என் மலர்
நீங்கள் தேடியது "சதுர்த்தி திதி"
- விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள்.
- சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு.
விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும்.
`சங்கட' என்றால் துன்பம் `ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
`அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை
கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!'
- துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
- ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு.
இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என சொல்வதுண்டு. இந்த நாளிலேயே பெரும்பாலானவர்கள் விநாயகரை விரதம் இருந்து, வழிபடுவது உண்டு. துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானதாகும்.
அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து நான்கு நாட்களில் வரும் திதியை வளர்பிறை சதுர்த்தி. இந்நாளில் வீட்டில் பூஜை செய்து அருகில் உள்ள விநாயகர் சந்நதிக்கு சென்று விநாயகரை மனமுருகி வணங்கி வழிபட வேண்டும். அப்போது விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வழிபாடு முடிந்த உடன் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து வர விநாயகப் பெருமானின் அருள் ஆசி கிட்டும்..






