என் மலர்tooltip icon

    உலகம்

    தொழிலதிபராக கால் பதிக்க சட்டவிதிகளை மீறினாரா எலான் மஸ்க்?
    X

    தொழிலதிபராக கால் பதிக்க சட்டவிதிகளை மீறினாரா எலான் மஸ்க்?

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
    • லாபமும் ரூ.30.4 கோடியிலிருந்து 90 சதவீதம் குறைந்து ரூ.3.1 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தற்போது அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு டிரம்ப்-ஐ வெற்றிபெற வைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவரின் முயற்சிக்கு பெரும் பலமாக இருப்பது அவர் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய டுவிட்டர் தான். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதற்கு அமெரிக்க நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில், எலான் மஸ்க் தனத தொழிலை சட்டவிரோதமாக அமெரிக்காவில் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலாக் மஸ்க் 1999-ல் 300 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்ட Zip2 நிறுவனத்தை கட்டும் போது சட்டபூர்வ அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்தியாவில் Twitter Communications Pvt Ltd என்ற பெயரில் இயங்கி வரும் எக்ஸ் 2024ஆம் நிதியாண்டில் கடுமையான வருவாய் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிறுவனத்தின் இந்திய டிவிட்டர் பிரிவின் வருவாய் கிட்டத்தட்ட 90% குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.207.7 கோடியிலிருந்து தற்போது ரூ.21.1 கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், அதன் லாபமும் ரூ.30.4 கோடியிலிருந்து 90 சதவீதம் குறைந்து ரூ.3.1 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×