என் மலர்
அமெரிக்கா
- அரசு மேற்கொண்ட நடவடிக்கை இரக்கமற்ற செயல்.
- பீனட் உடன் வீடியோ எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
நியூ யார்க் அரசு அதிகாரிகள் இணையத்தில் அதிக பிரபலமாக இருந்த அணில்- 'பீனட்'-ஐ கொன்று குவித்ததற்கு முன்னணி பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்தார். பீனட் உயிரிழப்புக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில், "அதிபர் டொனால்டு டிரம்ப் அணில்களை காப்பாற்றுவார். RIP பி'னட்," என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் பினட் புகைப்படத்தினை இணைத்துள்ளார். இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை இரக்கமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில் பீனட்-ஐ ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரத்தில் உருவாக்கப்பட்ட படத்தை பதிவிட்டு, "நீங்கள் என்னை அடித்தால், நீங்கள் கற்பனை செய்வதை விட நான் அதிக சக்தி வாய்ந்தவனாக மாறுவேன்," என குறிப்பிட்டுள்ளார்.
நியூ யார்க்கை சேர்ந்த மார்க் லாங்கோ பீனட் என்ற அனிலுடன் ஏழு ஆண்டுகளாக வாழந்து வந்தார். அவ்வப்போது பீனட் உடன் வீடியோ எடுத்து வெளியிடுவதை மார்க் லாங்கோ வாடிக்கையாக கொண்டிருந்தார்.
- அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:
வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கமலா ஹாரிஸ், ஜார்ஜியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். வடக்கு கரோலினாவில் டிரம்ப் ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அயோவா மாகாணத்தில் நடந்த இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார். 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- அவேஞ்சர்ஸ் நடிகர்கள் வீடியோ கால் மூலம் ஒன்று கூடினர்.
- அப்போது அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
இருவர்களுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது. கருத்துக் கணிப்பில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். கமலா ஹாரிஸ்க்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மார்வெல்ஸின் அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் ராபர்ட் டொனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் எவன்ஸ், மார்க் ரஃப்ல்லோ உள்ளிட்டோர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடியோ காலில் இணைந்துள்ளனர். அப்போது அமெரிக்கா அதிபர் தேர்தல் குறித்து விவாதித்தனர். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், ஜனநாயகத்திற்கான ஒன்று கூடுவோம், எப்போதும் கமலா. நாங்கள் உங்களோடு நிற்கிறோம்" என கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிம் வால்ஸ் ஆகியோரை டேக் செய்து" மார்க் ரஃப்ல்லோ வீடியோ வெளியிட்டுள்ளார்.
தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற்றாலும் முன்னதாகவே வாக்களிக்கும் வசதி உள்ளது. ஜோ பைடன் 40 நிமிடங்கள் காத்திருந்தது தனது வாக்கை செலுத்தினார். பல்வேறு மாகாணங்களில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
- உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
- இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்கள்தான் உள்ளன. குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது ஆதரவாளர்கள் இடையிலான பிரசார நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை கடுமையாக தாக்கு பேசி வருகிறார்.
இந்த நிலையில் தனது தீபாவளி மேசேஜ்-ல் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இந்துக்களை புறக்கணித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில் "உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர். இருந்தபோதிலும் நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக ஆக்குவோம். வலிமை மூலம் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்.
வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்றுகாட்டுமிராண்டித் தனமாக வன்முறைக்கு எனது கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அதிகாரித்திற்கு கீழ் இப்படி ஒரு நம்பவம் நடைபெற்று இருந்திருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வன்முறை தொடர்பாக முதன்முறையாக டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
- இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு இந்திய வம்சாவளியினர் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நிறுவனம், யூகோவ் நிறுவனத்துடன் இணைந்து 2024 இந்திய-அமெரிக்க மனப்பாங்குகள் என்ற தலைப்பில் புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பில் பதிவு செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க வாக்காளர்களில் 62 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர், டிரம்பிற்கு 32 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.
இந்திய-அமெரிக்க பெண்களிடம் கமலா ஹாரிசுக்கு 67 சதவீதம் பேரும், டிரம்பிற்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்க ஆண்களில் கமலா ஹாரிசுக்கு 53 சதவீதமும், டிரம்பிற்கு 39 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.
- போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது
- இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளன
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டோன்லடு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. அதன்படி அதிபர் ஜோ பைடனும் தனது வாக்கினை செலுத்தினார்.
இந்நிலையில் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைநகர் வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இரு சம்பவங்களிலும் தீயணைத்துப்புத்துறை துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்தது. இருப்பினும் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் தீயில் புகைந்து சேதமடைந்தன. இதனால் சொற்ப வாக்குச்சீட்டுகளை மட்டுமே சேதமின்றி மீட்க முடிந்ததது.
இதனையடுத்து இந்த சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பலா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையே செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் நேர வன்முறை கண்டிக்கத்தக்கது என்றும் அரசு சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.
- சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் அவர்களுடன் சகஜமாகப் பேசினார். மேலும் அங்கு சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.
தொடர்ந்து 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார். 81 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
- பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடுகிறேன்.
- எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட இந்திய பண்டிகைகளைப் பற்றி கூறுவார்
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி [வியாழக்கிழமை] வர உள்ள நிலையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை மனநிலை அனைவரையும் குதூகலப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உலகம் மட்டும் அள்ளாது தற்போது விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியுள்ள வாழ்த்து வீடியோவில், வெள்ளை மாளிகையிலும் உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த வருடம் பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட பிற இந்திய பண்டிகைகளைப் பற்றி எடுத்துரைத்து இந்திய கலாச்சாரத்தோடு என்னை நெருக்கத்தில் வைத்திருந்தார். எனவே விண்வெளியில் இருப்பினும் தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்வதாகப் பேசியுள்ளார்.
நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
- வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது என்று தெரிவித்தார்.
- அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது.
இந்து மதத்தின் பிரதான பண்டிகையாக விளங்கும் தீபாவளி வரும் அக்டோபர் 31 [வியாழக்கிழமை] கொண்டாடப்படுகிறது. எனவே நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி சமீப வருடங்களாக உலகம் முழுவதும் தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் அமெரிக்காவிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையிலும் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இதில் குத்துவிளக்கேற்றிய ஜோ பைடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும் அதிபர் ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்தில், வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது குறித்து குறிப்பிட்டு அனைவருக்கும் தீபாவளி தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது. உலகத்திலேயே மிகவும் வேகமாக வளரும் சமூகமாக இது உள்ளது. பன்முகத்தன்மை வாய்ந்த அமெரிக்கா தற்போதுள்ள நிலைமைக்கு எப்படி வந்தது என்பதை ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.
- சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.
- சட்டத்தை மீறி உள்ளார் என்று ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்:
உலகில் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரித்து உள்ளார். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக இருந்து வரும் எலான் மஸ்க் தற்போது அதே பிரச்சினையில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தொழில் அதிபர் எலான் மஸ்க் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணியாற்றினார் என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் 1995-ம் ஆண்டு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக படிப்பை நிறுத்தி விட்டு ஜிப்-2 என்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வேலை செய்தார். இது தான் அவரது முதல் வேலை. இந்த காலகட்டத்தில் அவர் முறையான அங்கீகாரம் இல்லாமல் பணிபுரிந்து உள்ளார்.
1997-ம் ஆண்டு அமெரிக்காவில் பணி செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றார். மாணவர் விசாவில் அவர் அமெரிக்காவில் இருந்தது சட்டவிரோதமாகும் என அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது உலகில் மிகப்பெரிய பணக்காரர் இங்கு ஒரு சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.
அவர் மாணவர் விசாவில் வந்த போது பள்ளியில் தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் பள்ளியில் இல்லை. அவர் சட்டத்தை மீறி உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.
எலான் மஸ்க் விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார்.
- வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.
அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த ஒருவர் ஒரு கடைக்கு வெளியே தரையில் கிடந்த $20 வைத்து வாங்கிய டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி அடித்துள்ளது.
பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார். ஸ்பீட்வேக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் $20 கிடப்பதைக் கண்டார்.
அவர் அதை எடுத்துக்கொண்டு, பூனில் உள்ள NC 105 இல் ஸ்பீட்வேயில் நடந்து, ஒரு எக்ஸ்ட்ரீம் கேஷ் ஸ்கிராட்ச்-ஆஃப் வாங்கினார்.
ஜெர்ரி ஹிக்ஸ் தேடிய டிக்கெட் அவர்களிடம் உண்மையில் இல்லை, அதற்கு பதிலாக அவர் இதை வாங்கி உள்ளார். அந்த டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது.
வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.
20 ஆண்டுகளில் $50,000 அல்லது மொத்த தொகையாக $600,000 பரிசைப் பெறுங்கள். அவர் பிந்தையதை தேர்ந்தெடுத்தார் மற்றும் தேவையான மாநில மற்றும் வரி பிடித்தம் செய்த பிறகு $429,007 கிடைத்துள்ளது.
ஹிக்ஸ் குடும்பத்திற்கான திட்டங்களை வைத்துள்ளார். அவர் வெற்றி பெறும் தொகையை தனது குழந்தைகளுக்கு உதவவும், 56 ஆண்டுகள் தச்சராக பணியாற்றி ஓய்வு பெறவும் விரும்புகிறார்.
- ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார்.
- நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை அதிகாரி விஜய காதே உட்பட முக்கிய பிரமுகர்களை நீக்கினார்
எலான் மஸ்க் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். அதோடு பணிநீக்கம் செய்வது என அந்நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தார். ட்விட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் அதில் அடக்கம்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் கையில் தண்ணீர் சிங்க் உடன் தான் ட்விட்டர் அலுவலகத்திற்குள் முதன்முறையாக நுழைந்த புகைடபத்தை பதிவிட்டு "Let that sink in!". இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பொருள்படும்படி தற்போது பதிவிட்டுள்ளார்.
நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை அதிகாரி விஜய காதே உட்பட முக்கிய பிரமுகர்களை டிவிட்டரில் இருந்து நீக்கம் செய்ததை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பொருள்படும்படி அவர் அப்போது சிங்க் உடன் வந்தது குறிப்பிடத்தக்கது.






