என் மலர்
உலகம்

லண்டனில் உள்ள காந்தி சிலை சேதம்: இந்தியா கடும் கண்டனம்
- இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல்.
- இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும்.
சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் "இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. இன்னும் 3 நாட்களில் சர்வதேச அகிம்சை தினம் வரும் நிலையில், அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்" எனத் தெரிவித்துள்ளது.
Next Story






