search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Population"

    • இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி.
    • சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி.

    பீஜிங் :

    உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது.

    இது குறித்து, பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் பேசிய சீன வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    மக்கள் தொகை பங்களிப்பு அளவைச் சார்ந்தது அல்ல அது தரத்தைச் சார்ந்தது. மக்கள் தொகை முக்கியம், அதே போன்றுதான் திறமையும். சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தாண்டும். தரமான பணியாளர் வர்க்கத்தினர் 90 கோடி பேர் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 142.6 கோடியாகும். இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 141.7 கோடியாகும்.
    • அமெரிக்க மக்கள் தொகை 33.8 கோடியாகவும், இந்தோனேசிய மக்கள் தொகை 27.6 கோடியாகவும், பாகிஸ்தான் மக்கள் தொகை 23.6 கோடியாகவும் உள்ளது.

    புதுடெல்லி:

    உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில் நவம்பர் 15-ந் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று கணித்திருந்தது. அதன்படி இன்று உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்து விட்டதாக ஐ.நா. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபை கணிப்பின் படி அடுத்த ஆண்டு சீனாவை இந்தியா முந்தி மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு என இன்று உலகம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

    1950-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 2020-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை வளர்ச்சி சரிவடைந்து உள்ளது.

    காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய 8 நாடுகளில் மட்டும் 2050-ம் ஆண்டு அதிகரிக்கும் மக்கள் தொகையில் பாதி அளவு பங்களிப்பு இருக்கும். மேலும் உலக மக்கள் தொகை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 850 கோடியை தாண்டும். 2050-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 970 கோடியை தாண்டி விடும். 2080-ம் ஆண்டு மக்கள் தொகை மிகவும் உச்சத்தை எட்டி 1000 கோடியை தாண்டி விடும். 2100-ம் ஆண்டு மக்கள் தொகை 1040 கோடியாக அதிகரிக்கும். மக்கள் தொகை 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடம் ஆனது.

    சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 142.6 கோடியாகும். இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 141.7 கோடியாகும்.

    இதேபோல் அமெரிக்க மக்கள் தொகை 33.8 கோடியாகவும், இந்தோனேசிய மக்கள் தொகை 27.6 கோடியாகவும், பாகிஸ்தான் மக்கள் தொகை 23.6 கோடியாகவும் உள்ளது. இறப்பு விகிதம் குறைவதால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டில் மனிதனின் சராசரி ஆயுட் காலம் 72.8 ஆண்டுகளாக உள்ளது.

    இது 1990-ம் ஆண்டை காட்டிலும் சராசரி ஆயுட் காலம் 9 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து இறப்பு விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது 2050-ம் ஆண்டு உலக அளவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 77.2 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அதிக கருவுறுதல் நிலைகளை கொண்ட நாடுகள் தனிநபர் வருமானம் குறைந்த நாடுகளாக இருக்கும். எனவே உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சியால் காலப்போக்கில் உலகின் ஏழ்மையான நாடுகளில் அதிகரித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. இதில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் 1 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகி இருந்தது.

    பெரும்பாலான சப்சகாரா ஆப்பிரிக்க நாடுகள், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களே சமீபத்திய கருவுறுதல் சரிவுக்கு காரணமாக உள்ளது. உழைக்கும் வயது மக்கள் தொகையின் இந்த வளர்ச்சியால் தனிநபர் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

    ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கூறுகையில்,

    "800 கோடி மக்கள் தொகை என்பது மனித குலத்துக்கு ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். மக்கள் தொகை அதிகரிப்பை பொறுத்தவரை இது ஆயுட்காலம் அதிகரிப்பதையும், தாய் மற்றும் குழந்தை இறப்புகள் குறைவாக இருப்பதையும் குறிக்கிறது. ஆனால் இந்த மக்கள் தொகை அதிகரிப்பினால் கொண்டாட்டங்களை விட அதிக கவலைகளை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

    மக்கள் தொகை நிபுணர் கனெம் கூறுகையில், 'உலகின் அதிக மக்கள் தொகையை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் பணக்காரர்களின் அதிக அளவு நிலத்தின் வளங்கள் நுகர்வு குறித்தே கவலைப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    • கை கழுவுவது, கையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி எடுத்து கூறினார்.
    • வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரவன், பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புனித அமல அன்னை உயர்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பது, கை கழுவுவது, கையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி எடுத்து கூறினார்.

    இதில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரவன், மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
    • உலக மக்கள்தொகை தின பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பேருந்து நிலையத்தில் முடிவுற்றது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி சமுதாய சுகாதார மையத்தின் சார்பில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் முருகானந்தம், லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்குமார், சி.பி.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.

    ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் வினோத்குமார்ஜெயின், செயலர் வெங்கன்னபாபு, பொருளாளர் உதயகுமார், வினய் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், ராஜ்குமார், பிரவீன்காந்தி, கிராம செவிலியர்கள், அன்னை தெரசா நர்சிங் காலேஜ் லியோ சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி, செயலாளர் கௌரி,

    பொருளாளர் ஆர்த்தி மற்றும் மாணவிகள், அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • ‘மிகுதியான மக்கட்தொகையினால் வளர்ச்சி மற்றும் இயற்கையின் மீது ஏற்படும் விளைவு’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • ஏ-4 அளவு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். தேவையான அனைத்து பொருட்களும் போட்டியில் பங்கு பெறுபவர்கள் கொண்டு வரவேண்டும்

    நெல்லை:

    உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் 'மிகுதியான மக்கட்தொகையினால் வளர்ச்சி மற்றும் இயற்கையின் மீது ஏற்படும் விளைவு' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான போஸ்டர் உருவாக்குதல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவியல் மையத்திற்கு நேரில் சென்று கலந்து கொள்ளலாம்.

    ஏ-4 அளவு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். தேவையான அனைத்து பொருட்களும் போட்டியில் பங்கு பெறுபவர்கள் கொண்டு வரவேண்டும் என்று அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசின் கொரானா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் தெரிவித்துள்ளார்.

    மேலும் விபரங்களுக்கு போட்டியாளர்கள் 94429 94797 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    ×