என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
    • மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும்.

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூரில் நேற்று இரவு நடந்த சம்பவம், மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.

    அந்தக் கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.

    அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, இந்த கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுத்த பிறகு, அதைப்பற்றி விவரமாக பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்சின் உண்மையான பலம்.
    • தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

    அவர் இன்று 126-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழா ஆகும். காந்தி எப்போதும் சுதேசியை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தினார். அவற்றில் காதி முதன்மையானது. துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு காதியின் வசீகரம் மங்கிக் கொண்டிருந்தது.

    ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் காதி மீதான நாட்டு மக்களின்ஈர்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் காதி விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2-ந்தேதி காதி பொருட்களை வாங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    காதியைப் போலவே, நமது கைத்தறி மற்றும் கை வினைத் துறையும் குறிப்பி டத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது. தமிழ் நாட்டை சேர்ந்த அசோக் ஜெகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோர் தங்கள் நிறுவன வேலைகளை விட்டுவிட்டு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

    அவர்கள் புல் மற்றும் வாழை நார்களிலிருந்து யோகா பாய்களை உருவாக்கினர். மூலிகை சாயங்களால் ஆடைகளுக்கு சாயம் பூசினர்.மேலும் 200 குடும்பங்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்கினர்.

    சத் பூஜையை யுனெஸ்கோ வின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இந்திய அரசு பாடுபடுகிறது. சத் பூஜை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்படும்போது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் அதன் மகத்துவத்தையும் தெய்வீ கத்தையும் அனுபவிக்க முடியும்.

    இந்த விஜயதசமி மற்றொரு காரணத்திற்காகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாள் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்ட 100 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த நூற்றாண்டு பயணம் அற்புதமானது, முன்னோடியில்லாதது மற்றும் ஊக்கம ளிக்கிறது.

    தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்சின் உண்மையான பலம். ஆர்.எஸ்.எஸ் நூறு ஆண்டுகளாக அயராது மற்றும் தடையின்றி தேசத்திற்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளது.

    இதனால்தான் நாட்டில் எங்காவது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் முதலில் அங்கு செல்கிறார்கள்.

    தேசம் முதலில் என்ற இந்த உணர்வு எப்போதும் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும் முதன்மையானது.

    தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வரும் நாட்களில், பண்டி கைகளும் கொண்டாட்டங்களும் தொடர்ச்சியாக வர உள்ளன. ஒவ்வொரு பண்டிகைக்கும் நிறைய பொருட் களை வாங்குகிறோம்.

    இந்த முறை ஜி.எஸ்.டி சீர் திருத்தங்களுடன் பொருட்களை வாங்க உள்ளீர்கள். இந்த பண்டிகையை உள்நாட்டு தயாரிப்புகளுடன் மட்டுமே கொண்டாட நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  

    • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

    கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

    முதற்கட்டமாக 39 பேரின் குடும்பங்களுக்கும் மொத்தமாக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
    • எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதி உதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதன் அடிப்படையில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளனர்.

    • விஜயை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
    • தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.

    கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்தனர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.

    இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தினர் உயர்நீதிமன்றத்தை நாடியதை விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நடிகர் விஜய் அவர்களை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

    எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட தலைவர்கள் கரூரை நோக்கி பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால்,நேற்று கரூரிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறாமல் அவசரம் அவசரமாக எஸ்கேப்பாகி சென்னை வந்து விட்டார்.

    இதுவரை தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.

    இந்த சூழலில், சிபிஐ விசாரிக்க வேண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக. இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை.

    அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்.

    இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி, நீதிமன்றத்தை நாடுவது ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில் தானா?" என்று தெரிவித்துள்ளார்.

    • இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
    • போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியானதற்கு அரசு உரிய பதில் கூற வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், குறுகலான பாதை, நெரிசல் மிகுந்த பாதை என நான் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.

    இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?

    போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.

    பெரிய மைதானம் போன்ற இடத்தில் தான் விஜய் பிரசாரத்திற்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும். இது யாருடைய தவறு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

    • முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது
    • அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.

    கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார். 

    • ஆகாஷ் (வயது 24) என்பவரும், கோகுலஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது.
    • அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.

    கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரசார கூட்டத்திற்கு சென்ற திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 24) என்பவரும், கோகுலஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.

    திருமண நிச்சயம் முடிந்த ஆகாஷ், கோகுலஸ்ரீ ஜோடி நேற்று கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷ் தாய் கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.

    • பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
    • பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது.

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தாரையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * திருச்சியில் என்னுடைய நடைபயணத்திலும் மின் தடை ஏற்பட்டது.

    * கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

    * பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

    * பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது. நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா?

    * பொதுமக்களும், த.வெ.க.வும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்றார். 

    • இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
    • மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த கவின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

    • ஹேமலதாவுக்கு சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
    • ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.

    கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி இவரது மனைவி ஹேமலதா (வயது 30). அவர்களின் குழந்தைகள் சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4). ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.

    பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஹேமலதா, குழந்தைகள் சாய்லெட்சனா,சாய்ஜீவா ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

    • துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது.
    • சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

    கரூர்:

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தது பெருந்துயரம்.

    * உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை.

    * கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது.

    * நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.

    * எல்லோரும் சேர்ந்த இந்த தவறை செய்துவிட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * விஜயின் கடந்த கூட்டங்களில் பாதுகாப்பு கொடுக்க தான் செய்தனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு என பொதுவாக சொல்ல கூடாது.

    * பொதுக்கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.

    * துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது. சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

    * அரசியல் கட்சி கூட்டங்களில் குடிநீரை அரசு வழங்க முடியாது.

    * சந்தேகங்கள் இருப்பின் அவை விசாரணையில் தெளிவாகும் என்றார். 

    ×