும் கெடுபிடியான இடங்களில் குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி ரோட்டோரங்களிலும், தெருக்களிலும் வைத்து குடிக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.

    இதனால் பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது. இதையடுத்து பார் உரிமம் கோருவதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. டெண்டர்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி நாளை ஆணையிடப்படும்.

    அதன் பிறகு உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தப்போகும் கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் ஆவணத்துடன் மதுபான கழகத்தில் அனுமதி பெற்றதும் பார் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

    புறநகர்களிலும் சேர்த்து 1200 மதுபான கடைகள் உள்ளன. எனவே, மீதமுள்ள சுமார் 350 பார்களுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிகிறது. அதன் பிறகு அந்த பார்களுக்கு டெண்டர் விடப்படும்.

    • கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
    • அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனுர் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இங்கு மதுக்கடை இருப்பதால் தங்கள் பகுதியில் இருக்கும் வாலிபர்கள் வேலைக்கு கூட செல்லாமல் குடித்து விட்டு சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்தக் கடையில் வாலிபர்கள் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வாகனங்களில் செல்வதால் வாகன விபத்து ஏற்படுகிறது.

    எனவே இந்த மது கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் இன்று அந்தியூர்-மேட்டூர் மெயின் ரோட்டில் முளியனூர் பிரிவு என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடையை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர்.

    இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்துகளைந்து சென்றனர். இதனால் அந்தியூர் அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.
    • குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.

    இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.

    மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
    • நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தனிப்பிரிவு காவலர் ஹரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை 45 நாட்களுக்குள் உறுதியாக இடமாற்றம் செய்யப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செல்வகுமரன், ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன்லோபோ ஆன்மிகம் மற்றும்கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் வினோத் சுப்பையன் ஆழ்வை கிழக்கு மண்டல் துணை தலைவர் பால்வண்ணன் மற்றும் கிருஷ்ண மூர்த்தி, கல்யானகுமார், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தீபத்திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மூடி வைக்கப்பட உள்ளது.

    அதன்படி காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, வேங்கிக் கால் புறவழிச்சாலை உள்ள மதுபானக்கடை, மணலூர் பேட்டை சாலையில் உள்ள மதுபான கடைகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக் கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் மூலையாறு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனையானர் கண்ணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு செல்வம் என்பவர் கடையை திறக்க வந்தார்.

    அப்போதுமதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து கடைக்குள் சென்று பார்ந்த போது, அங்கிருந்த ரூ.1,000 மதிப்பிலான மதுப்பாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு கட்டக்காமன்பட்டியை சேர்ந்த மதுபான கடை மேற்பார்வையாளர் பெரியசாமி தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×