search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students strike"

    • பள்ளி கட்டிடம் இல்லாததால் ஆத்திரம்
    • மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்

    அரக்கோணம்:

    நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு 40- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கட்டிடத்தை முழுவதும் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கிருந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை இதுவரைக்கும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

    பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது முறையாக பள்ளியை புறக்கணித்து வருகின்றனர். இதனால் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.

    உடனடியாக அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் புறக்கணித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெமிலி பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

    • மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர்.
    • 4 கே பஸ்சை மானூர் வரை நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பள்ளமடையில் இருந்து வழக்கமான நேரத்தில் நெல்லைக்கு பஸ்சை இயக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர்.

    சாலை மறியல்

    இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மானூர் அருகே உள்ள பள்ளமடைக்கு வண்ணார்பேட்டையில் இருந்து தாழையூத்து, தென்கலம், நல்லம்மாள்புரம் வழியாக 4கே என்ற டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் காலை 8.30 மணி அளவில் பள்ளமடைக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு திரும்பும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று திடீரென 4-கே டவுன் பஸ் மானூர் வரை நீட்டிப்பு செய்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பள்ளமடைக்கு பஸ் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளமடை ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் 4 கே பஸ்சை மானூர் வரை நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பள்ளமடையில் இருந்து வழக்கமான நேரத்தில் நெல்லைக்கு பஸ்சை இயக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    இதுகுறித்து உடனடியாக மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை சமரசம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதன் பின்னர் போக்கு வரத்து கழக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கரிசல்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

    அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளா மல் கடந்த மாதம் 26-ந் தேதி தும்மக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கடையை அக்றறக்கோரி சிந்துப்பட்டி பொதுமக்கள் சார்பில் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

    மேலும் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறந்திருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு பள்ளி நிர்வாகம் சார்பிலும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் இன்று காலை திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் அமர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் அந்தப்ப குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.

    • கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
    • 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலா ஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதால், தங்களது கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென கூறி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வாலாஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த ஊரிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்காக ஆற்காடு மற்றும் விஷாரம் போன்ற நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆனால் தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ் வாலாஜாப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முசிறி, சென்னசமுத்திரம், தென்கடப்பந்தாங்கல், வள்ளுவம்பாக்கம் பெல்லியப்பா நகர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் வருவதால் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ்சினை விஷாரம் வரை இயக்க வேண்டும் மற்றும் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் மற்றும் வாலாஜா பேட்டை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    மகாராஷ்டிராவில் கல்லூரியில் மாணவிகள் குட்டைப் பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டதையடுத்து, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.#MaharashtraStudentStrike
    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஜே ஜே மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகள் குட்டைப் பாவாடை அணிந்து கல்லூரிக்கு வருவதற்கும், மாணவர்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாணவிகள் குட்டைப் பாவாடை அணிந்து, முகங்களை துப்பட்டாவினால் மூடிக் கொண்டு, நேற்று கல்லூரி முன்பு ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.



    இது குறித்து மாணவிகள் கூறுகையில், 'கடந்த மார்ச் 21 அன்று நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், சில மாணவிகள் கல்லூரியின் விதிகளை மீறி நடந்ததற்கு அனைத்து மாணவிகளும் தண்டிக்கப்பட வேண்டுமா? எங்கள் ஆடைகளை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    மேலும் விடுதிக்கு 10 மணிக்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது எங்கள் தனிப்பட்ட சுதந்திரம், உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது. இந்த உத்தரவினை கல்லூரி முதல்வர் அஜய் சந்தன்வாலே மற்றும் பெண்கள் விடுதியின் வார்டன் ஷில்பா பாட்டீல் அறிவித்துள்ளனர்.  இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த தடையை திரும்ப பெற வேண்டி, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளோம்' என கூறினர்.  

    மாணவிகளின் ஸ்டிரைக்கிற்கு கல்லூரி முதல்வர் அஜய் சந்தன்வாலே பதில் அளிக்கையில், ' மாணவிகள் தங்கள் ஆடைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த தடையை கூறினோம். இந்த தடையின் மூலமாக நாங்கள் கூற வந்தது இது தான். ஹோலி கொண்டாட்டத்தின் போது சில தவறுகள் அரங்கேறியது. இதுபோன்ற தவறுகளில் மாணவிகள் ஈடுபட்டதாக தெரிய வந்தால், கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள்' என்றார். #MaharashtraStudentStrike

    ×