என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
- அரசு எங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
சென்னை:
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சருடன், அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இது சம்பந்தமாக 4 வார அவகாசம் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. போராட்டங்களை தள்ளிவைக்கவும் கேட்கப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பேசி, இனிமேலும் கால அவகாசத்தை தர இயலாது என்ற அடிப்படையில், நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக காலை 11 மணிக்கு நடைபெறும். போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு முன்னதாக, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. நிராகரித்து இருந்தால் போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருப்போம். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மீண்டும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவெடுப்போம். அடுத்தகட்டமாக அரசுடனான பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம். பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தான் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
- வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும்.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தான் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்திருந்தது.
இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் வங்கதேசத்தை நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் இந்தியாவும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 5-வது வங்கதேசத்தை எதிர்கொள்ளும். இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வெற்றி பெறும் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற திருப்தியோடு தொடரில் இருந்து வெளியேறும்.
இந்தியா தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 6-வது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.
- ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் விளாசினார்.
- ஐசிசி தொடரில் ரச்சின் ரவீந்திராவின் 4-வது சதம் இதுவாகும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷான்டோ உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 14 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஷான்டோ சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதற்கிடையே தவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 2 ரன்னிலும், மெஹ்முதுல்லா 4 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் 118 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான்டோ உடன் ஜாகர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஷோடி தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேசம் 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் ஜாகர் அலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷாத் ஹொசைன் 25 பந்தில் 26 ரன்கள் அடித்தார். ஜாகர அலி இறுதி வரை போராடி 55 பந்தில் 45 ரன்கள் அடிக்க, வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஓ'ரூர்கே 10 ஓவரில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வில் யங் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இவர் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் அவுட் ஆனார்.
3-வது விக்கெட்டுக்கு டேவன் கான்வே உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 72 ரன்னாக இருக்கும்போது கான்வே 45 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்ச்சி நிலைத்து நின்று விளையாடியது. ரச்சின் ரவீந்திரா 50 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பிறகு ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.
இதனால் 95 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் விளாசினார். ஐசிசி தொடரில் இவரின் 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 105 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 38.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கிளென் பிலிப்ஸ் களம் இறங்கினார்.
மறுமுனையில் விளையாடிய டாம் லாதம் 71 பந்தில் 3 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். டாம் லாதம் 55 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார். அப்போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.
6-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ் உடன் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.
- இயக்குநர் அறிவழகன் இயக்கிய 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார்.
- தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஈரம்.' இந்தப் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதி மக்கள் மனதை வென்றார். இயக்குநர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.
அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' உள்ளிட்ட திரைப்படங்களை அறிவழகன் இயக்கினார். 'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி - அறிவழகன் கூட்டணி தற்பொழுது மீண்டும் இணைந்துள்ளது.
அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் இயக்கிய 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் கூறீயதாவது " டெக்னிக்கலாகவும், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் தரமாக வந்துள்ளது. ஹாரர் திரைப்படமாக இருந்தாலும் படத்தின் எமோஷனல் கனெக்ட் மிக நன்றாக நொர்க் அவுட் ஆகியுள்ளது. கண்டிப்பாக இப்படத்தை திரையரங்கிள் காண வேண்டும்.
நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களுள் சப்தம் திரைப்படம் ஒன்றாகும்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
- வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்
நடிகை விஜயலட்சுமி அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன்படி, வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் உலகம் முழுவதும் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் தனுஷ் பாடிய புள்ள பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக அதிஷி குற்றச்சாட்டு.
- சிஏஜி அறிக்கை ஊழலை வெளிப்படுத்தும் என்பதால் மக்களை திசைதிருப்பு முயற்சியாக வதந்தி பரப்புவதாக பாஜக குற்றச்சாட்டு.
டெல்லி தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, பாஜக எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதன்பின் இன்று முதன்முறையாக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.
அப்போது "முதல்வர் ரேகா குப்தா அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டுள்ளது. தலித் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி தலைமையில் சட்டமன்றம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது. படங்கள் நீக்கப்பட்டது தலித்திற்கு எதிரான நிலையை காட்டுகிறது" என அதிஷி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக கூறுவது வதந்தி. சிஏஜி அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும்போது அதன் ஊழலை வெளிப்படுத்தும் என்பதால், அதில் இருந்து மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சி பரப்பப்படும் வதந்தி.
முதல்வர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பகத் சிங், ஜனாதிபதி, பிரதமர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்ற மந்திரிகள் அலுவலகத்திலும் இதுபோன்று வைக்கப்பட்டுள்ளன என பாஜக தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா "அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் அதிஷி வதந்தை பரப்பி வருகின்றனர். இது அற்ப அரசியலை எடுத்துக்காட்டுகிறது" என்றார்.
- தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் ஸ்ரீனாத்.
- சந்தானம் நடித்து பெரும் வெற்றியை பெற்ற வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை இயக்கினார்.
உன்னாலே உன்னாலே, உத்தமபுத்திரன் மற்றும் ரௌதிரம் ஆகிய தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் ஸ்ரீனாத். இவர் 2009 ஆம் ஆண்டு டேனியல் பாலாஜி நடிப்பில் வெளியான முத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.
அதைத்தொடர்ந்து சந்தானம் நடித்து பெரும் வெற்றியை பெற்ற வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை இயக்கினார். தற்பொழுது அவரது 3- வது திரைப்படமான லெக் பீஸ் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் சென்னையில் 30 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை மணிகண்டனின் ஹீரோ சினிமாஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு.
- ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை.
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கடிதம் அளித்துள்ளனர்.
அதில், தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிலுவையில் இருக்கின்றன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இனியும் பொறுமை காக்க சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
- அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளது.
- அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்களை அவை வைக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
டெல்லி முதலமைச்சர் இருக்கைக்கு அருகே இருந்த அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்களை பாஜக அரசு நீக்கம் செய்துள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாஜக டெல்லி தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பாபா பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளது.
நரேந்திர மோடி பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரை விட பெரியவர் என்று அம்பேத்கரின் புகைப்படம் அகற்றிவிட்டு நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்பட வேண்டும் என்றும் பாஜக நம்புகிறதா?

இதற்கு பாஜக பதிலளிக்க வேண்டும். மேலும் அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்களை அவை வைக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.
நாடே கோபமாக உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன.
அம்பேத்கரின் புகைப்படம் ஏன் அகற்றப்பட்டது, நரேந்திர மோடியின் புகைப்படம் ஏன் வைக்கப்பட்டது என்று மக்கள் கேட்கிறார்கள்?"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் உள்ளார்.
- பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி இருந்து வருகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங், பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி, பந்து வீச்சு ஆலோசகராக எரிக் சைமன்ஸ் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் துணை பந்து வீச்சு பயிற்சியாளரான செயல்படுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஸ்ரீராம் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பயிற்சியாளரான இருந்துள்ளார். சென்னை அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷ்ரேயாஸ் கோபால், நூர் அகமது, தீப் ஹூடா, ரச்சீன் ரவீந்திரா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
சி.எஸ்.கே. அணியில் இருந்து வெளியேறிய வெயின் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆலோசகராக இணைந்துள்ளார். இதனால் பிராவோவிற்குப் பதிலாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் சேர்க்கப்பட்டுள்ளார்.
2016 முதல் 2022 வரை ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக வங்கதேச அணியின் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் லக்னோ அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் 5-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தவறவிட்டது. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்தது.
- யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான Awsum Kissa பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான கதவை திறந்தாயே பாடலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை இயக்குனர் பா. ரஞ்சித் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இப்பாடல் ஒர் மெலடி காதல் பாடலாக அமைந்துள்ளது.
இப்பாடலை மதன் கார்கி வரிகளில் யுவன் மற்றும் சிந்துரி விஷால் இணைந்து பாடியுள்ளனர்.
ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






