என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர் எல்.முருகன்"

    • மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
    • மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும்.

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூரில் நேற்று இரவு நடந்த சம்பவம், மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.

    அந்தக் கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.

    அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, இந்த கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுத்த பிறகு, அதைப்பற்றி விவரமாக பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் எல்.முருகன் இன்று மதியம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருகிறார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    சத்தியமங்கலம்:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து இன்று மதியம் 3.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருகிறார்.

    அங்கிருந்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் எல்.முருகன் பண்ணாரி அம்மனை தரிசித்து விட்டு 4 மணி அளவில் சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கில் நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    ×