என் மலர்
வழிபாடு
- திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில்.
- மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில். புராண காலத்தில் இந்த ஊரின் பெயர் திருப்புல்லாணை என்று இருந்துள்ளது. இங்கு மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவராக கல்யாண ஜெகநாதரும், அம்பாளாக கல்யாணவல்லி, பத்மாசனியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவில் தல விருட்சமாக அரசமரம் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் இந்த ஆதி ஜெகநாதர் கோவில் 105-வது திருத்தலமாக போற்றப்படுகிறது.
ஜெகநாதப் பெருமாள், புவனேஸ்வர் (புரி) தலத்தில் உத்தர ஜெகநாதராகவும், திருமழிசை தலத்தில் மத்திய ஜெகநாதராகவும், திருப்புல்லாணியில் தட்சிண ஜெகநாதராகவும் காட்சி தருகிறார் என்பர். அந்த அளவில் மிகச்சிறப்பு வாய்ந்தது மட்டுமன்றி, ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாவதால் புராதன புண்ணியத் தலமாகவும் திகழ்கிறது இந்த கோவில்.
முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப்பட்டனர்.
தங்களை காக்க வேண்டும் என்ற மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாதர் கோவில்.

பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
- விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள்.
- சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு.
விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும்.
`சங்கட' என்றால் துன்பம் `ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
`அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை
கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!'
- திருமயம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 15 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி (முழுவதும்)
நட்சத்திரம்: பூரம் மாலை 6.29 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. திருமயம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்துக் குமாரசுவாமி புறப்பாடு. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார், உச்சிப்பிள்ளையார் கோவில், மாணிக்க விநாயகர், உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு காலையில் சிறப்பு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், லால்குடி, திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-கவனம்
மிதுனம்-நன்மை
கடகம்-உழைப்பு
சிம்மம்-பரிவு
கன்னி-உயர்வு
துலாம்- செலவு
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- ஆதரவு
மகரம்-லாபம்
கும்பம்-ஆரோக்கியம்
மீனம்-நற்செய்தி
- 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
- காஞ்சிபுரத்திலும் சப்தஸ்தான தலங்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் பல இடங்களில் சப்த ஸ்தானம் எனப்படும் ஏழு இடங்களூம், அது தொடர்புடைய ஏழு ஆலயங்களும் இருக்கின்றன. அவற்றில் ஐக்கியமான சப்தஸ்தான தலமாக திருவையாறைச் சுற்றி அமைந்த 7 ஊர்களூம், அதில் அமைந்த ஆலயங்களும் போற்றப்படுகின்றன. திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை, திருபிநய்த்தானம், திருப்பழனம், திருவேதிக்குடி, திருவையாறு ஆகிய இந்த ௭ ஊர்களிலும் சப்தரிஷிகள் எனப்படும் 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல் காஞ்சிபுரத்திலும் சப்த ஸ்தான தலங்கள் இருக்கின்றன. ஒரு முறை பிரம்மதேவன், 'காஞ்சியில் செய்யப்படும் வழிபாடுகளும், தர்மங்களும் பன்மடங்கு பலன் தரக்கூடியது என்று சப்த ரிஷிகளிடம் எடுத்துரைத்தார். அவரது அறிவுரைப்படி சப்த ரிஷிகளான அங்கிரஸ், அத்ரி, காசியபர், குச்சர், கவுதமர், வசிஷ்டர், பிருகு ஆகியோர் காஞ்சிபுரத் தில் உள்ள வியாச சாந்தலீசுவரர் என்ற கோவிலுக்கு அருகில் தனித்தனியாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர்.
அந்த சிவலிங்கங்கள், அந்த ரிஷி களின் பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன. அவை அமைந்த இடங்களும் 'சப்த ஸ்தான தலங்கள்' என்று பெயர் பெற்று விளங்குகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அங்கீராரீசுவரர் கோவில் (அங்கீரசம்)
காஞ்சிபுரத்தில் உள்ள சிவ சப்தஸ்தான திருத்தலங்களில் முதலாவது கோவிலாக அமைந்திருப்பது தான் அங்கீராரீசுவரர் கோவில், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை பிரதிஷ்டை செய்தவர் அங்கீரச முனிவர். அதனால்தான் இந்த ஆலய இறைவனின் திருப்பெயர், 'அங்கீராரீசுவரர்' என்றானது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர்களான அத்ரி, காசியபர், குச்சர்,பிருகு, கவுதமர், வசிஷ்டர் ஆகியோரும் வழிபாடு செய்திருக்கிறார்கள். இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் இடம் அந்த காலத்தில் 'விஷ்ணு காஞ்சி என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள கண்ணப்பன் தெரு புளியந்தோப்பில் சாந்தலீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதன் அருகில்தான் அங்கிராரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் வெங்குடி என்ற ஊர் உள்ளது. இதன் பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் கோவிலை அடையலாம்.

அத்திரீசுவரர் கோவில் (அத்திரீசம் - குச்சேசம்)
அத்ரி முனிவரும், குச்சர் முனிவரும் தனித் தனியாக ஒரே இடத்தில் சிவலிங்கங் களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம் இது. இங்கே ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங் கள் இருக்கின்றன. அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஆவுடையாருடனும், குச்சர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் வெறும் பாண வடிவிலும் காணப்படுகின்றன. காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் இந்த ஆலயம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கோவிலாக அமைந்திருக்கிறது.
இந்த தலம் பற்றிய குறிப்பு களும், காஞ்சி புராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு தலங்களும் ஒரே இட இடத்தில் அமைந்திருந்தாலும் இங்கே அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே பிரதானம் என்பதால், இந்த ஆலயம் 'அத்திரீகவரர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர் களும் வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயம் அங்கீராரீசுவரர் கோவிலின் அருகாமையிலேயே இருக்கிறது.

காசிபேசுவரர் கோவில் (காசிபேசம்)
காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 4-வது தலம் இதுவாகும். காசியப முனி வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இங்கே மூலவராக இருக்கிறது. காசியப முனிவர் காஞ்சியில் தங்கியிருந்து சிவபூஜை செய்ததுடன், சிவனை நோக்கி தியானம் செய்தும், பல தர்ம காரியங்களில் ஈடுபட்டும் இத்தல இறைவனை வழிபாடு செய்திருக்கிறார். சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளதாக அறிப்படும் இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சி புராணத்தில் காணப்படுகிறது.
காசியப முனிவர் பிரதிஷ்டை செய்து வணங்கியதால், இத்தல மூலவர் 'காசிபேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். வெங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் வேகவதி ஆற்றங்கரை அம்மன் கோவில் இருக்கும். அந்தக் கோவில் வளாகத்தில் இடதுபுறம் சிறிய கோவிலாக இந்த காசிபேசுவரர் கோவில் இருக்கிறது.

வசிட்டேசுவரர் கோவில் (வசிட்டேசம்)
சப்தஸ்தான தலங் களில் 5-வதாக வைத்து போற்றப்படும் ஆலயம் இது. வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இத்தல இறைவன் 'வசிட்டேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த சிவலிங்கமானது வெடித்துச் சிதறி, பின்னர் வசிஷ்டரின் வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடியதாக சொல்லப்படுகிறது. எனவே இத்தல இறைவனுக்கு 'வெடித்து கூடிய வசிட்டேசுவரர்' என்ற பெயரும் உண்டு. இத்தலம் பற்றியும் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் வேகவதி ஆற்றின் கரையில் உள்ள வியாச சாந்தலீசுவரர் கோவிலின் எதிர்புறம் உள்ள குளக்கரையின் தென்புலத்தில் அமைந்திருக்கிறது.

கவுதமேசுவரர் கோவில் (கவுதமேசம்)
காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் கடைசி தலமாகவும், ஏழாவது தலமாகவும் இருப்பது, கவுதமேசுவரர் கோவில் கவுதம முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால் இத்தல இறைவனுக்கு 'கவுதமேசுவரர்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம் பற்றிய தகவல்களும், காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக காணப்படுகிறது. காஞ்சியின் தென்புலத்தில் உத்திரமேரூர் செல்லும்
சாலையில் அரசு நகர் வெளிங்கப்பட்டரை அருகில் அரச மரத் தெருவில் இந்த ஆலயம் இருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வேகவதி ஆற்றின் முற்பகுதியிலும் கவுதமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பார்க்கவேசுவரர் கோவில் (பார்க்கவேசம்)
பிருகு முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் உள்ள இந்த ஆல யம், காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 6-வது தலமாக போற்றப்படுகிறது. பிருகு முனிவர் வழிபட்ட மூர்த்தி என்பதால், இத்தல இறைவன் 'பார்க்க வேசுவரர்' என்றும் 'பார்க்கீசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சிபுராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டுள்ளது. காஞ்சியின் தென்புலத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஒரிக்கை அரசு நகர் பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வேகவதி ஆற்றின் அருகில் இந்தக் கோவில் இருக்கிறது.
- கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர்.
- 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் முதல் 6-ம் நாள் வரை காலையில் தங்க பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். 6-ம் நாளான 24-ந்தேதி வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. 7-ம் நாளான 25-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே விழாக்கோலம் பூண் டு காணப்பட்டது. குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார் ஒருங்கிணைந்து பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பாத யாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.
அதன்படி கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர். 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மலைக்கோவில் என எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச திருவிழாவில் இன்றிரவு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
- குமரியாக இருக்க அருள்புரிந்தார்.
- காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.
1. ஆழ்வார் உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், தினமும் தனக்கு பால் அமுது செய்த மகப்பேறு கிட்டா தம்பதியினருக்கு இளமை நல்கி, குழந்தை பாக்கியம் அருளி, பிறந்த குழந்தைக்கு, கணிக்கண்ணன் என்று நாமமிட்டு, தன்னோடு தன் அந்தரங்க சிஷ்யராகக் கொண்டிருந்தார்.
2. ஆழ்வார் திருவெஃகாவில் கணிக்கண்ணனுடன் இருந்த பொழுது, தனக்கு சேவை புரிந்த வயோதிக பெண்ணிற்கு அவளின் வேண்டுதல்படி என்றும் குமரியாக இருக்க அருள்புரிந்தார். ஒருநாள் இந்த குமரியைக் கண்ட பல்லவ அரசன் காதல் வயப்பட்டு மணம் புரிந்தான்.
வருடங்கள் ஓட, அரசன் மட்டும் முதுமையடைய, அரசி இளமையுடன் இருப்பதற்கான காரணத்தை அறிந்து, ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணன் உஞ்சவிருத்திக்கு வந்தபொழுது, தமக்கும் உமது குரு இவ்வரத்தை நல்க வேண்டும் என கட்டளையிட்டான். கணிக்கண்ணன் மறுத்திட, அரசன் இக்கணமே நீயும் உனது குருவும் காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான்.
ஆழ்வாரும் இனி நாமிங்கிருக்கப் போவதில்லை; நாம் புறப்பட்ட பிறகு எம்பெருமானும் இங்கு கண் வளர்ந்தருள போவதில்லை எனப் புறப்பட்டார். அப்போது பாடிய பாடல்.
`கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன்
நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்'
ஆழ்வாரும், கணிக்கண்ணனும், பெருமாளும், இதர தேவதைகளும் காஞ்சியை விட்டு அகன்று அருகிலுள்ள இடத்தில் ஓர் இரவு தங்கியதால் அந்த ஸ்தலத்துக்கு `ஓரிரவிருக்கை' என பெயர் பெற்று, தற்பொழுது ஓரிக்கை என மருவியுள்ளது. காஞ்சி இருளால் சூழ்ந்ததும், அரசன் பல்லவராயன் தன் தவற்றை உணர்ந்து ஓரிக்கை சென்று ஆழ்வார் மற்றும் கணிக்கண்ணன் பாதம் பணிந்திட, மீண்டும் அனைவரும் காஞ்சியில் எழுந்தருள ஒரு பாடல் பாடினார்.
`கணிக்கண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்'
ஆழ்வார் சொற்படி நடந்ததால், திருவெஃகா பெருமாளுக்கு, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப்பெயர். பெருமாள் முன்போல் வலத்திருக்கை கீழாகவன்றி இடத்திருக்கை கீழ்ப்பட கண் வளர்ந்தருள்கிறார்.
3. ஆழ்வார் குடந்தைக்கு செல்கையில், புதுப்புனலுக்கு தனது நூல்கள் அனைத்தையும் அருளிட, அதில் நான்முகன் திருவந்தாதியும் திருச்சந்த விருத்தமும் புனலை எதிர்த்து திரும்பிட, புனல்வாதத்தில் வென்ற இவ்விரு நூல்களையும் புவனத்திற்கு அருளினார்.
புனல்வாதத்தில் வென்ற ஏடுகளுடன் ஆராவமுதன் சந்நதிக்குச் சென்று பெருமானை சேவித்து, தன்னுடன் சயன கோலத்தில் இருந்து எழுந்து பேச வேண்டும் என்று பக்தியுடன் துதிக்கிறார்.
`நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக்
குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு, வாழி! கேசனே!'
இங்ஙனம் ஆழ்வார் வாழ்த்தியதும் ஆராவமுதன் உத்தானசாயியாக (எழவும் படுக்கவும் இல்லாத இடைநிலை) நின்றுவிட்டாராம்.
- பூவுலகில் 4,700 ஆண்டுகள் ஜீவித்திருந்தார்.
- தீவிர ஸ்ரீவைணவராய், இறுதி வரை திகழ்ந்தார்.
சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகே திருமழிசை என்ற ஊரில், கன காங்கி எனும் தேவலோக மாதருக்கும், பார்கவ முனிவருக்கும் தவத்தின் பலனாக அவதரித்தவர் திருமழிசையாழ்வார், பூவுலகில் 4,700 ஆண்டுகள் ஜீவித்திருந்தார். அநேக சமயங்கள் மற்றும் தத்துவ ஆராய்ச்சி மேற்கொண்ட காரணத்தினால், பல்வேறு திருநாமங்களையும் விருதுகளையும் கொண்டவர் திருமழிசைப்பிரான்.
`சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல்'
திருமழிசையார், சிவ வாக்கியர், சக்கரத்தாழ்வார், பக்திசாரர், உரையிலிடாதார், குடமூக்கிற் பகவர், கும்பகோணத்து பாகவதர், சித்தர், தத்துவமேதை, மகாநுபாவர், மெய்ஞ்ஞான செல்வர், அருட்குண பெரியார், பார்கவ முனிவரின் அருந்தவ செல்வர் என்று பல திருநாமங்கள் இவருக்கு உண்டு. சமணம், பௌத்தம், மாயாவதம் மற்றும் சைவம் பின்பற்றி, இறுதியில் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரால் திருத்திப்பணிக்கொண்ட பிறகு, தீவிர ஸ்ரீவைணவராய், இறுதி வரை திகழ்ந்தார். திருமழிசை யாழ்வாரின் அருளிச்செயல்கள்: 1. நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்) 2. திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்).
- பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.
- பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.
தருமபுரி:
தமிழகத்திலேயே வேறு எங்கும் கண்டிராத வகையில் தருமபுரியில் பெண்கள் மட்டுமே தேரினை வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிர மணிய சாமி கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 21 ந்தேதியன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.
இந்த தைப்பூசத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் தைசப்பூசத்தையொட்டி பெண் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சிவ சுப்பிரமணிய சாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அதேபோல் ஆண் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை கோலகலமாக நடைபெற்றது.
விழாவில் சிவசுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானையுடன் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.
தேர் நிலை வந்தபோது பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு வீசி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். சிலர் சில்லறை காசுகளையும் தேரின் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணிய சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- திருக்குற்றாலம் சிவபெருமான் தெப்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 13 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை பின்னிரவு 3.35 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: ஆயில்யம் நண்பகல் 1.24 மணி வரை பிறகு மகம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சப்தாவர்ணம். திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்போற்சவம். திருக்குற்றாலம் சிவபெருமான் தெப்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-பரிசு
மிதுனம்-தனம்
கடகம்-உவகை
சிம்மம்-சிறப்பு
கன்னி-போட்டி
துலாம்- வெற்றி
விருச்சிகம்-யோகம்
தனுசு- நிறைவு
மகரம்-தாமதம்
கும்பம்-சாதனை
மீனம்-விருத்தி
- வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் உள்ளே பிரம்ம தீர்த்தமும், வெளியே ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளது. ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி கோவில் வெளியே உள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தெப்பத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி தாயார் எழுந்தருளி ஆதிஷேச தீர்த்த குளத்தின் மைய மண்டபத்தை ஐந்து முறை வலம் வருவார். இரவு 7 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெற உள்ளது.
- திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
- கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.
இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.
பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.
இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.
- தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.
வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)
அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

பரிகாரம் செய்வது எப்படி?
அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.
பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.
இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.






