என் மலர்tooltip icon

    உலகம்

    • நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    மாஸ்கோ:

    இந்தியா முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

    அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்தியா-ரஷியா ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ: இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படுவது இன்றைய நவீன சவால்களை எதிர்கொள்ளும், இரு நாடுகளுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

    ஈரான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், உக்ரைன், நேபாளம், இலங்கை நாடுகளும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார்.

    இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு, அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனித்தனியாக விமானத்தில் வந்து சேர்ந்தனர். அங்கு புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    முன்னதாக, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியின் பல்வேறு இடங்களிலும் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், ரஷியா இனி இருக்காது என்றும், உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் காணப்பட்டது. இந்தப் போஸ்டரால் அலாஸ்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
    • டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாஷிங்டன்:

    நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.

    3 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருதரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, ரஷிய அதிபர் புதினுடன் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்திப்புக்கு பிறகு டிரம்பை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் அதிபர் டிரம்ப், அதிபர் புதினை நேருக்கு நேர் சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புதினுக்கு டிரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேசியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


    • தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு வந்து நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

    தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர்களில் சிலர் காலிஸ்தான் கொடிகளை அசைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், போலீசார் தலையிட்டு எந்த மோதலும் இல்லாமல் நிலைமையை தணித்தனர். பின்னர் தூதரக அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

    சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது.
    • ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம்

    79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், ஜனாதிபதி மற்றும் பிரதருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

    அதில், "பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது.

    உங்கள் நாடு உலக அரங்கில் தகுதியான மரியாதையைப் பெற்றுள்ளது மற்றும் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக பங்களிக்கிறது.

    இந்தியாவுடனான எங்கள் சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எங்கள் கூட்டு முயற்சிகள் மூலம், பல பகுதிகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.

    பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்துவதை இருநாடுகளும் ஆதரிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. 

    • காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 50 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் காசா போரை நிறுத்தி ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்டு வர வேண்டும் என கூறி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இஸ்ரேல் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

    இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்தார்.
    • ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் தேக்கம் அடைந்தது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் இது 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதன் காரணமாக ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் தேக்கம் அடைந்தது. இருந்த போதிலும் ஜப்பானின் பொருளாதாரம் உயர்ந்த வண்ணம் உள்ளது. முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது நடப்பு காலாண்டில் 1 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

    • ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
    • ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாஷிங்டன்:

    நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.

    3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து விட்டனர். இருந்த போதிலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் இரு தரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் புதினுடன் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்திப்புக்கு பிறகு டிரம்பை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டார்.

    அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் டிரம்ப்-புதின் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புதினுக்கு டிரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நான் 6 மாதங்களில் 6 போர்களை தீர்த்து விட்டேன். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியா தயாராக உள்ளது. புதின் ஒரு ஒப்பந்தத்தை காண விரும்புகிறார் அவர் அதை செய்வார் என நினைக்கிறேன். நான் அதிபராக இல்லாவிட்டால் அவர் முழு உக்ரைனை கைப்பற்றி இருப்பார் என நினைக்கிறேன். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் முத்தரப்பு சந்திப்பை நோக்கி நகர்வதே தனது இலக்கு. நாங்கள் உக்ரைனுக்கு எந்த நிதி உதவியும் அளிக்கவில்லை. ஆனால் நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம்.

    அதுவும் 100 சதவீதம் நேட்டோ நாடுகள் மூலம் வழங்குகிறோம். உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியபோது நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்து இருக்காது.

    எங்களது 2-வது சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சந்திப்பாக இருக்கும்.

    இது தொடர்பாக புதின் கூறும்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக டிரம்ப் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார். இரு தலைவர்களும் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.

    ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 1959-க்கு பிறகு அமெரிக்கா மாகாணங்களில் ஒன்றாக அலாஸ்கா மாறியது. ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது உடன்பாடு ஏற்படாவிட்டால் ரஷியாவுக்கு மிக கடுமையான பொருளாதார தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு தோல்வியடையும் பட்சத்தில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட் கூறி உள்ளார். இதனால் டிரம்ப்-புதின் சந்திப்பை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    • ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார்
    • இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் எச்சரித்துள்ளார்.

    உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.

    ரஷிய அதிபர் புதின் இன்று அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பும் முக்கிய காரணம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குவைத்தில் விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
    • இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

    குவைத்:

    குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட 63 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர் பலியானார்கள்.

    மற்ற அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் 6-7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்தார்.
    • அலெஸ்காவில் ரஷியா அதிபர் புதினுடன், அதிபர் டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் - ரஷியா இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ரஷியா அதிபர் புதினுடன், அதிபர் டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அதிபர் புதின் சமாதானம் செய்வார், அதிபர் ஜெலன்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன்.

    புதினுடனான இது ஒரு முக்கியமான சந்திப்பு. நாங்கள் உக்ரைனுக்கு எந்தப் பணத்தையும் செலுத்தவில்லை.

    நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். அதில் 100 சதவீதம் நேட்டோவால் செலுத்துகிறோம்.

    நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் 6-7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன, நாங்கள் அதைத் தீர்த்து வைத்தோம்.

    நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன்-ரஷியா போர் ஒருபோதும் நடந்திருக்காது என மீண்டும் தெரிவித்தார்.

    • முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி கொம்புகளாக காட்சி அளிக்கும்.
    • முயல்களுக்கு இடையில் மட்டுமே பரவுவது குறிப்பிடத்தக்கது

    அமெரிக்காவில் தலையில் 'கொம்புகள்' கொண்ட முயல்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அமெரிக்காவின் ஃபோர்ட் காலின்ஸ் மற்றும் கொலராடோவின் பிற பகுதிகளில், தலை மற்றும் முகங்களில் இருந்து கொம்பு போன்ற பாகங்களை கொண்ட காட்டு முயல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலை ஷோப் பாப்பிலோமா (Shope papilloma) என்ற வைரஸால் ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி கொம்புகளாக காட்சி அளிக்கும்.

    இந்த வைரஸ் பெரும்பாலும் தலை, காதுகள் மற்றும் கண் இமைகளைச் சுற்றி பாதிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த வைரஸ் முயல்களுக்கு இடையில் மட்டுமே பரவுவது குறிப்பிடத்தக்கது

    ×