என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, ஸ்பெயினின் ராபர்ட் கார்பெலஸ்-அர்ஜென்டினாவின் பெடரிகோ கோரியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல் கலப்பு இரட்டைய பிரிவி இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, நெதர்லாந்தின் டெமி சர்ஸ்-ஜெர்மன் வீரர் டிம் புட்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
- கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும்
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிச்சிகனில் நடந்த குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், "அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும். நான் 2 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஜப்பான் வீராங்கனை எனா ஷிபாஹரா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக வீராங்கனை சோபியா கெனினை 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி சதி செய்ததாக டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தனக்கு எதிராக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சதி செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த முறை அவர் சட்டவிரோதமாக ஏதாவது செய்தால், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஏமாற்றும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் என்று டிரம்ப் தனது வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார்.
அதில் மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு எதிராக பேஸ்புக்கை வழிநடத்தியதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
- கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான்.
- ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.
அமெரிக்காவின் ஓகிஹோ மாகாணம் கிளீவ்லேண்ட் நகரை சேர்ந்தவன் ஜான் ஹென்றி. இதய கோளாறுடன் பிறந்த அவனுக்கு 5 மாத குழந்தையாக இருந்தபோது தற்காலிக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதய மாற்று சிகிச்சையே நிரந்தர தீர்வு என டாக்டர்கள் கூறினர்.
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான். இன்றோ, நாளையோ என இதய தானத்திற்காக ஜான் ஹென்றி காத்திருந்தநிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஜான் ஹென்றிக்கு பொருத்துவதற்கான தகுந்த இதயம் கிடைத்தது.
இந்த தகவல், அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் உற்சாகத்தை அளித்தது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.
மருத்துவ உபகரணத்துடன் 'நான் புதிய இதயத்தை பெறுகிறேன்' என கூறியப்படி அவன் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினான். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ வைத்துள்ளது.
+6
- சென்னை சிறுசேரியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் நோக்கியா தொழிற்சாலை.
- சென்னை தரமணியில் செமிகண்டக்டர் தொழில்நுட்ப வளர்ச்சி மையம்.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 27.8.2024 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோ நகரிற்கு 28.8.2024 அன்று சென்றடைந்தார்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள்:-
1. நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நோக்கியா நிறுவனமானது ஃபின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனம் ஆகும். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 450 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்வில், நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் (Chief Strategy and Technology Officer) நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிகக் குழு தலைவர் (President - Fixed Network Business Group) திருமதி சாண்டி மோட்லி ஆகியோர் பங்கேற்றனர்.

2. பேபால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் (PayPal Holdings, Inc.) அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும். இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு உதவுகிறது. காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது.
பேபால் நிறுவனம் சென்னையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் (Advanced development center focussed on AI) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், பேபால் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் (EVP - Chief Technology Officer) ஸ்ரீனி வெங்கடேசன், சர்வதேச அரசாங்க உறவுகள் தலைவர் (Head of International Govt. Relations) ஜி - யாங் டேவிட் ஃபேன் ஆகியோர் பங்கேற்றனர்.

3. ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் (Yield Engineering Systems) செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். மேம்பட்ட பேக்கேஜிங், ஐஓடி, லைஃப் சயின்ஸ், ஏஆர்.விஆர், எம்இஎம்எஸ், பவர் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தைகளில் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு புதுமைகளை வழங்கும் மேற்பரப்பு மற்றும் பொருட்களை மேம்படுத்தும் அமைப்புகள் (அதாவது வெப்ப செயலாக்கம், ஈரச் செயலாக்கம், பிளாஸ்மா சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு) போன்றவற்றை வழங்குகின்றன.
அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி (Product development and manufacturing facility for Semiconductor equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்வில், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ரமாகாந்த் அலபதி, முதன்மை நிதி அலுவலர் பிரபாத் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

4. மைக்ரோசிப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனமானது (Microchip Technology Inc.) ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர் ஆகும். இது பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு (5G, EVகள், IOT, தரவு மையங்கள் போன்றவை) ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டான தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர் ஆகும்.
அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம், உலகளவில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகளில் பல உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
மைக்ரோசிப் நிறுவனம் 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் IC வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு (CAD), பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் சுமார் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D Center in Semiconductor Technology) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்வில், மைக்ரோசிப் நிறுவனத்தின் மூத்த கார்ப்பரேட் துணைத் தலைவர் பேட்ரிக் ஜான்சன், கார்ப்பரேட் துணைத் தலைவர் புரூஸ் வேயர் ஆகியோர் பங்கேற்றனர்.

5. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் (Infinx Healthcare) புரிந்துணர்வு ஒப்பந்தம்
இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் நோயாளிகளுக்கு விரைந்து உதவக்கூடியவை, உரிமைகோரலின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகின்றன, தடைகளை அகற்றுகின்றன.
இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்கிட கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே
50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் (Technology and Global Delivery Center) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்வில், இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் ராதிகா டாண்டன் பங்கேற்றார்.
6. அப்ளைடு மெட்டீரியல்ஸ் (Applied Materials) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அப்ளைடு மெட்டீரியல்ஸ் உலகின் நம்பர் 1 குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் நிறுவனம். சில்லுகள் மற்றும் மேம்பட்ட காட்சிகளை தயாரிக்கப் பயன்படும் பொருள் பொறியியல் தீர்வுகளில் முன்னணியில் உள்ளனர்.
அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனமானது கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளவில் 24 நாடுகளில் 150 நகரங்களில் செயல்பட்டு வரும் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Advanced artificial intelligence enabled technology development center for semiconductor manufacturing and equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்வில், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் செமிகண்டக்டர் தயாரிப்புகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரபு ராஜா, துணைத் தலைவர் சதீஷ் குப்புராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக நான் இருந்து வருகிறேன். மாநிலம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றன. தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. உயர்க்கல்வியில் 48 சதவீதம் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலேயே வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது" என்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி முதல் சுற்றில் போராடி வென்றது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அர்ஜென்டினாவின் கிடோ ஆன்ட்ரியோஸ் ஜோடி, நியூசிலாந்தின் மார்கஸ் டேனியல், மெக்சிகோவின் ரேயஸ் வரெலா ஜோடியுடன் மோதியது.
இதில் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 5-7, 6-1, 7-6 (12-10) என்ற செட்களில் போராடி வென்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
ஏற்கனவே யூகி பாம்ப்ரி ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் வடக்குப் பகுதியில் 2022-ல் 17.2 சதவீதம் காற்று மாசு குறைந்தாலும் ஆபத்து.
- மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் அதிக சவால்களை எதிர்கொள்ளும் மாநிலமாக திகழ்கின்றன.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இப்படியே நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக வங்கதேசம் அதிக மாசுபாடு கொண்ட நாடாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அந்த அறிக்கை வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்தியாவின் மிகவும் மாசுபட்ட பகுதி வடக்கு பகுதி ஆகும். இது 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாகும். 2022-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் காற்று மாசுவின் தரநிலை அளவு 17.2% குறைந்தாலும், இந்த மாசு நிலைகள் நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்ந்தால் ஆயுட்காலம் 1.2 ஆண்டு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் கூட, மேலும் மேலும் காற்று மாசுபடுவதை குறைக்கும் அவசியத்தை நிலைமை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வடக்கு பகுதி தாண்டி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கிறது. இங்கு சராசரியாக 29.23 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் 2.9 வருடங்களை இழக்க நேரிடும்.
தெற்கு ஆசியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 20 ஆண்டுகளில் 2022-ல் காற்று மாசுபாடு 18 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன்-பாட்ரிக் தாக் ஜோடியுடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்க ஜோடியை வென்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
- பொதைப்பொருள் உட்கொண்டு பெண்ணுடன் உடலுறவு கொண்ட பின், கழுத்து நெரித்து கொலை.
- லிஃப்ட் கேட்ட பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு படுகொலை.
அமெரிக்காவின் பிளோரிடா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு பெண்களை திட்டமிட்டு கொடூரமான வகையில் கொலை செய்த வழக்கில் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்ட வேட் வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர் வேடு வில்சன். டெட்பூல் கில்லர் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் வேடு வில்சன். தனது பெயரும் அதே என்பதால் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்டார். அத்துடன் தனது உடலில் டெட்பூல் கில்லர் என பச்சைக்குத்தியுள்ளார்.
வில்சன் முதலில் மெல்டன் என்ற பெண்ணை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதற்கு முன் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டு உடலுறவு வைத்துள்ளனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட கிறிஸ்டைன் மெல்டனில் (வயது 35) காரை திருடிக் கொண்டு, அவரது போனை பயன்படுத்தி தனது பெண் தோழியான மெலிஸ்சா மோன்டனேஸ்-க்கு (வயது 41) போன் செய்துள்ளார். அவர் வில்சனை நம்பி வர, பெண் தோழியை அடித்து உதைத்துள்ளார். மேலும் காரில் ஏற வற்புறுத்தியுள்ளார். ஆனால் மெலிஸ்சா மோன்டனேஸ் காரில் ஏற மறுத்து விட்டார்.
இதனால் வில்சன் காரை எடுத்து புறப்பட்டார். கேப் கோரல் பகுதிக்கு செல்லும்போது சாலையில் ரூய்ஸ் என்ற பெண் காரை மறித்து உதவி கேட்டுள்ளார்.
அவரை காரில் ஏற்றிய வில்சன், கார் கொஞ்ச தூரம் சென்றபின், அவரையும் கழுத்தை நெரித்து காரில் இருந்து வெளியே தள்ளியுள்ளார். இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும்வரை காரை திரும்ப திரும்ப அவர் மீது ஏற்றியுள்ளார். இதெல்லாம் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த கொலையெல்லாம் திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை செய்ததாக அரசு தரப்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விசாரணை மூலம் தெரிய வந்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வில்சனுக்கு மரண தண்டனை வழங்கியது.
மரண தண்டனை வழங்கும்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வில்சன், எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாத வகையில் அமைதியாக நின்றிருந்தார்.
இதற்கிடையே சிறையில் வில்சன் இருந்தபோது அவருக்கு ஆயிரக்கணக்கான காதல் கடிதங்கள் வந்துள்ளன. வில்சனின் வளர்ப்பு பெற்றோர், நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கக் கூடாது என கெஞ்சினர். ஆனால் நீதிமன்றம் கோரிக்கை ஏற்றுக் கொள்வில்லை.
- ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.
- அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்கள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டுப்பாடம் செய்து வரும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.
அந்த அசைன்மென்டில் ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுக்கப்பட்டன.
அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் இடம்பெற்ற கேள்விகளை ஒரு மாணவியின் தாயார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது சர்ச்சையாக மாறியது.
அதில் இடம்பெற்ற கேள்விகள் பின்வருமாறு:
உலகம் உருவானது எப்படி? அதனை உருவாக்கியது யார்? எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?
ஒழுக்கம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? கிறிஸ்துவம் என்றால் என்ன?
கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன? கடவுள் இருக்காரா? இல்லையா? சாத்தான் இருப்பது உண்மையா? நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக்கொண்டனரா?
என இதுபோன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.
ஒக்லஹாமாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்ட். உலக வரலாற்றில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சித்தாள் என்கின்றனர். இது மிகவும் அற்பத்தனமானது என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவைக் கண்ட சமூகதள வாசிகள் அப்பள்ளியையும், கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இணைய தளத்தில் பேசுபொருளான நிலையில், இந்தக் கேள்விகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அப்பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் கோகோ காப் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிரசேவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோட்ப்சேவாவை 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






