என் மலர்tooltip icon

    உலகம்

    • இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல்.
    • இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்.

    மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும்.

    சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் "இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. இன்னும் 3 நாட்களில் சர்வதேச அகிம்சை தினம் வரும் நிலையில், அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்" எனத் தெரிவித்துள்ளது. 

    • டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
    • அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

    இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

    டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

    இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் தாக்குதல் வரம்பிற்குள் வரும்.

    முன்னதாக நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்குவதை டிரம்ப் நிராகரித்திருந்தாலும், இப்போது அவர் அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தின் நிலையை மாற்றாது என்று கூறினார். 

    • வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் போது கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அலுவலகத்தை தாக்கியது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நேதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் இருந்தபடி கத்தார் பிரதமர் ஜாசிம் அல் தானியை தொலைபேசியில் அழைத்து நேதன்யாகு மன்னிப்பு கேட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    மேலும் வருங்காலங்களில் கத்தார் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளது. இந்த போன் காலில் டிரம்ப்பும் உடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

     இந்த மாதம் 9 ஆம் தேதி, தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கத்தார் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.  

    • வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.

    காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்புக்குப் பிறகு, காசா போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பான 20 அம்சத் திட்டம் குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

    அவர் கூறியதாவது, காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு நன்றி.

    ஹமாஸ் இந்த அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், அந்த அமைப்பின் அச்சுறுத்தலை அழித்து வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும்.

    காசா போரில் அமைதியைப் ஏற்படுத்துவதில் வாஷிங்டன் மிக மிக அருகில் வந்துவிட்டது. அனைவரும் ஒரு சிறப்பான ஒப்பந்தத்திற்காக இணைந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    20 அம்சத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

    ஒப்பந்தம் ஏற்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும், மேலும் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டவுடன் இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து பல கட்டங்களாக படிப்பிடியாக வெளியேரும்.

    மேலும் அங்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்காலிக சர்வதேச படை நிலைநிறுத்தப்படும்.

    டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.

    ஹமாஸ் போராளிகள் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

    பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள், அதற்குப் பதிலாக காசாவை மீட்ருவாக்கம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 

    முன்னதாக, நேதன்யாகு ஐ.நா.வில் பேசியபோது, ஹமாஸுக்கு எதிராக தொடங்கிய வேலையை முடிப்போம் என்று அடித்துகூறினார். மேலும், பாலஸ்தீனம் என்ற ஒரு தேசம் கிடையாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

    • கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டார்.
    • இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பெற்றார்.

    இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

    அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி இன்று (செப்டம்பர் 29) இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச்சூடு, கொலைகள் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல், அச்சத்தை பரப்புதல், வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தினரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பினால் இனி அந்நாட்டில் பிஷ்னோய் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நிதிகளை முடக்கவும் கனடா அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

    முன்னதாக, கனடாவின் சர்ரேயில் உள்ள பாலிவுட் பிரபலம் கபில் ஷர்மாவின் கஃபே மீது இரண்டு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கும்பலின் தலைவன் லாரான்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் இருந்தபடி தனது கும்பலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கலைத் தெரிவித்துள்ளது.

    செப்டம்பர் 27 அன்று (சனிக்கிழமை) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அன்று பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து பேசினார்.

    அவர் கூறியதாவது, "உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்கனவே தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சீன நாட்டவர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக, இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸூ ஃபெய்போங் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • எந்த வகையில் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிக்கலாம் என டிரம்ப் ஆலோசித்து வருகிறது.
    • சினிமாவைத் தொடர்ந்து பர்னிச்சர் பொருட்களுக்கும் கணிசமான வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.

    உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதுடன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன. அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதால் செய்வதால், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளில் சந்தைப்படுத்துவது கடினமாகி வருகிறது. இதனால் பரஸ்பர வரி விதிப்புதான் கிரேட் அமெரிக்காவை உருவாக்க ஒரே வழி என திட்டவட்டாக நம்புகிறார்.

    இதனால் உலக நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார். சில நாடுகள் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்தன. சில நாடுகள் அடிபணியவில்லை. அடிபணியாத நாடுகளின் பொருட்கள் மீது விரி வதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அத்துடன் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பதால் தண்டனை வரியாக 25 சதவீதம் வரி விதித்தார்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்படம் எந்த மற்றும் அனைத்து சினிமாக்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பர்னிச்சர்களுக்கு கணிசமான வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    டிஜிட்டல், வெப் சீரிஸ் போன்றவற்றால் அமெரிக்காவின் சினிமாத்துறை கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

    2023 மற்றும் 2024-ல் சினிமாத்துறையினர் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. 2023-ல் ஏறத்தாழ 5 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.

    • 70 ஆண்டுகளுகளாக எங்களது மக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படைய உரிமைகளுக்காக போராட்டம்.
    • உரிமைகளை வழங்குங்கள் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுங்கள்.

    பாகிஸ்தான் அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் வீதியில் திரண்டு பேராட்டம் நடத்தினர். அவாமி ஆக்ஷன் கமிட்டி (AAC) shutter-down and wheel-jam என்ற தலைப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் காலவரையற்ற போராட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, நேற்றிரவு முதல் இன்டர்நெட்டை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் நிர்வாகத்தில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பொருளாதார புறக்கணிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி ஏசிசி போராட்டத்தில் குதித்துள்ளது.

    இந்த அமைப்பு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக 38 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட POK சட்டமன்றத்தில் 12 சட்டமன்ற இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும்.

    மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின் கட்டணங்கள் மற்றும் பாகிஸ்தான் வாக்குறுதியளித்த நீண்ட காலமாக தாமதமான சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் அடங்கும்.

    ஏசிசி-யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சவுகாத் நவாஸ் மிர் "எங்களுடைய பிரசாரம் எந்தவொரு அமைப்புக்கும் எதிரானது அல்ல. 70 ஆண்டுகளுகளாக எங்களது மக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படைய உரிமைகளுக்காக. போதும். உரிமைகளை வழங்குங்கள் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • போதைக்கும்பல் கடத்திச் சென்று சித்ரவதை செய்துள்ளது.
    • அவர்களை கொலை செய்து, இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளது.

    அர்ஜென்டினாவில் 3 பெண்களை சித்ரவதை செய்து கொலை செய்ய போதைக்கும்பல்: நடவடிக்கை எடுக்கக்கோரி வெடித்தது பேராட்டம்/ Outrage in Argentina after 3 women tortured, killed on Instagram live stream by drug gang

    கடந்த 19-ந்தேதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா குட்டிரெஸ் (15) ஆகிய 3 இளம்பெண்களை பியூனஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான புளோரன்சியோ வரேலாவில் உள்ள வீட்டிற்கு ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றது.

    அங்கு அவர்கள் மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இதனை வீடியோ எடுத்து பெரு நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பினான்.

    போதைப் பொருட்களை திருடினால் இதுதான் கதி என மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் அவன் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு 3 பெண்களின் உடல்களும் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 3 ஆண்கள், 2 பெண்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான போதைப் பொருள் கும்பலின் தலைவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு கொலையாளி களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்.

    படுகொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலின அடிப்படையிலான வன்முறையை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முன்னாள் வேளாண் மந்திரி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார மந்திரி டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

    மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • புவலாய் புயலால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகினர்.
    • புயல் தாக்குதலால் பிலிப்பைன்சில் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டன.

    குவாங் டிரை:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், புவலாய் புயலால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர்.

    இந்தப் புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ளது. அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
    • அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர்.

    அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்தார்.

    எச்-1பி விசா பெறுபவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதனால் இக்கட்டண உயர்வால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்த விசா விதிகளை அமெரிக்கா கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்தது.

    அறிவியல், தொழில்நுட் பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் உலக அளவில் உள்ள சிறந்த ஊழியர்களை ஈர்க்கும் நோக்கில் கே விசாவை அறிமுகம் செய்துள்ளது. இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இந்த நிலையில் வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்து உள்ளார்.

    அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் திறமையானவர்கள். அவர்களுக்கு கனடாவில் ஒரு வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்வோம்.

    விரைவில் இது குறித்து ஒரு விசா சலுகையை வழங்குவோம். அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். மேலும் அவர்கள் கனடாவில் வேலைக்கு வர தயாராக உள்ளனர்.

    கனடா அரசாங்கம் இந்த வகையான திறமைகளை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து தெளிவான சலுகை விரைவில் இருக்கும்" என்று கூறினார்.

    கனடா பிரதமர் கார்னி அறிவிப்பின்படி விசா சலுகை அளிக்கப்பட்டால் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக இருக்கும்.

    ஆயிரக்கணக்கான உயர் திறமையான இந்திய நிபுணர்களுக்கு ஒரு தெளிவான மாற்று இடமாக கனடா இருக்கும்.  

    ×