என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் கூட்ட நெரிசல்: விஜய் பரப்புரையில் சிக்கி தாய், 2 குழந்தைகள் பலியான சோகம்
    X

    கரூர் கூட்ட நெரிசல்: விஜய் பரப்புரையில் சிக்கி தாய், 2 குழந்தைகள் பலியான சோகம்

    • ஹேமலதாவுக்கு சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
    • ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.

    கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி இவரது மனைவி ஹேமலதா (வயது 30). அவர்களின் குழந்தைகள் சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4). ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.

    பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஹேமலதா, குழந்தைகள் சாய்லெட்சனா,சாய்ஜீவா ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

    Next Story
    ×