என் மலர்
நீங்கள் தேடியது "Mexico US Border"
- சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்
- அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாதுகாப்புக்காக 10,000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஏற்கனவே பணியில் உள்ள வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், தனது பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றவும் முயல்வதால் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு சுமார் 3,000 ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பென்டகன்
தெரிவித்துள்ளது.
மெக்சிகோ எல்லையில் உள்ள அமெரிக்காவின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். #MigrantBoyDies #MexicoUSBorder
வாஷிங்டன்:
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல்சால்வடார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிக அளவில் நுழைகின்றனர்.
இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். தடையை மீறி அமெரிக்காவினுள் நுழையும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடும் நடைபெறுகிறது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கவுதமாலாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளான். இத்தகவலை அமெரிக்காவின் குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் பெயர் பெலிப் அலோன்சோ-கோமஸ் என்றும், இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டெக்சாஸ் எம்பி ஜோவாகின் கேஸ்ட்ரோ வலியுறுத்தி உள்ளார்.
மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அகதிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பு அதே கவுதமாலாவை சேர்ந்த ஏழு வயது சிறுமி அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MigrantBoyDies #MexicoUSBorder
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல்சால்வடார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிக அளவில் நுழைகின்றனர்.
இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். தடையை மீறி அமெரிக்காவினுள் நுழையும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடும் நடைபெறுகிறது.

உயிரிழந்த சிறுவன் பெயர் பெலிப் அலோன்சோ-கோமஸ் என்றும், இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டெக்சாஸ் எம்பி ஜோவாகின் கேஸ்ட்ரோ வலியுறுத்தி உள்ளார்.
மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அகதிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பு அதே கவுதமாலாவை சேர்ந்த ஏழு வயது சிறுமி அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MigrantBoyDies #MexicoUSBorder






