என் மலர்
நீங்கள் தேடியது "terrorist group"
- கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டார்.
- இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பெற்றார்.
இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி இன்று (செப்டம்பர் 29) இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச்சூடு, கொலைகள் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல், அச்சத்தை பரப்புதல், வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தினரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் இனி அந்நாட்டில் பிஷ்னோய் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நிதிகளை முடக்கவும் கனடா அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது.
முன்னதாக, கனடாவின் சர்ரேயில் உள்ள பாலிவுட் பிரபலம் கபில் ஷர்மாவின் கஃபே மீது இரண்டு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கும்பலின் தலைவன் லாரான்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் இருந்தபடி தனது கும்பலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.
அந்த வாலிபரின் பெயர் இஷ்பக்வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ- தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 6 மாதத்தில் மட்டும் பயங்கரவாத இயக்கத்தில் 115 காஷ்மீர் இளைஞர்கள் இணைந்து உள்ளனர். சோபியாலி, புலவாமா, அஹந்திபோரா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதில் 91 பேர் ஹிஸ்புல்-மு ஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ- தொய்பாவில் இணைந்துள்ளனர். மீதியுள்ளவர்கள் அல்கொய்தா ஆதரவு அமைப்பான அன்சார் சஸ்வத்-ஹிந்த் மற்றும் காஷ்மீர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தனர்.
கடந்த ஆண்டில் 126 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைய இருந்தனர். தற்போது 6 மாதத்தில் 115 பேர் சேர்ந்துள்ளது பாதுகாப்பு படையினை கவலை அடைய செய்துள்ளது. #Kashmiriyouth






