என் மலர்
ஆன்மிகம்
- மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
- ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார்.
"நவராத்திரி" என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்கள் பெண் தன்மையை வழிபடுவதற்கும், கொண்டாடப்படுவதற்குமான ஒரு மிகச் சிறப்பான காலமாகும்.
இந்த வருடம் நவராத்திரி 22-ந்தேதியான இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அக்.2-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் முதல் நாளில் அன்னை சக்தி துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைலபுத்ரியை வழிபட வேண்டும். ஷைலபுத்ரியை இமயமலையின் மகள் என்றும், இயற்கையின் முதன்மையான சக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் துர்கா தேவியின் முதல் வடிவமாக வணங்கப்படுகிறார். நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் இவரை வழிபட வேண்டும்.
துர்காதேவி, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக போர் புரிந்தார். இந்தப் போரின் தொடக்கமே நவராத்திரி. இந்த முதல் நாள் வழிபாடு துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
நவராத்திரி முதல் நாளில் வழிபடும் தெய்வம் ஷைலபுத்ரி தேவி
ஷைலபுத்ரி தேவி முன் பிறவியில் சதி தேவியாக இருந்தார். சதி தேவி தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். அவருக்கு பரமசிவனுடன் திருமணம் ஆனது.
ஆனால், தந்தை தட்சன் சிவனை அவமதித்து யாகத்திற்க அவரை அழைக்கவில்லை. அதை சகிக்க முடியாமல் சதி யாகக் குண்டத்தில் தன்னைத் தானே அர்ப்பணித்தார்.
இதன் பின் சதி மறுபிறவியாக மலைராஜன் இமவானின் மகளாக பிறந்தார். அதனால் தான் அவர் ஷைலபுத்ரி (மலைமகள்) என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாட்டின் சிறப்பு: முதல் நாளில் ஷைலபுத்ரியின் தெய்வீக சக்தியை வழிபடுவது, வாழ்வில் உள்ள துன்பங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து நலன்களையும் பெறுவதற்கு உகந்ததாகும்.
ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார். ஷைலபுத்ரி தேவி இயற்கை அன்னையின் முழுமையான வடிவம் மற்றும் சிவபெருமானின் துணை என்று குறிப்பிடப்படுகிறார்.
நவராத்திரியின் முதல் நாளில், புனிதமான கலசம் நிறுவப்படுகிறது.
ஷைலபுத்ரி தேவி காளையின் (நந்தி) மீது அமர்ந்து ஒரு கையில் திரிசூலத்தையும் மறுகையில் தாமரையையும் ஏந்தியிருக்கிறாள். இந்த வடிவம் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் புதிதாகத் தொடங்குவதற்கான தைரியத்தில் வேரூன்றிய வலிமையைக் குறிக்கிறது.
ஸ்லோகம்
'ஓம் தேவி சைலபுத்த்ரியை நமஹ' என்ற மந்திரம், துர்கா தேவியின் முதல் அம்சமான ஷைலபுத்ரி தேவியை வணங்குவதற்கான மந்திரமாகும்.
- ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
- விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள்.
அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும். நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.
அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும்.

கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்துவிட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
- அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார்.
- ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.
எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.
இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.
வரம் பெற்ற பிறகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். மகிஷாசுரனின் ஒழுக்கமற்ற செயல்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்தனர்.
அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார். தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் "மகிசாசுரவர்த்தினி" (அல்லது மகிஷாசுரமர்த்தினி) என்று சக்தியைப் போற்றினார்கள்.
இந்த ஒன்பது நாட்கள் துர்கா தேவி மகிசாசூரனை எதிர்த்து போராடிய நாட்களே 'நவராத்திரி'யாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.
- ரிஷபம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம்.
- மிதுனம் அதிர்ஷ்டகரமான வாரம்.
மேஷம்
துணிச்சலும் தைரியமும் மிகுந்த வாரம். 2,7-ம் அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் இணைகிறார். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகலாம். பூர்வீகம் சென்று வருவதில் சற்று சிரமம் இருக்கும். பணம் பொருள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகம் அல்லாத நபர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது அதேபோல் உங்களுக்கு உதவி செய்வதாக கூறும் அன்னியர்களை நம்ப வேண்டாம். எது எப்படி இருந்தாலும் ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் எந்த நிலையிலும் தைரியம் குறையாது.
26.9.2025 அன்று மாலை 3.24 மணி முதல் 29.9.2025 அன்று அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார முன்னேற்றத்தில் தடை உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களுக்கு குங்குமம் வாங்கித் தருவதால் மங்களம் உண்டாகும்.
ரிஷபம்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். சோர்வான பலவீனமான மனநிலையில் இருப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பாதிப்புகள் வரலாம். சொத்துக்கள் விஷயத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். சிலர் சொத்துக்களின் பராமரிப்பு பணியில் ஈடுபடலாம்.
தொழில் மூலம் நல்ல வருமானம் வரும். தீபாவளிக்கு சற்றேறக் குறைய ஒரு மாதம் மட்டும் இருப்பதால் நம்பகமற்ற விளம்பரங்களை நம்பி பொருளுக்கு பணம் கட்டி ஏமாறலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். மாணவர்கள் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியம்.
சிலருக்கு தீபாவளி முடிந்தவுடன் வேலை மாற்றம் செய்யும் எண்ணம் வரலாம். வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு வந்தாலும் அது கானல் நீராக மறைந்துவிடும். நவராத்திரி காலங்களில் சுமங்கலிப் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்க மங்களம் பெருகும்.
மிதுனம்
அதிர்ஷ்டகரமான வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு சனிப் பார்வை உள்ளது. ராசி அதிபதி புதன் பாக்கியாதிபதி சனியின் பார்வை பெறுவது மிக உன்னதமான அமைப்பாகும். உங்கள் செயல்பாட்டில் இருந்த தடுமாற்றம் குழப்பங்கள் மறையும். சனிபகவான் மிதுனத்திற்கு அஷ்ட மாதிபதியாகவும் இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம்.
இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடு வீர்கள். எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோக சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்கால இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். குடும்பத் தேவைக்காக சில ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு திருமண முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். நவராத்திரி காலங்களில் பச்சைப்பயிறு சுண்டல் தானம் வழங்கவும்.
கடகம்
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சந்திரன் 2,3,4,5-ம் இடங்களில் சஞ்சரிப்பது கடக ராசிக்கு சுபத்துவத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். உடல் மனம் ஆன்மா இவை மூன்றும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். உள்ளமும் உடலும் ஒன்றுபடுவதால் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கோப உணர்வு குறையும் வெற்றிப் பாதையை நோக்கி பயணித்து இலக்கை அடைவீர்கள்.
புதிய நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அனுகூலமான சூழ்நிலைகள் நிலவும். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனை சனி பகவான் பார்ப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. திருமணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும்.
மறுமணம் முயற்சிகள் பலன் தரும். விட்டுச்சென்ற காதல் மீண்டும் தொடரும். புதிய சொத்துக்கள் சேரும். ஆன்மீக நாட்டம் கூடும். குழந்தைகளால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நவராத்திரி நாட்களில் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.
சிம்மம்
கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். இது கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகரிக்கும். விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்துவிடும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
விடா முயற்சியும், உழைப்பும் சிந்திக்கும் திறனும் உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தந்தை வழி உறவுகளை அனுசரித்து சென்றால் இன்னல்கள் குறையும். குடும்ப வழக்குகளை ஒத்தி வைப்பதால் நிம்மதி அதிகமாகும். அதிக பொறுப்புகள், பணிச்சுமையால் சில நேரங்களில் சோர்வாகவும், விரக்தியுடனும் இருப்பீர்கள்.
பதவி உயர்வு ஊதிய உயர்வு பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். மாணவர்கள் கவனத்தை கல்வியில் செலுத்தினால் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியும். நவராத்திரி காலங்களில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை தானம் வழங்க தனவரவு இரட்டிப்பாகும்.
கன்னி
தொழில் அபிவிருத்தி ஏற்படும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று உள்ளார். இவரே உங்களுக்கு தொழில் ஸ்தான அதிபதியாகவும் இருப்பதால் தொழில் ரீதியான முன்னேற்றம் அபிவிருத்தி உண்டாகும். முதல் தொழிலில் தோல்வியுற்றவர்கள் இரண்டாவது தொழிலை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் என வாழ்க்கை ஒளிமயமாக மாறப் போகிறது.
பிற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய வழி தென்பட போகிறது. மனரீதியாக உடல்ரீதியாக அனுபவித்த வேதனைகள் விலகிச் செல்லும். வாழ்க்கைத் துணையின் உறவுகள் மூலமாக ஏற்பட்ட பிரச்சினைகள் குறையத் துவங்கும். நிதிநிலை, குடும்ப சூழ்நிலை, உடல் ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் உங்களுக்கு சாதகமாக உள்ளது.
புதிய வாகனம் வாங்குதல் வீடு கட்டுதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாணவர்கள் தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி கற்பதன் மூலம் மன அமைதியுடன் படிக்க முடியும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களில் விளக்கேற்றுவதால் உயர்வு உண்டாகும்.
துலாம்
எதிர்ப்புகள் அகலும் வாரம். ராசியில் தனாதிபதி செவ்வாய் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். பணம் குடும்பம் பற்றிய எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். பொருள் சார்ந்த விஷயங்களில் கவனம் கூடும். விரும்பிய இலக்கை அடைய திட்டமிடுவீர்கள். உங்களை சூழ்ந்து நின்ற வெறுமை எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் குறையும். வருமானம் உயரும்.
பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் வெற்றி பெறும். அன்புடன் பேசினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அற்புதமான இந்த காலகட்டங்களில் உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டால் வெகு விரைவில் வெற்றி கனியை எட்டிப் பறிப்பீர்கள். துலாம் ராசிக்கு திருமண தடைகள் விலகி நல்ல பலன்கள் வந்து சேரும்.
மன அழுத்தத்தால் ஏற்பட்ட தூக்கமின்மை கோளாறு சீராகும். புதிய எதிர்பாலின நட்புகள் உருவாகும். புகுந்த வீட்டு உறவுகளால் ஏற்பட்ட சர்ச்சைகள் முடிவிற்கு வரும். நவராத்திரி காலங்களில் சக்தி வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவதால் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
வளமான வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை சனி பகவானின் பார்வையில் ஏற்பட்டுள்ளது. லாபாதிபதி புதனும் தொழில் ஸ்தான அதிபதி சூரியனும் இணைவதால் செல்வாக்கு அதிகரிக்கும். இழு பறியாகக் கிடந்த அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். பிறர் வியக்கும் வண்ணம் உங்கள் வாழ்க்கையில் வளம் உண்டாகும்.
பேச்சிலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் தெளிவு இருக்கும். சிறிய முதலீடுகள் பெரிய லாபத்தை பெற்று தரும். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் சீராகும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு, வாகனம், ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். உங்களின் குடும்ப, தனிப்பட்ட விஷயங்களை அறிமுகம் இல்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். கை கால் மூட்டு வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். கட்சிக்காக உழைத்து சளைத்த அரசியல்வாதிகள் பிரபலமாகும் நேரமாகும். நவராத்திரி காலங்களில் துர்க்கை காளி வழிபாடு செய்வதால் வெற்றி நடை போட முடியும்.
தனுசு
செயல்களில் வெற்றி கிடைக்கும். பாக்கியாதிபதி சூரியன் கர்மஸ்தான அதிபதி புதனுடன் தொழில் ஸ்தானத்தில் இணைவது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும். இதுவரை முடங்கி கிடந்த அனைத்து திறமையும் வெளிப்படும். மனமும் உடலும் ஒன்றுபட்டு செயல்வேகம் கூடும். உபரி லாபத்தை சொத்துக்களில் முதலீடு செய்யும் எண்ணம் உருவாகும்.
திருமணத்தடை அகலும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வழி சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகியவருக்கு குலதெய்வ அருளால் இயற்கையாகவே குழந்தை பிறக்கும். நவராத்திரி காலங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கவும்.
மகரம்
பெற்றோர்களின் ஆசிர்வாதம் நிறைந்த வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாயின் நல் ஆசியும், தாய் வழிச் சொத்துக்களும் கிடைக்கும். தீபாவளிக்கு எக்ஸ்சேஞ்ச் ஆபரில் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்கள் வாங்க திட்டமிடுவீர்கள்.
மனைவி வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்துக்கள் மாறும். படித்த இளைஞர்களுக்கு திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கும். புதிய தொழில், உத்தியோக முயற்சிகள் வெற்றி உண்டாக்கும். கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் குறையத் தொடங்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
நீண்ட நாள் நோய் தாக்கம் மாற்று முறை வைத்தியத்தில் சீராகும். மறைமுகத் தொந்தரவு கொடுத்தவர்கள் விலகுவார்கள். 21.9.2025 அன்று மாலை 3.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் கோவில்களுக்கு தேவையான மலர் தானம் வழங்க குடும்ப குழப்பங்கள் சீராகும்.
கும்பம்
செல்வநிலை உயரும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்கிரனின் பார்வை உள்ளது.இந்த கிரகங்களின் பார்வை ராசியில் உள்ள ராகுவால் ஏற்பட்ட எதிர்மறை பாதிப்புகளை குறைக்கும். நடைமுறை வாழ்வில் நிலவிய சிக்கல்களை சரி செய்வீர்கள். நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். அவ்வப்போது சிறிய பிரச்சினைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டீர்கள்.
பொன் பொருள் பூமி சேரும் வாய்ப்புகள் உள்ளது. கோச்சார ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து திருமணம் நடக்கக்கூடிய சூழல் உருவாகும். இறைவழிபாட்டில் ஆர்வம் கூடும். குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி முயற்சியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தொழிலுக்கு வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும்.
21.9.2025 அன்று மாலை 3.58 மணி முதல் 24.9.2025 அன்று அதிகாலை 2.56 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்படுத்த முடியாத திடீர் முடிவுகளால் மன வருத்தங்கள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்கு சிறு சிறு மனச் சங்கடங்கள் உண்டாகும். நவராத்திரி காலங்களில் ஆதிபராசக்தியை வழிபட்டால் சுய ஜாதகத்தில் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அகலும்.
மீனம்
நீண்ட கால ஆசைகள், கனவுகள் நிறைவேறும் வாரம். ராசியில் உள்ள சனி பகவானுக்கு சூரியன் மற்றும் புதனின் பார்வை உள்ளது. அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும். தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நிர்வாகத்திறனும் பொறுப்புகளும் கூடும் எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். வரவேண்டிய கமிஷன் தொகைகள் வந்து சேரும் தந்தை வழி உறவுகளை பகைக்க கூடாது.
ஜாமின் மற்றும் கடன் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி வரை வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். சிலர் புதியதாக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கலாம். குடும்ப முக்கிய பிரச்சினைக்காக வழக்கறிஞரின் ஆலோசனையை நாடுவீர்கள்.
திருமணம் மற்றும் குழந்தை பேரில் நிலவிய தடைகள் அகலும். 24.9.2025 அன்று அதிகாலை 2.56 மணி முதல் 26.9.2025 அன்று மாலை 3.24 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தின் சின்னச் சின்ன பிரச்சினைகளை லேசாக எடுத்து கொள்ள வேண்டும். வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சிலருக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நவராத்திரி காலங்களில் ஸ்ரீ சக்கர வழிபாடு செய்வதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன், கார், பஸ்களில் வந்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர். இன்று அதிகாலை 6 மணிக்கு அடிவார நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு காத்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் சுமார் 5 மணி நேரம் மலை பாதையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரிக்கு செல்ல மலை அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் மலை பாதைகளில் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் மற்றும் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தினர். மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
- அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.
ராமேசுவரம்:
புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
- முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
- ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டால் நலம் யாவும் வந்து சேரும். நல்வாழ்வு தரும் நவராத்திரியில் கொலு படிகள் அமைக்கும் முறை குறித்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.
முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.
நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும்.
ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.
- புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
- சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் ‘நவராத்திரி’.
புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.
சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி'. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.
அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.
எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
தேவியின் அருள் கிடைக்க தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.
இந்த சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா மட்டுமின்றி, பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாகவும் புரட்டாசி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
விநாயகர் விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம்' என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது. புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
மகாலட்சுமி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
அமுக்தாபரண விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.
ஜேஷ்டா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று, ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.
சஷ்டி - லலிதா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.
கபிலா சஷ்டி விரதம்
புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். வருமானப் பற்றாக்குறை அகலும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.
மிதுனம்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
கடகம்
குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு.
சிம்மம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துகொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடும்.
கன்னி
சாமர்த்தியமானப் பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
துலாம்
தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
முன்னேற்றம் அதிகரிக்க முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். உத்தியோக முயற்சியில் இருந்த தடை அகலும்.
மகரம்
கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம். நட்பு பகையாகும்.
கும்பம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு மத்தியில் உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். வரவைவிட செலவு இருமடங்காகும். பிறரை நம்பி செயல்பட இயலாது.
மீனம்
தொழில் முன்னேற்றத்திற்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-5 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை நள்ளிரவு 1.42 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பூரம் காலை 10.56 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று மகாளய அமாவாசை, கோவில்களில் தர்ப்பணம் செய்வது நன்று, திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று சர்வ மகாளய அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று) திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-நன்மை
சிம்மம்-வெற்றி
கன்னி-ஆதாயம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-பாசம்
தனுசு- நற்செய்தி
மகரம்-ஓய்வு
கும்பம்-வெற்றி
மீனம்-சிறப்பு
- ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்.
- அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன்.
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?
வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகபோவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.
அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.
மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.
மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.
எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.
மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.
தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வ அலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.
அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.
இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.
- மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும்.
- தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.
மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம்.
மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்–தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.
மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.
ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.
உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.
எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.
மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.
அதாவது 15 நாட்கள் பித்ருக்களை வழிபட வேண்டியதை மகாளய அமாவாசை குறிக்கிறது. பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து மகாளய அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் பித்ருக்கள் பூலோகத்தில் இருக்கும் காலமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 8- ந்தேதி மகாளயம் தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரையிலான 14 நாட்கள் பித்ருக்கள் நம்மை நெருங்கி இருக்கும் மகாளயபட்ச தினங்களாகும்.
திதி என்னவென்று தெரியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணத்தை மிகவும் சிரத்தையாக செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக செய்தாலே போதும், பித்ருக்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.
அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள். மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.
மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம். தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.
வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.
அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்.






