என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம்: யாரையும் குறை சொல்லி பயனில்லை- சீமான்
    X

    கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம்: யாரையும் குறை சொல்லி பயனில்லை- சீமான்

    • துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது.
    • சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

    கரூர்:

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தது பெருந்துயரம்.

    * உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை.

    * கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது.

    * நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.

    * எல்லோரும் சேர்ந்த இந்த தவறை செய்துவிட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * விஜயின் கடந்த கூட்டங்களில் பாதுகாப்பு கொடுக்க தான் செய்தனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு என பொதுவாக சொல்ல கூடாது.

    * பொதுக்கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.

    * துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது. சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

    * அரசியல் கட்சி கூட்டங்களில் குடிநீரை அரசு வழங்க முடியாது.

    * சந்தேகங்கள் இருப்பின் அவை விசாரணையில் தெளிவாகும் என்றார்.

    Next Story
    ×