என் மலர்
ஆன்மிகம்
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
சிம்மம்
லாபகரமான வாரம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும்.
பணவசதி சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். குடும்ப செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும்.
காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும். எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். வரலட்சுமி நோன்பு நாளில் ரோஜா மலரால் மகாலட்சுமியை வழிபடவும்.
கன்னி
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனி செவ்வாய் சம்பந்தம். கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி விரயத்தை சேமிப்பாகவோ, சுப விரயமாகவோ மாற்ற முறையான திட்டமிடல் தேவை. குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை சுய ஜாதகப் பரிசீலனைக்குப் பிறகு செய்யவும். ஒரு கடனை அடைக்க, மறுகடன் வாங்குவது அல்லது பழைய கடனை அடைக்க, புது கடன் வாங்குவது என்று கடனுக்கு மேல் கடன் கூடிக்கொண்டு போகும்.
சிலருக்கு விருப்ப விவாகம் நடக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். வரலட்சுமி நோன்பு நாளில் லலிதா சகஸ்ஹர நாமம் படித்து மகாலட்சுமியை வழிபடவும்.
துலாம்
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மனஉறுதி, தைரியம், நேர்மறை எண்ணம், உதவி செய்யும் மனப்பான்மை கூடும். கடமைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். ஆயுள் ஆரோக்கியம் கூடும். மருத்துவ செலவுகள் குறையும்.
கௌரவ பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். பேரன்,பேத்தி யோகம் கிடைக்கும். பாகப்பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும்.
ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். வரலட்சுமி நோன்பு நாளில் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.
விருச்சிகம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இழப்பு ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்றவற்றால் அதிருப்தி ஏற்படும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சினையை விட்டு ஒதுங்கி வாழப் பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த கெடு பலனும் ஏற்படாது. முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் காரிய வெற்றியைத் தரும்.
சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உணவு ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். வரலட்சுமி விரத நாளில் மகா லட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.
- பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர்.
- வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதில் ஆடி மாதத்திற்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் ஆடி மாதத்தில் தான் செய்யப்படுகிறது.
பொதுவாக உலகின் நாகரிகங்கள் நதிக்கரையில் தோன்றியதாக கூறுவார்கள். நதிகள் தான் மனித வாழ்க்கையின் ஆதாரம். விவசாயம் தோன்றியது நதிக்கரையில் தான். அதனால் தான் நதிகளை தமிழர்கள் அன்னையாய், தெய்வமாய் போற்றுகிறார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த நதியின் கரையில் கொண்டாடப்படுவது தான் ஆடிப்பெருக்கு விழா.
அதன்படி இன்று காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடி மாதம் 18-ந் தேதி எனப்படும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி கரைகளில் வெகு விமர்சையாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு இன்று காலை முதலே பெண்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர்.
தொடர்ந்து மா விளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவிரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
மஞ்சள் கயிறு வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர்.
அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், நல்ல மணமகன் கிடைக்க வேண்டியும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். திருமணமாகாத ஆண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிற்றை கைகளில் கட்டிக்கொண்டனர்.

புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்வும் காவிரி படித்துறையில் நடந்தது. திருமணத்தின்போது கட்டப்பட்டிருந்த தாலிகயிறுக்கு பதிலாக புது தாலி கயிற்றை அணிந்து கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
தொடர்ந்து படித்துறை அருகில் உள்ள வேப்பமரம், அரசமரங்களை மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் சுற்றி வந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமத்தை வைத்து மஞ்சள் கயிற்றை கட்டி விட்டு, நாகர், சந்தான கணபதி, சோமசுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி மற்றும் பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். சிறுவர்கள் சிறிய சப்பரங்களை இழுத்து வந்து மகிழ்ந்தனர்.
ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கோலாகலமாக கொண்டாடினர்.
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள படித்துறை, வெண்ணாறு படித்துறை, எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கல்லணைக்கால்வாய் படித்துறை, வடவாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புதுஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம், திருவிடைமருதூர், சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிறுவர்கள் காவிரி ஆற்றங்கரைகளில் சப்பரத்தில் சுவாமி படங்களை வைத்து அலங்கரித்து இழுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மீண்டும் சப்பரத்தை வீட்டுக்கு இழுத்து வந்தனர்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்
மேஷம்
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ராசியை பார்க்கிறார். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். ஆடம்பர மோகம், ஆசை அதிகமாகும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இதுவரை கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவர். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகையாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும்.
அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 5.8.2025 அன்று காலை 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலை தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வரலட்சுமி விரத நாட்களில் மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.
ரிஷபம்
முன்னேற்றமான வாரம். ராசிஅதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறார். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். புதிய தொழில், கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். அதிர்ஷ்டம் மற்றும் ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும்.
பூர்வ ஜென்ம புண்ணியப்படி இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். திருமண வயதில் உள்ள மகன் மகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும்.
5.8.2025 அன்று காலை 11.23 மணி முதல் 7.8.2025 அன்று இரவு 8.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் உத்தியோகம் சம்பந்தமான பய உணர்வு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்களை குறைத்தாலே பெரிய பிரச்சினை எதுவும் வராது என்பதை உறுதியாக கூறலாம். வரலட்சுமி விரத நன்நாளில் மஞ்சள் அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் குருவுடன் சேர்க்கை பெறுகிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். பொன்,பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.
மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். காதலால் ஏற்பட்ட ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். குல இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.
ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். 7.8.2025 அன்று இரவு 8.11-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. வரலட்சுமி நோன்பு அன்று வில்வ அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
கடகம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசியில் சூரியன் புதன் சேர்க்கை. உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.
தற்போது குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும். சுய ஜாதக ரீதியாக ராகு-கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.
சிலருக்கு திருமணத் தடை இருக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள், ஆதாயம் கிடைக்கும்.வரலட்சுமி விரத நாளில் மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
- ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும்.
- காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும்.
'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்றொரு பழமொழி உண்டு. இது வெறும் பழமொழி அல்ல. நீரின்றி அமையாது உலகு என்பதுதானே உண்மை. அதேபோல், நம் வாழ்வில், எல்லா சடங்கு சாங்கிய நிகழ்வுகளின் போதும் தண்ணீருக்கும் நமக்குமான பந்தம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அப்படியொரு உணர்வுபூர்வமான நன்னாள்தான் ஆடிப்பெருக்கு விழா!
ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும். கோடைக் காலம் முடிந்து, அந்த வெயிலில் மண்ணெல்லாம் பாளம் பாளமாக வெடித்து, ஆடிக் காற்றில் அந்த மண்ணுக்குள் காற்று நிரம்பியிருக்க, ஆடி மாதத்தில் சாகுபடிக்கு பூமியே தயாராக இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல, காவிரி முதலான நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் அதன் பின்னர், சீரும் சிறப்புமாக செழிக்கும். தானியம் பெருகும்.
முக்கியமாக, ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும். நீறை வணங்க வேண்டும். தாம்பத்ய வாழ்வு சிறக்கும். இந்த நாளில், வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீர்நிலைகளில் நீராடுவார்கள் வணங்குவார்கள்.
வீட்டிலிருந்தபடியே காவிரித்தாயை வணங்குவோம். காலையில் புதிதாகத் திருமணமான பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றிக் கொள்ளும் வைபவமும் இந்தநாளில்தான் நடைபெறும்.
எனவே, அதிகாலையில் நீராடுங்கள். மனதில் காவிரியை நினைத்துக்கொண்டு நீராடினால், அந்த காவிரியானது நம் வீட்டில் தண்ணீரில் கலந்து விடுவதாகவும் ஐதீகம்.
புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை பெண்கள் அணிந்து கொள்ளுங்கள், கன்னிப் பெண்களுக்கும் வேண்டிக்கொண்டு, புதிய மஞ்சள் அணிவிப்பதும் வழக்கம். இதனால் காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம்.
தம்பதிக்குள் பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே புதுமணத் தம்பதியை அந்த ஒருமாதத்தில் பிரித்து வைப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக திருணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது பெண்ணை, இந்த மாதத்தில் பெண்ணை பெற் தாயார் சீர் செய்து தன் வீட்டுக்கு அதாவது பெண்ணின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வருவார்.
ஆடி மாதமான இந்த மாதத்தில் தன் தாய் வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர - சம்பிரதாயங்களையும் கற்றறிவாள். சடங்கு சாங்கியத்தை எப்படி மேற்கொள்வது, எல்லோரையும் அனுசரித்து குடும்பம் நடத்துவது எப்படி என்பதையெல்லாம் அறிவாள். அதன்படி புகுந்த வீட்டில் பெயரெடுத்து வாழ்வாள். பெருமைபட வாழ்வாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- சகல நதி தீரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா.
- ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-18 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி காலை 9.45 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : விசாகம் காலை 7.24 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஆடிப்பெருக்கு விழா, திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று சகல நதி தீரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராமவதாரக் காட்சி. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலை அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-உண்மை
மிதுனம்-கவனம்
கடகம்-சுகம்
சிம்மம்-பணிவு
கன்னி-பாசம்
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- விவேகம்
மகரம்-அமைதி
கும்பம்-நன்மை
மீனம்-உறுதி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெருமைக்காக சில செலவுகளைச் செய்வீர்கள்.
ரிஷபம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
மிதுனம்
இனிய வாழ்வமைய இறைவனை வழிபட வேண்டிய நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத் தில் அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
கடகம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விருப்பம் கொள்ளும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும்.
சிம்மம்
செல்வ நிலை உயரும் நாள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காண்பீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய பாதை புலப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.
கன்னி
மங்கலப் பொருட்களை வாங்குவதில் மனதை செலுத்தும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
நல்ல சந்தர்ப்பம் நாடி வரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் சிறிது கரையலாம். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும் நாள். வாழ்க்கை வளம்பெற ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாளைய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம்.
மகரம்
வளர்ச்சி அதிகரிக்க வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
கும்பம்
செல்வாக்கு உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
மீனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாமா என்று சிந்திப்பீர்கள்.
- காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
- கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர்:
கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் செடல் உற்சவம் கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் விழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உடலில் செடல் போட்டுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் சட்டி வைத்து கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவசத்துடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு அன்று அனைவரும் நீர் நிலைகளுக்கு சென்று விரதமிருந்து பூஜைகள் செய்வார்கள். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று பூஜை செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தே விரதமிருந்து பூஜை செய்து கடவுளின் அருளைப் பெறலாம். தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து வீட்டைத் துடைத்து மாக்கோளமிட்டு, நீராட வேண்டும். பூஜையறையில் சாமி படங்களை பூக்களால் அலங்கரித்து புது மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், பத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் முதலான பூஜைக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு நிறைகுடத்தில் இருந்து கலச சொம்பில் நீர் எடுத்து அரைத்து வைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். அந்த கலச நீரை விளக்கேற்றி அதன் முன் வைத்து, தீபாராதனை செய்து, கங்கை, யமுனை, சரஸ்வதி, வைகை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளை மனதில் நினைத்து மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பின்னர் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தலையில் தெளித்துக்கொண்டு, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். எஞ்சிய நீரை வீட்டிலுள்ள மரம், செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை தாலியாக பாவித்து கட்டிக்கொள்ள அடுத்த ஆடிக்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வசதி இருப்பின் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து அவர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், இரவிக்கைத் துண்டு, கொஞ்சம் இனிப்பு சேர்த்து கொடுக்கலாம். இந்த பூஜையின் போது நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். நீர்நிலைகளுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டிலிருந்த படியே கடவுளை வழிபட்டு அதன் பலன்களைப் பெறலாம்.
ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் அரிசி, பருப்பு முதலான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆடிப் பெருக்கென்று புதிய தொடக்கம் வளர்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கை.
- ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர்.
- திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள்.
ஆடி மாதத்தில் வரும் 18-ந் தேதியை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கிறோம். பொதுவாக தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு விழா மட்டும் ஆடி மாதம் 18-வது நாள் என நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளும் நிரம்பி வழியும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பர். இதனால் உழவர்கள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குகின்றனர். இதனால் தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் உருவானது.
இந்த விழா தமிழ் பண்பாட்டின் சிறப்புவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். அன்றைய தினம் மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையில் பூஜை செய்வதற்கு ஒரு இடத்தை பிடித்துக்கொள்கின்றனர். அந்த இடத்தை பசு சாணத்தால் மெழுகி சுத்தம் செய்து, அதன்மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

மேலும் வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம், பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காண்பித்து வழிபடுகின்றனர். தங்களுக்கு தடங்கல் இல்லாத விளைச்சல் வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பலவிதமான கலப்பு உணவுகளை தயார் செய்து வந்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியோடு உணவை உண்பார்கள்.
ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.
திருச்சி திருவரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். ஆடிப்பெருக்கு நாளன்று திருவரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அறப் பளீசுவரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமான் ஸ்திர வார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-17 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி காலை 7.47 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : விசாகம் (முழுவதும்)
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கிருஷ்ணாவதாரம், சிம்ம வாகன பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ரிஷப விமானத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமான் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஓய்வு
ரிஷபம்-நலம்
மிதுனம்-உழைப்பு
கடகம்-நட்பு
சிம்மம்-அமைதி
கன்னி-ஆதரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-சலனம்
தனுசு- மாற்றம்
மகரம்-ஊக்கம்
கும்பம்-நிறைவு
மீனம்-பண்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில், உத்தியோகத்தில் தடைபட்ட உயர்வு தானாகக் கிடைக்கும்.
ரிஷபம்
யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையையடையச் சந்தர்ப்பம் வரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மிதுனம்
இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கடகம்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் மனதிற்கு பிடித்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
சிம்மம்
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோக முயற்சியில் நேர்முகத் தேர்வில் வெற்றி உண்டு.
கன்னி
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பக்குவமாகப் பேசி சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
துலாம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
விருச்சிகம்
வரவு இரு மடங்காகும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
தனுசு
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.
மகரம்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகளை செய்யும் சூழ்நிலை உருவாகும். திடீர் பயணம் திகைக்க வைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
கும்பம்
ஒற்றுமை பலப்படும் நாள். வழக்குகள் சாதகமாகும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். அரசு வேலைக்காக செய்த முயற்சி கைகூடும்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
- விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு.
- சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.
விரதம் இருக்கும் போது கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடலாமா என்பது அனேக பக்தர்களின் சந்தேகமாக உள்ளது. சிலர், கடவுளுக்கு தானே விரதம் இருக்கிறோம் அதனால் பிரசாதத்தை சாப்பிடலாம் என்பார்கள். பசியைக் கட்டுப்படுத்தி இறை சிந்தனையோடு விரதம் இருக்க வேண்டும். எனவே , தாங்கள் கடுமையான விரதம் இருப்பதாகவும் அதனால் இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது என்றும் சிலர் சொல்வார்கள். இதில் எது சரி என்று பார்க்கலாம்.
விரதம் இருக்கும் போது எந்த தெய்வத்தை நினைத்து விரதம் இருக்கிறோமோ, அன்றைய நாள் அந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது அந்த கோவிலில் பிரசாதம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கடவுளின் பெயரைச்சொல்லி சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை.
எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பிரசாதம் கிடைத்துவிடாது. கோவில் பிரசாதம் கிடைப்பது கடவுளின் அருள் கிடைப்பது போன்றதுதான். அதுமட்டுமில்லாமல் பிரசாதம் சிறிய அளவில் தான் வழங்கப்படும். அதனால் உங்கள் விரதம் ஒருபோதும் தடைபடாது.
விரதம் இருக்கும் போது நீங்கள் கோவிலுக்கே செல்லவில்லை. ஆனாலும் அக்கம் பக்கத்தினர் கோவில் பிரசாதம் என்று உங்களுக்கு கொடுக்கும் போது சற்றும் தயங்காமல் அந்த பிரசாதத்தை சாப்பிடலாம். எந்த வித தயக்கமும் தேவை இல்லை.
விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு. அப்படிதான் செல்லக் கூடாது. ஏனென்றால் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை இரண்டு மூன்றுமுறை வாங்கி சாப்பிட்டு விட்டு நானும் விரதம் இருக்கிறேன் என்று சொல்வதில் எந்தவித பலனும் இல்லை.
சிலர் ஒரு பொழுது விரதம் இருப்பார்கள். சிலர் நீராகாரம் மட்டும் அருந்துவார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் முழுவதும் உண்ணா நோன்பிருப்பார்கள். அதிலும் சிலர் விரதம் இருக்கிறேன் என்று நீர் கூட அருந்தாமல் இருப்பார்கள். அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலை பொருத்து தான் விரதம் இருக்க வேண்டும்.
எந்தெந்த கடவுளுக்கு எந்தெந்த நாட்களில் விரதம் இருக்கலாம் என்று பார்க்கலாம்...
ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும், திங்கட்கிழமை சிவனையும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானையும் வணங்கி விரதமிருந்து வழிபடலாம். புதன்கிழமை பெருமாள், வியாழன்கிழமை நவக்கிரக வழிபாடு, வெள்ளிக்கிழமை அம்மனை விரதமிருந்து வணங்கலாம். சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.






