என் மலர்
அமெரிக்கா
- அவருக்கு காதலியாக எம்.ஜே கதாபாத்திரத்தில் ஜெண்ட்யா நடித்தார்
- 2025 கோல்டன் குளோப்ஸ் விருது நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை ஜெண்ட்யா அணிந்திருந்த 5 காரட் மோதிரம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
2017 ஆம் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படம் மூலம் உலக அளவில் அறியப்பட்டவர் டாம் ஹோலேண்ட். புதிய ஸ்பைடர்மேனாக மக்கள் மனங்களை கவர்ந்த அவர் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகராக இருந்தார்.
தொடர்ந்து ஸ்பைடர் மேன் ஃபார் பிரம் ஹோம், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படங்களிலும், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திலும் சைபடர்மேனாக டாம் ஹோலேண்ட் நடித்தார். அவருக்கு காதலியாக எம்.ஜே கதாபாத்திரத்தில் ஜெண்ட்யா நடித்தார். திரையில் காதலர்களாக நடித்த இவர்களுக்கு இடையே உண்மையிலேயே காதல் மலர்ந்தது.

இருப்பினும் தங்கள் காதல் குறித்து பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் ஜனவரி 5 ஆம் தேதி நடந்த 2025 கோல்டன் குளோப்ஸ் விருது நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை ஜெண்ட்யா அணிந்திருந்த 5 காரட் மோதிரம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இது டாம் மற்றும் ஜெண்ட்யாவின் நிச்சயதார்த்த மோதிரம் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் டாம் ஹொலேண்ட் தந்தை டொமினிக் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தனது பதிவில், டாம் ப்ரொபோஸ்காக எல்லாவற்றையும் கவனமாக திட்டமிட்டான். ஜெண்ட்யாவுடைய தந்தையின் அனுமதியை கூட முன்கூட்டியே வாங்கிவிட்டான்.
மோதிரத்தை வாங்குவது, பின் ஜெண்ட்யா தந்தையுடன் பேசுவது என எப்போது, எங்கு, எப்படி, என அனைத்தையும் திட்டமிட்டான் என்று பதிவிட்டுள்ளார். டாம் மற்றும் ஜெண்ட்யா ஆகிய இருவருக்கும் 28 வயதாவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
- காட்டுத்தீயை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவியது.
மேலும் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்சில் நடிகர்-நடிகைகளின் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன.
இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீயை அணைப்பதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து தீயணைப்புத்துறை தலைவர் ஆடம் வான் கெர்பன் கூறும்போது, சில தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். தீயணைப்பு வீரர்களை நாம் மேம்படுத்த வேண்டும், மாற்றியமைக்க வேண்டும் மற்றும் சமாளிக்க வேண்டும் என்றார். இதற்கிடையே கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் கூறும்போது, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீயை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து பசிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஈடன் பகுதிகளில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 இடங்களில் பெரிய அளவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.
- 13-ந்தேதி வெளியுறவுத்துறை சார்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். டிரம்ப் அதிபராக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் 20-ந்தேதி நண்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். அதற்கு முன்பாக வருகிற 15-ந்தேதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு பிரிவுபசார உரையாற்றுகிறார்.
அப்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13-ந்தேதி வெளியுறவுத்துறை சார்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜோ பைடன் தான் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு தனது மகன் உள்பட பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கிடையே மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஜோ பைடன் கூறும்போது, எதற்கும் என்னை மன்னித்துக் கொள்வது பற்றி நான் யோசிக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
கமலா ஹாரிஸ் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர். ஆனால் அது அவரே எடுக்க வேண்டிய முடிவாக இருக்கும் என்றார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன்தான் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் டிரம்புடனான நேரடி விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடன் திணறினார். இதனால் வயோதிகம் காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் டிரம்ப் உடனான நெருக்கம் தொடர்பாக பேட்டி அளித்தார்.
- தொடர்பு குறித்து தொடர்ந்து செய்தி வெளியாகாமல் இருக்க பணம் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
அமெரிக்க அதிபராக வரும் 20-ந்தேதி பதவி ஏற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் முதன் முறையாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டி அளித்தார். இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், ஸ்டாம்மி டேனியல்ஸ் மேலும் தகவல் ஏதும் கூறாமல் இருக்க பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார். இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்திற்கு முறைகேடாக பொய் கணக்கு எழுதியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதிபர் தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வரும் 20-ந்தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்க இருக்கும் நிலையில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ஜனவரி 10-ந்தேதி (உள்ளூர் நேரப்படி) தண்டனையை அறிவிக்க உள்ளதாக நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டிரம்ப்-ஐ நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டு உள்ளார். குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு சிறை தண்டனையோ அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது. முன்னதாக சிறை தண்டனை வழங்கப்படாது என நீதிபதி தெரிவித்திருந்தார். தற்போது அபராதமும் விதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். அபராதம் விதிக்கப்படாத நிலையிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாகும் முதல் நபர் டொனால்டு டிரம்ப் ஆவார்.
இந்த வழக்கில் தண்டனையை அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி நியூயார்க் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் முறையீடு செய்திருந்தார். இரண்டு நீதிமன்றங்களும் டொனால்டு டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது. அதன்பிறகு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
- டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன.
- டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார்.
அவர் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.8 கோடியே 58 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளது.
- அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.
- அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.
வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் 900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
கனடா அரசுக்கு சொந்தமான விமானம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
- பயனர்கள் பலரும் தீவிபத்தில் சிக்கிய வன விலங்குகள் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஹாலிவுட் இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வசிக்கின்றனர். அங்கு சமீபத்தில் பயங்கரமான காட்டுத்தீ பற்றியது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின.
கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கிய மான் குட்டி ஒன்று தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
அதில், அல்டடெனா வழியாக ஒரு குட்டி மான் ஓடும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் தீவிபத்தில் சிக்கிய வன விலங்குகள் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.
- பள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
- ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் சினிமா நகரமாக அறியப்படுகிறது. மலைகள், பாறைகள் நிறைந்த அந்த பகுதி படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
எனவே அதனை சுற்றியுள்ள பகுதியில் ஹாலிவுட் இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் அங்கு சமீபத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீ வேகமாக பரவியது. இதில் பள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 16 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகின. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் எரிமலை வெடித்ததை போன்று காட்சியளிக்கிறது. எனவே அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மற்றொருபுறம் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை ரத்து செய்து உள்ளார். முன்னதாக காட்டுத்தீயால் அவரது லாஸ் ஏஞ்சல்ஸ் பயணமும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டாா்மி டேனியல்ஸ், டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
- கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து டொனால்டு டிரம்ப் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த நிலையில், தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நடிகையுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக டொனால்டு டிரம்ப் நடிகைக்கு 1.3 லட்சம் டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனல்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார்.
- டிரம்ப் உடனான நேருக்குநேர் விவாதத்தில் ஜோ பைடன் திணறியதால் கமலா ஹாரிஸ் வேட்பாளராக தேர்வு.
- அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 312 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிடுவதற்காக ஜனநாயக கட்சியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உள்கட்சி தேர்தல் நடைபெற்று வந்தது.
இதில் அதிபராக இருக்கும் ஜோ பைடன்- துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இருந்த போதிலும் ஜோ பைடன் முன்னிலை பெற்றிருந்தார்.
அப்போதுதான் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேருக்குநேர் விவாதத்தில் டொனால்டு டிரம்ப்- ஜோ பைடன் பேசினர். அதில் டொனால்டு டிரம்ப் கேள்விகளுக்கு ஜோ பைடன் பதில் அளிக்க திணறினார். இதனால் கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜனநாயக கட்சியில் குரல்கள் எழும்பின. இதனால் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் என முன்மொழிந்தார். பின்னர் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பை எதிர்த்து போட்டுயிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் டொனால்டு டிரம்ப் 312 இடங்களில் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ்க்கு 226 இடங்களே கிடைத்தது.
இதனால் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று வருகிற 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது, அவரை தோற்கடிக்க தனக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்ததாக உண்மையிலேயே நினைத்தேன். அதேவேளையில் தனக்கு 85 வயது, 86 வயதானதால் அதிபர் ஆக வேண்டும் எண்ணம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
- கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ
- ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த எக்ஸ் பதிவிற்கு எலான் மஸ்க் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில், "பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் கவர்னராக இருக்க போவதில்லை. ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
- சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் நாசமாகின. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். காட்டுத்தீ காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். காட்டுத்தீயால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு (புதன்கிழமை) காற்றின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்று (வியாழன் கிழமை) வரை நிலைமை மோசமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறையினர் கூறும் போது, "எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், இத்தகைய காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீயணைப்பு வீரர்கள் அனைத்து துறைகளிலும் இல்லை," என்று தெரிவித்தார்.






