என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Somavaram"

    • திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.
    • ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.

    இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    அதற்கு விரதங்கள் உதவியாக உள்ளன. விரதங்களில் சோமவாரம் விரதம் அதிக பலன்களை தரக்கூடியது.

    திருமணம், குழந்தை பாக்கியம், நோய் தீர, எதிரிகளை வெல்ல, நினைத்தது நடக்க சோமவார விரதமும், பூஜையும் கைகொடுக்கும்.

    திருவண்ணாமலையில் சோமவார பூஜையை கடந்த சுமார் 43 ஆண்டுகளாக ஒரு அமைப்பு நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பினர் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலையில் சோமவார பூஜையை பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.

    அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது உற்சவ மூர்த்தியான சந்திரசேகரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.

    இந்த அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடத்தப்படும்.

    அதை கண்டு வழிபடுவதே தனி ஆனந்தத்தை தரும்.

    அதன்பிறகு உற்சவ மூர்த்தியை அலங்காரம் செய்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்வார்கள்.

    அங்கு அவருக்கு தீபாராதனைகள் நடத்தப்படும்.

    • விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள்.
    • சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு.

    விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும்.

    `சங்கட' என்றால் துன்பம் `ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

    `அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்

    பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,

    நல்ல குணமதிகமாம் அருணை

    கோபுரத்துள் மேவும்

    கணபதியைக் கைதொழுதக் கால்!'

    ×