என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலஸ்தீனம்"

    • காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.
    • காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    காசாவில் கடந்த அக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.

    காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, காவல் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

    குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.

    காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.

    காசா நகரில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 

    ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக இந்த எல்லை திறக்கப்படுவது. சிகிச்சைக்குக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு இது ஒரு முக்கியமாக நிகழ்வாகும்.

    அக்டோபர் 10-ஆம் தேதி போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 509 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

    • காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த கடைசி பிணைக்கைதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது திங்கள்கிழமை, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து பிணைக்கைதிகளும் இப்போது தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.  

    கடந்த அக்டோபர் மாதம்இஸ்ரேல் உடன் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது உயிருடன் மீதமிருந்த பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது, 

    • காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
    • இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்தது.

    இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை. டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

    • காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
    • இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    டாவோஸ்:

    இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளனர்.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்து விட்டது.

    • அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
    • போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

    காசாவில் கடந்த அக்டோபர் 10 போர் நிறுத்தம் ஏற்பட்ட போதும் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்கும் உதவிக் குழுக்களுக்கும் இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதனால் மக்கள் சொற்ப நிவாரண பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கும் அலைமோதி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய 3 வெவ்வேறு தாக்குதல்களில் 3 பத்திரிகையாளர்கள், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

    சாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்

    பத்திரிகையாளர்கள் சென்ற அந்த வாகனம் டிரோன்களைப் பயன்படுத்தி ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாகவும், அதனாலேயே வான்படை அந்த வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் இஸரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    அதேபோல் முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும், மேற்கு காசா பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை இஸரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    காலையில் அவன் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.

    அக்டோபர் 10 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசாவை நிர்வகிக்க டிரம்ப் உருவாக்கிய 'அமைதி'க் குழுவில் இஸ்ரேல் இணைத்துள்ளது. 

    • அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
    • இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.

    ஜெருசலேம்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.

    காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.

    இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இக்குழுவில் இணையும் 8-வது நாடு இஸ்ரேல் ஆகும். இந்த வாரியத்தில் பிரதமர் நேதன்யாகு இணைய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அவரது அலுவலகம் நேற்று அறிவித்தது.

    டிரம்பின் இந்த வாரியத்தில் அமீரகம், மொராக்கோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இணைய ஒப்புதல் தெரிவித்தன.

    • காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது இந்த குழுவின் நோக்கம்.
    • மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் இக்குழுவில் இணையும் முதல் அரபு நாடு என்ற அந்தஸ்தை அமீரகம் பெற்றுள்ளது.

    காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.

    இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில்  அமீரகத்தின் இந்த முடிவைத் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

    இது மத்திய கிழக்கில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றும், மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

     இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார்.

    • ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது
    • காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது இதன் நோக்கம்.

    போர் நிறுத்தத்தின் பின் காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க காசா அமைதிக் குழுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார்.

    இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

    அந்த வகையில் காசா அமைதிக் குழுவில் உறுப்பினராக இணையுமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது.

    இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினை காசா அமைதிக் குழுவில் இணையுமாறு டிரம்ப் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது என்று கூறப்படுகிறது. 

    இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார். 

    • முதல் ஆண்டிலேயே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை வழங்கும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும்
    • காசா மக்களை வெளியேற்றி ஆபிரிக்க நாடுகளில் குடியமர்த்திவிட்டு அந்நகரை சொகுசு ரிசார்ட் நகரமாக மாற்ற உள்ளதாக டிரம்ப் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் காசா போர் கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் 20 அம்சங்களின் ஒரு பகுதியாக டிரம்ப் உருவாக்கியுள்ள 'காசா அமைதி வாரியத்தில்' உறுப்பினராக சேர நாடுகள், 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,087 கோடி) செலுத்த வேண்டும் என்று தகவல் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

    ப்ளூம்பெர்க் வெளியிட்ட ஒரு அறிக்கையில், காசா அமைதி வாரியத்தின் வரைவு சாசனத்தின்படி, உறுப்பினராக விரும்பும் நாடுகள் பெரும் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    குறிப்பாக, முதல் ஆண்டிலேயே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை வழங்கும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் என்றும், மற்ற நாடுகளுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு இருக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில் வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில், "இந்த வாரியத்தில் சேர்வதற்கு எந்தவிதமான குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணமும் கிடையாது.

    காசாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றில் நீண்டகால அர்ப்பணிப்பைக் காட்டும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்து மட்டுமே அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வாரியத்தின் முதல் தலைவராக டிரம்ப் செயல்படுவார். இதில் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    காசாவில் ஹமாஸிற்குப் பதிலாக புதிய காவல் படையை உருவாக்க சர்வதேச படை ஒன்றை அமைக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காசா மக்களை வெளியேற்றி ஆபிரிக்க நாடுகளில் குடியமர்த்திவிட்டு அந்நகரை சொகுசு ரிசார்ட் நகரமாக மாற்ற உள்ளதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான ஏஐ வீடியோ ஒன்றையும் டிரம்ப் வெளியிட்டிருந்தார்.  

    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.
    • போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி.

    காசா பகுதியில் தொடரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க, பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி ரஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.

    காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அங்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.

    எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் உணவு மற்றும் மருந்துகளுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவை காசாவுக்குள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஐநாவின் அகதிகள் தூதராக நீண்ட காலம் பணியாற்றிய ஆஞ்சலினா ஜோலி, ரஃபா எல்லைக்கு நேரில் சென்று அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டார்.

    இதுகுறித்து பேசிய ஏஞ்சலினா, "இங்கு நடப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது. பசியாலும் போரினாலும் வாடும் குழந்தைகளுக்கு உடனடியாக உதவி கிடைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே ஆஸ்கர் விரித்து வென்ற ஸ்பெயினைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் ஜேவியர் பார்டெம், "உதவிகளைத் தடுப்பது என்பது பொதுமக்கள் மீதான நேரடித் தாக்குதல்.

    இது போர்க்குற்றத்திற்குச் சமமானது. போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி" என்று இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
    • பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று.

    பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரகம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

    மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் பகுதியில் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது.

    விழாவில் பேசிய பாலஸ்தீனத் தூதர் ஹுசாம் சோம்லோட், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.

    காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை என எங்கு இருந்தாலும், பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று" என்று தெரிவித்தார்.

    காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தைத் தனி நாடாகப் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அந்த முடிவின் தொடர்ச்சியாக இப்போது முழு அளவிலான தூதரக உறவுகள் எட்டப்பட்டுள்ளன.  

    • அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.
    • அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    71 வயதான ஜாக்கி சான் 'Unexpected Family" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சீன தலைநகர் பீஜிங்-இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாக்கி சான் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்வில் பேசிய ஜாக்கி சான், அண்மையில், காசா குழந்தைகளின் துயரங்களை விவரிக்கும் வீடியோ ஒன்றை பார்த்து மனமுடைந்தேன். 

    அந்த வீடியோவில், ஒரு பாலஸ்தீன சிறுவனிடம், பெரியவனானதும் நீ என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தச் சிறுவன் எவ்வித உணர்ச்சியுமின்றி, மிகச் சாதாரணமாக, "எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை. ஏனெனில் வளர்வதற்கு முன்பே கொல்லப்பட்டு விடுகிறோம்" என்று பதிலளித்தான்.

     அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.

    நாம் முதுமையை ஒரு சுமையாக நினைக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த முதுமை மறுக்கப்படுகிறது. அவர்கள் வளர்வதற்கு முன்பே போரினால் சிதைக்கப்படுகிறார்கள்.

    வன்முறை என்பது ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால், மரணத்தைப் பற்றி அந்தச் சிறுவனால் இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்பதுதான் உலகிற்கு அது சொல்லும் செய்தி" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 23 மாதங்களில் காசாவில் 1 மணி நேரத்துக்கு 1 குழந்தை கொல்லப்பட்டுள்ளது.

    ×